Showing posts with label சட்னி. Show all posts
Showing posts with label சட்னி. Show all posts

Monday, November 5, 2007

இஞ்சி சட்னி

தேவையானவை:

இஞ்சி - 100 கிராம்,
கடலைபருப்பு -1 ஸ்பூன்
ஊளுத்தம்பருப்பு - 1 ஸபூன்,
புளி - கொஞ்சம்
வர மிளகாய் - 8
தேங்காய் துறுவல் - 2 ஸ்பூன்
தாளிக்க கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி நார் இல்லாமல் இருக்க வேண்டும், அப்போதுதான் சட்னி சுவையாக இருக்கும். இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக ந்றுக்கி, வாணலியை காய வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி இஞ்சியை வதக்கவும். அதை எடுத்துவிட்டு உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம், தேங்காய், புளி, வரமிளகாய் இவற்றை வறுத்து ஆறவைத்து அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சுவைக்கு (தேவைப்பட்டால்) கொஞ்சம் வெல்லம் சேர்ககலாம். இஞ்சி சட்னி சாப்பிடுவதால் பித்தம் குறையும. நன்கு பசி எடுக்கும்.

தக்காளி சட்னி

தெவையானவை:

தக்காளி - 10
சாம்பார் பொடி-3ஸ்பூன்
உப்பு
புளி - கொஞ்சம்

செய்முறை:

தக்காளியை நீர் சுண்டும் வரை நன்கு வதக்கி,அதனுடன் புளி சேர்த்து சாம்பார் பொடி, உப்பும் சேர்த்து ஆறியபின் கெட்டியாக அரைக்கவும். சிறிய வாணலியை எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். விரைவில் செய்ய கூடிய சட்னி இது.

எள் சட்னி

தேவையானவை:

கறுப்பு எள் - 1 கப்
கறுப்பு உளுந்து - 3 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 8
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
தேங்காய் துருவல்- 1ஸ்பூன்
புளி - கொஞ்சம்
உப்பு தேவையானவை
எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை:

எள்ளை சுத்தம் செய்து வெறும் வாணலியில் தீய விடாமல் வறுத்து கொள்ளவும். பட, படவென்று. எண்ணெய் காய வைத்து உளுந்து, மிளகாய் வற்றல், பெருங்காயம், புளி, தேங்காய், உப்பு போட்டு வறுத்து ஆறியதும், எள் சேர்த்து மிக்ஸியில் கர, கரவென்று அரைக்க்கவும். எள் சட்னி தயார்.

பாம்பே சட்னி

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் பெரியதாக - 2
பச்சை மிளகாய் - 7,
இஞ்சி பெரிய துண்டு
தக்காளி தேவையானால் - 2.
கறிவேப்பிலை,மல்லி இலை கொஞ்சம்,
உப்பு தேவையான அளவு

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கடுகு, சீரகம் தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதங்கியபின் இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளியையும் பொடியாக நறுக்கி போட்டு, வதங்கியபின் 2 ஸ்பூன் கடலை மாவில், 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு கரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலை,மல்லி போடவும். இந்த சட்னி தண்ணியாக இருந்தால் இட்லி, தோசைக்கும், கெட்டியாக இருந்தால் பூரி, சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம். இதை 5 நிமிடத்தில் செய்து விடலாம்.