Monday, September 7, 2009

பருப்பு உருண்டை குழம்பு

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் - 1
துவரம்பருப்பு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2
வர மிளகாய் - 10
சோம்பு - 1 ஸ்பூன்
தக்காளி - 4
உப்பு - தேவைக்கு

அரைக்க : 
வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன் நிறமாக வதக்கி அதில் பாதி எடுத்து வைத்து மீதியில் தக்காளியை + 2 பல் பூண்டு சேர்த்து வதங்கிய பின் மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

செய்முறை:
துவரம்பருப்பை ஊறவைத்து மிளகாய், சோம்பு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். பீட்ரூட்டை துருவி, எடுத்து வைத்து வெங்காயத்தையும் சேர்த்து எண்ணெய் ஊற்றி வதக்கவும். இதனுடன் பருப்பு விழுதை போட்டு கொஞ்ச நேரம் வதக்கி ஆறிய பின் உருண்டைகளாக பிடித்து வைக்கவும். அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு சுண்டி பச்சை வாசனை போன பின் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டவும். பிடித்து வைத்து இருக்கும் உருண்டைகளை சேர்த்து மேலே மிதந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும். உருண்டை மேலே மிதந்து வந்தால் வெந்து விட்டது.