Showing posts with label பொடி. Show all posts
Showing posts with label பொடி. Show all posts

Saturday, May 10, 2008

மிளகு பொடி

தேவையான பொருட்கள்:

மிளகு- 50 கிராம்
சீரகம்- 50 கிராம்
தனியா- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- 20 இலைகள்
பெருங்காயம்- சிறிய துண்டு
கல் உப்பு- 3 ஸ்பூன்.

செய்முரை:

பெருங்காயத்தை கல்லில் தட்டினால் தூளாகிவிடும். அதை வாணலியில் போட்டு பொரித்து, அதனுடன் எல்லாவற்றையும் கலந்து வெயிலில் காயவிட்டு மிக்ஸியில் பவுடராக பொடி செய்து கொள்ளவும். சூடான சாதத்தில் கொஞ்சம் நெய்[அ] அவரவர்க்கு பிடித்த எண்ணெய் ஊற்றி இந்த பொடியை போட்டு சாப்பிடவும். தொண்டை சம்பந்தபட்ட கோளாறுகள் வராது. சளி, கபம் கட்டாது.

வேப்பம்பூ பொடி

தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ- 1 கப்
கடலைபருப்பு- 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்
வரமிளகாய்- 10
பெருங்காயம்- சிறிய துண்டு
உப்பு- 1 ஸ்பூன். 

செய்முரை:

எல்லா பொருள்களையும் தனிதனியாக வறுத்து ஆறியபின் மிக்ஸியில் பொடி செய்யவும். உடலுக்கு நல்லது. [ தேவையெனில் புளிப்புக்கு 1/4 ஸ்பூன் சிட்ரிக் ஆசிட் போட்டு பொடி செய்து கொள்ளவும்]

வேப்பிலைக் கட்டி

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை இலை-20
நார்த்தம் இலை-20
வரமிளகாய்-10
புளி- சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம்- சிறியதுண்டு
சிறிது உப்பு.

செய்முரை:

புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். சிறிது எண்ணெயில் பெருங்காயத்தை பொரித்து கொண்டு, மிளகாய், இலைகளை நன்கு வெயிலில் காய விட்டு மிக்ஸியில் பொடிசெய்து அதனுடன் புளி,பெருங்காயம் போட்டு கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி 2 நாட்கள் வெயிலில் காய வைத்து பாட்டிலில் போட்டு வைத்து வேண்டும் போது அந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் போட்டு சாப்பிடவும்.

சுக்கு பொடி

தேவையான பொருட்கள்:

சுக்கு- 10 கிராம்
பெருங்காயம் - சிறிய துண்டு
துவரம்பருப்பு - 100 கிராம்
கடலைபருப்பு - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 20 இலைகள்
கல் உப்பு - 2 ஸ்பூன். 

செய்முரை:

சுக்கு, பெருங்காயத்தை சிறியதாக தட்டி வைத்து கொண்டு, மற்ற பொருள்களையும் எண்ணெய் விடாமல் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்து கொண்டு ஆறியபின் பாட்டிலில் போட்டு வைக்கவும். சுக்கு பொடி வயிற்று கோளாறுகளுக்கு நல்லது. வாயு சேராது. சூடான சாதத்தில் சாப்பிடவும். புளிப்பு தேவை எனில் 1/4 ஸ்பூன் சிட்ரிக் ஆசிட்டை பொடி செய்யும் போது போட்டு அரைத்து கொள்ளவும்.

கொப்பரை பொடி

தேவையான பொருட்கள்:

நன்கு முற்றிய தேங்காய் - 1
உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்
வரமிளகாய்-10
கல் உப்பு- 2 ஸ்பூன்

செய்முரை:

தேங்காயை கேரட் துருவியில் துருவி கொண்டு, உளுந்துடன், பெருங்காயத்தையும் சேர்த்து, எண்ணெய் விடாமல் வறுத்து அதனுடன் தேங்காயை சேர்த்து வறுத்து கொண்டு 2 ஆர்க்கு கறிவேப்பிலை சேர்த்து வெயிலில் காயவிட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ளலாம்.

துவரம்பருப்பு பொடி

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு- 1- கப்
உளுத்தம்பருப்பு- 1ஸ்பூன்
கடலைபருப்பு- 1 ஸ்பூன்
வரமிளகாய்- 20
பெருங்காயம் - சிறிய துண்டு
கல் உப்பு- 3 ஸ்பூன்

செய்முரை:

பெருங்காயத்தை சிறியதாக உடைத்து கொண்டு, எல்லா பருப்புகளையும் வறுக்கும் சமயம் பெருங்காயத்தையும் போட்டால் பொரிந்து விடும். ஆறிய பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை இட்லிக்கு தொட்டு கொள்ளலாம். பொரியல் செய்யும் போது இந்த பொடியை கடைசியில் தூவி இறக்கலாம்.

Friday, May 9, 2008

டிப்ஸ்

எந்த பொடிகள் செய்தாலும் அதனுடன் கல் உப்பு சேர்த்து அரைத்தால் வண்டுகள், பூச்சிகள் வராது. பொடி செய்தவுடன் பேப்பரில் போட்டு ஆறியபின் பாட்டிலில் போட்டு வைக்கவும். சூட்டுடன் போட்டு வைத்தால் பொடிகள் சீக்கிரமே கெட்டு போய் வண்டு, பூச்சிகள் வரும். அதே போல் எந்த வகை மாவு பொருட்களையும் மிஷினில் அரைக்கும் போதும், பேப்பரில் போட்டு ஆறியபின் எடுத்து வைக்கவும்.

பொடி செய்ய வரமிளகாய் வறுக்கும் போது கடைசியில்தான் வறுக்க வேண்டும் முதலிலேயே மிளகாயை போட்டால் கறுகிவிடும். சிகப்பு கலர் வராது. மிளகாய் தூள் சேர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அடுப்பை அணைத்து விட்டு மிளகாய் தூள் சேர்க்கவேண்டும். வாணலியின் சூட்டுக்கே வறுபட்டு விடும் ஏனெனில் அது மிஷினில் அரைத்து இருப்பதால் [ஏற்கனவே வறுபட்டு இருக்கும்]

Monday, April 28, 2008

மோர் குழம்பு பொடி

தேவையானவை:

கொப்பரை தேங்காய் - 1
பச்சை மிளகாய்- 20
சீரகம் - 25கிராம்
இஞ்சி - 10கிராம்
உப்பு - 1/4 ஸ்பூன்

செய்முறை:

தேங்காயை துறுவி கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி கொண்டு, இதனுடன் சீரகத்தை சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடியாக செய்து கொள்ளவும். இதை ஃப்ரிஸரில் வைத்து தேவையான போது எடுத்து செய்யவும். தேவையான காய்கறிகள் போட்டு வெந்தபின் மோரில் இந்த பொடியை கலந்து உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கினால் மோர் குழம்பு தயார்.

தந்தூரி மசாலா பொடி

தேவையானவை:

புதிய மிளகாய் தூள் பொடி - 100 கிராம் (நன்கு சிகப்பாக இருக்கனும்)
தனியா பொடி- 50 கிராம்
சீரகபொடி-25 கிராம்
கரம் மசாலா- 25 கிராம்
கருப்பு உப்பு -[ இந்துப்பு] 10 கிராம்
அஜினமோட்டோ- 25 கிராம்
லைம் சால்ட்- 10 கிராம்
ஆரஞ்சு கலர் - 1/2 ஸ்பூன்

செய்முரை:

இந்த போருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொண்டு நன்கு கலந்த பின் உபயோகிக்கவும்.

காலிஃப்ளவர் கறி, உருளைகறி, பனீர் கறி[அ] மசாலா செய்யும் போது இந்த பொடியை போட்டு இறக்கினால் சுவை சூப்பராக இருக்கும். [உப்பு தனியாக இதற்கு சேர்த்து கொள்ளவும்.]

செட்டி நாடு மசாலா பொடி

தேவையான பொருள்கள்:

வர மிளகாய்- 1/4 கிலோ (நன்கு சிகப்பாக இருக்க வேண்டும்)
சீரகம்- 25 கிராம்
மிளகு-25கிராம்
சோம்பு-25 கிராம்
கல் உப்பு- 1 ஸ்பூன்

செய்முறை:

மேலே கூறி உள்ள பொருட்களை எல்லாம் நன்கு வெயிலில் காய வைத்து வறுக்காமல் மிக்ஸியில் நன்கு பவுடராக செய்து கொள்ள வேண்டும். சல்லடையில் சலித்து, (சலித்து செய்தால் நன்கு பவுடராக வரும். ஒரே மாதிரியாக இருக்கும்.) ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைக்கவும். மிஷினில் அரைத்தால் ஒரிஜினல் வாசனை வராது.

வறுவல் பொடி

தேவையான பொருள்கள்:

கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 50 கிராம்
சிகப்பு மிளகாய் - 50கிராம்
பட்டை-1 [சிறிய துண்டு]
லவங்கம்- 2 மட்டும் போதும்
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
கல் உப்பு - 1 ஸ்பூன்

செய்முரை:

மிளகாயை தவிர எல்லா பொருட்களையும் எண்ணெய் விடாமல் வறுத்து மிளகாயும் கலந்து நல்ல வெயிலில் காய வைத்து மிக்ஸியில் நன்கு பொடி செய்து கொள்ளவும். எந்த காய்கறிகளை வதக்கி பொறியல் செய்யும் போது கடைசியில் 1/2 ஸ்பூன் போட்டுவதக்கி இறக்கினால் சுவையாக இருக்கும். காய்களுக்கு உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

சாட் மசாலா பொடி

தேவையான பொருள்கள்:

இந்துப்பூ- 50கிராம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)

மேலே கூறிய கரம் மசாலா பவுடருடன் [50] மிக்ஸியில் போட்டு இரண்டையும் போட்டு பொடி செய்து நன்கு கலந்து கொள்ளவும். இதுதான் சாட் மசாலா.

கரம் மசாலா பொடி

தேவையான பொருள்கள்:

பட்டை- 50 கிராம்
லவங்கம்- 50 கிராம்
ஏலக்காய்- 5 கிராம்
சோம்பு-10 கிராம்
மல்லி-[தனியா] 100 கிராம்
கல் உப்பு- 1 ஸ்பூன்

செய்முறை:

மேலே கூறி உள்ள பொருள்களை எல்லாம் நன்கு வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடிசெய்து சலித்து பவுடராக இருக்கனும். அப்போதுதான் வாசனையாக இருக்கும். பிரியாணி செய்யும்போது காய்களை வதக்கியபின் இந்த பொடி 1/2 ஸ்பூன் போட்டு செய்யவும்.

பிரியாணி பொடி

தேவையான பொருள்கள்:

பட்டை- 10கிராம்
லவங்கம்-10கிராம்
கசகசா- 20-கிராம்
மிளகாய்-50கிராம்
கல் உப்பு- 1 ஸ்பூன்

செய்முறை:

மேலே கூறி உள்ள எல்லா பொருட்களையும் வெயிலில் நன்கு காய வைத்து மிக்ஸியில் பவுடராக அரைத்து கொண்டு பிரியாணி செய்யும்போது செய்யவும். கல் உப்பு போட்டு அரைப்பதால் வண்டு வராது.

Monday, January 28, 2008

பொடி மாஸ்

கடலைப்பருப்பு [ அ] பட்டாணிப்பருப்பு [அ] நமக்கு பிடித்தபருப்பை நன்கு ஊற வைத்து அதனுடன் வரமிளகாய்[அ] பச்சை மிளகாய் உப்பு, பெருங்காயதூள் சேர்த்து வடைக்கு அரைப்பது போல் கெட்டியாக அரைத்து இட்லி வேக வைப்பதுபோல் வேக வைத்து உதிர்த்து வைத்து கொண்டு எந்த காய்களாக இருந்தாலும் பொடியாக நறுக்கி வெந்தபின் கடைசியில் இந்த பருப்பு பொடிமாஸை போட்டு நன்கு கலந்து இறக்கினால் இதுதான் பொடிமாஸ்.

இதை தேங்காய் சேர்க்கவேண்டும் என்று விரும்பினால் பருப்பை அரைத்து கடைசியில் தேங்காயை துருவி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து கொள்ளலாம். ஆனால் பொடிமாஸில் வெறும் பருப்பை மட்டும் சேர்த்தால்தான் சுவையாக இருக்கும். கடைசியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் தாளித்தும் போடலாம். எந்த வகை கீரைகளிலும் செய்யலாம்.

Monday, January 21, 2008

ஊறுகாய் பொடி

தேவையான பொருள்கள்:

வெந்தயம்- 200 கிராம்
கடுகு- 100 கிராம்
மஞ்சள்தூள் - 50 கிராம்
பெருங்காயம் - கட்டி பெருங்காயமாக இருந்தால் ஊறுகாய் இன்னும் நன்கு
வாசனையாக இருக்கும்.

செய்முறை:

பெருங்காய கட்டியை வாங்கி சிறியதாக பிய்த்து வெயிலில் காய வைத்து வெறும் வாணலியில் போட்டு சிம்மில் எரியவிட்டு பொரிக்கவும். அதை மிக்ஸியில் பொடி செய்து வைத்து கொள்ளவும். புதிய மிளகாயை வாங்கி நல்ல வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடி செய்து வைத்து கொண்டால் ஊறுகாய் நல்ல சிகப்பு கலரில் இருக்கும். எந்த ஊறுகாய் செய்தாலும் இந்த பொடிகள் கைவசம் இருந்தால் சீக்கிரம் செய்ய வசதியாக இருக்கும்.

Wednesday, November 14, 2007

சீரகப் பொடி

தேவையானவை:

சீரகம் - 1 கப்
பெரிய எலுமிச்சை பழம் - 5
இஞ்சி - 50 கிராம்
மிளகு - 25 கிராம்
பனங்கற்கண்டு - 100 கிராம்
சிறிய கட்டி - பெருங்காயம்
உப்பு - தேவையானது

செய்முறை:

இஞ்சியை தோல் சீவி நன்கு சுத்தம் செய்து துறுவி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். எலுமிச்சைபழத்தை பிழிந்து சாறு எடுத்து இந்த சாறுடன் இஞ்சி சாறையும் கலந்து உப்பும்போட்டு மிளகு, சிரகத்தை ஊற வைக்கவும். இந்த இரு சாறுகளிலும் நன்கு முழ்கி ஊற வேண்டும். அடிக்கடி நன்குகலந்து, சாறுகளில் நன்றாக ஊறியபின் தினமும் எடுத்து நன்றாக வெயிலில் காய வைத்து சாறு இருக்கும் வரை இரவில் ஊறவைத்து காலையில் வெயிலில் காய வைக்கவேண்டும். வெயில் படுவதால் விட்டமின் C கிடைக்கும் தேவையானால் இதனுடன் 2 -ஸ்பூன் கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு எண்ணெய் விடாமல் வறுத்து, ஆறியபின் ஒன்றாக கலந்து பொடி செய்து கொண்டால் சீரகபொடி தயார். இந்த பொடியை சூடான சாதத்தில் பிசைந்து தேவையானால் நெய் ஊற்றி கொள்ளலாம்] சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். ஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிறு சம்பந்தபட்ட அனைத்து உபாதைகளுக்கும் இந்த பொடி நல்ல மருந்தாகும். இதே பொடியில் மிளகு, உப்பு, பெருங்காயம் சேர்க்கும் முன்பு, பனங்கற்கண்டு, 4 ஏலக்காய் போட்டு பொடி செய்து கலந்து கொள்ளலாம்.

இனிப்பு பிடித்தவர்கள் இதை சாப்பிடலாம். காரம் பிடித்தவரகள் அந்த பொடியை சாப்பிடலாம். இரண்டுமே நல்லா இருக்கும். பித்தம், ஏப்பம், தலைசுற்றல் போன்றவற்றையும் குணபடுத்தும் ஆற்றல் இந்த
பொடிக்கு உண்டு.

Monday, November 5, 2007

தனியா பொடி

தேவையான பொருட்கள்:

தனியா[ மல்லி விதை]- 1-கப்
உளுத்தம்பருப்பு- 2ஸ்பூன்,
கடலைபருப்பு- 2 ஸ்பூன்,
துவரம்பருப்பு-1/2 ஸ்பூன்,
மிளகாய்- 20,
மிளகு-1/2 ஸ்பூன்,
புளி- சிறிய எலுமிச்சை அளவு, சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்,
உப்பு தேவையான அளவு.

செய்முறை:

மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் எண்ணெய் விடாமல் தனிதனியாக பொன் கலரில் வறுத்து, கடைசியில் கல் உப்பையும் வறுத்து, புளியையும் சிறியதாக பிய்த்து வறுத்து கொள்ளவும். நன்கு ஆறியபின் கரகரவென்று பொடிசெய்து ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும்.

இந்த பொடியில் தனியாவை அதிகம் சேர்த்து பருப்பு வகைகளை மிகவும் கொஞ்சமாக போடனும். தனியா பித்தத்தை தணிக்கும். நன்கு பசி எடுக்கும். டூी செல்பவர்கள் இந்த பொடியில் நல்லெண்ணெய் கலந்து அதில் சாதத்தை கலந்து எடுத்து சென்றால் 2 நாட்கள் வரை சாதம் கெடாது. சாதம் கலக்கும் போது உப்பு சேர்த்து கொள்ளவேண்டும். எளிதில் செய்து விடலாம்.

அங்காயப் பொடி

தேவையானவை:

சுண்டைக்காய்-1/2 கப்,
வேப்பம்பூ- 1/4 கப்,
மணத்தக்காளி-1/4 கப்,
சுக்கு-1 சிறிய துண்டு,
மிளகு-1/2 ஸ்பூன்,
சீரகம்-1/2 ஸ்பூன்,
கல் உப்பு- தேவையானது,

செய்முறை:

மேலே கூறியுள்ள பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறியபின் மிக்ஸியில் பொடி செய்து, தினமும் (சாப்பிடும் முன்பு) ஒரு பிடி சாதத்தில் இந்த பொடியை போட்டு கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்ட பின், மற்ற சாதம் சாப்பிடவும். இந்த பொடி வயிற்று சமபந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

பிஸிபேளா பாத் பொடி

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு- 1 கப்,
தனியா[மல்லி] - 2 கப், துவரம் பருப்பு-3 ஸ்பூன்,
வெந்தயம்- 1 ஸ்பூன்,
கட்டி பெருங்காயம்- 10 கிராம்,
வர மிளகாய்- 150 கிராம்,
உளுத்தம்பருப்பு- 1/2 ஸ்பூன்
உப்பு- 3 ஸ்பூன்,
புளி- 200 கிராம்,
கொப்பரை தேங்காய்- 1 மூடி.
மஞ்சள் தூள்- 10 கிராம்,

செய்முறை:

புளியை சுத்தம் செய்து சிறியதாக எடுத்து வைக்கவும். மேலே கூறி உள்ள பொருட்கள் அனைத்தையும் தனி,தனியாக வறுத்து, பின் எல்லாவற்றையம் கலந்து மீண்டும் கலந்து வறுத்து[ பொன் நிறமாக] கடைசியில் புளியையும் வறுத்து கொண்டு ஆற வைத்து மிக்ஸியில் பவுடராக பொடி செய்து கொள்ளவும். இதுதான் பிஸிபேளாபாத் பொடி. அரிசியும்,பருப்பும் வேக வைத்து, [இதற்கு தகுந்த உப்பு போடவும்] இந்த பொடியை கலந்து, கொஞ்சம் நல்லெண்ணெய் கலந்து விட்டால் பிஸிபேளாபாத் ரெடி.மசால் வாசனை தேவை படுபவர்கள் 1,பட்டை, லவங்கம்-2, முந்திரி-5 கடைசியில் வறுத்து போட்டு கொள்ளலாம். நல்ல மணத்துடன், சூப்பராக இருக்கும் இந்த பாத்.