Wednesday, April 14, 2010

டிப்ஸ்

  1. உளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா தோசை செய்வது போல் செய்யலாம்.
     
  2. தக்காளி சட்னி செய்யும்போது கொஞ்சம் எள்ளையும் வறுத்து கலந்து அரைத்தால் நன்கு ருசியாக இருக்கும்.
     
  3. பாசிபருப்பு பாயசம் செய்யும் போது வெல்லத்தை கெட்டி பாகாக காய்த்தபின் செய்தால் பாயசம் ருசியாக இருக்கும். மறுநாள் இருந்தாலும் ஊசி போகாது.
     
  4. அடைக்கு ஊற வைக்கும்போது பயறுகளை ஊற வைத்து அரைத்தால் சத்து அதிகமாக இருக்கும். கொஞ்சம் கொள்ளையும் சேர்த்து கொள்ளவும்.
     
  5. ஆரஞ்சு பழத்தோலை பொடியாக நறுக்கி, அதனுடன் பச்சை மிளகாயும் வதக்கி வத்தல் குழம்பில் கலந்தால் வாசனையாக இருக்கும்.
     
  6. பூரிக்கு மாவு பிசையும்போது அதில் பிரெட்டையும் போட்டு பிசைந்து பூரி செய்தால் உப்பியும், நன்கு மொறுமொறுப்பாகவும் வரும்.
     
  7. முழம்பில் காரம் அதிகம் ஆகி விட்டால் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்தால் சரியாகி விடும். தக்காளியை பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.
     
  8. பாகற்காய் பொரியல் செய்யும் போது கொஞ்சம் தயிர் ஊற்றி ஊற விட்டு கொஞ்சம் நேரம் கழித்து வதக்கினால் கசப்பு அதிகமாக இருக்காது.

No comments:

Post a Comment