Showing posts with label கூழ். Show all posts
Showing posts with label கூழ். Show all posts

Tuesday, April 29, 2008

கம்பு கூழ்

தேவையான பொருள்கள்:

சுத்தம் செய்த கம்பு- 1/4 கிலோ
தண்ணீர்- 2 டம்ளர்
மோர்- 2 டம்ளர்
சிறிய வெங்காயம்-10
உப்பு- கொஞ்சம்
மோர் மிளகாய்- வறுத்தது=2[அ]4

செய்முறை:

சுத்தம் செய்த கம்பை நன்கு கழுவி வடிகட்டி துணியில் போட்டு நன்கு காய விட்டு மிக்ஸியில் மாவாக அரைத்து கொள்ளவும். கெட்டியான பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் கம்பு மாவை போட்டு நன்கு கிளறவும். [பச்சை தண்ணீரில் மாவை கலந்தால் கட்டி தட்டாமல் வரும்.] அடுப்பை சிம்மில் எரியவிடவும். 5 நிமிடத்தில் வெந்து விடும். தண்ணீரில் கையை தொட்டு வெந்த மாவை தொட்டு பார்த்தால் கையில் ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம். அது கெட்டியான களியாக இருக்கும்.நன்கு ஆறிய பின்போ[அ] அடுத்த நாளோ அதில் சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிபோட்டு மோர்மிளகாயை கலந்து உப்பு, மோரை நன்கு தண்ணியாக கடைந்து அதில் ஊற்றி சாப்பிடலாம். உடலுக்கு வெயில் காலத்தில் குளிர்ச்சியை தரும் இந்த கம்பு கூழ்.

Monday, November 5, 2007

மோர்க் கூழ்

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
மோர் - 4 கப்
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலைபருப்பு - 1/2 ஸ்பூன்
உளுததம்பருப்பு - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
பச்சைமிளகாய் [அ] வரமிளகாய் - 5
உப்பு தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு போடவும். சிவந்தபின், பெருங்காயம் போட வேண்டும். மோரில் அரிசி மாவை கலக்கவும். மாவு தோசை மாவு பதம் இருக்க வேண்டும். இந்த கலவையை அடுப்பில் இருக்கும் தாளிதம் செய்ததில் ஊற்றி கட்டி விழாமல் நன்கு கிளற வேண்டும். தேவைப்பட்டால் நெய், [அ] தேங்காய் கொஞ்சம் ஊற்றி நன்கு கலந்து வெந்தபின் இறக்கி,மல்லி இலை தூவி சாப்பிடலாம்.