Friday, April 10, 2009

ஆலு சப்ஜி

தேவையான பொருட்கள்:

உருளை கிழங்கு - 350 கிராம்
தக்காளி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 2 ஸ்பூன்
சமையல் எண்ணெய் - 4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி- 1 ஸ்பூன்
தனியா பொடி - 2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1/2 ஸ்பூன்
ஆம்சூர் பொடி - 1/2 ஸ்பூன்
கசூரி மேதி - 1 ஸ்பூன்
மல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பிரஷர் குக்கரில் உருளை கிழங்கை போட்டு முழுகும் வரை தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும். ஆறியவுடன் தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சீரகம் சேர்த்து பொரிய விடவும். இதில் பொடியாக நறுக்கிய தக்காளி, நீளமாக
நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய் பொடி, தனியா பொடியுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன், மசித்த உருளை கிழங்கை போட்டு நன்றாக கிளறவும். 2 கப் தண்ணீர், கரம் மசாலா பொடி, ஆம்சூர் பொடி, கசூரி மேதி சேர்த்து நன்றாக கொதித்தவுடன், மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
ஆலு சப்ஜி தயார். பூரி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Thursday, April 2, 2009

சேமியா கேசரி

தேவையான பொருட்கள்:

வருத்த சேமியா - 250 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
முந்திரி -10
திராட்சை -10
ஏலக்காய் - 2
பால் – 100 கிராம்
நெய் – 50 கிராம்
கேசரி கலர் – 1 சிட்டிகை
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு முதலில் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுக்கவும். 1 கப் தண்ணீர், பால் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். 1 சிட்டிகை கேசரி கலர் மற்றும் பொடித்த ஏலக்காயை சேர்க்கவும். இதில் வருத்த சேமியாவை சேர்த்து வேக விடவும். தண்ணீர் நன்றாக சுண்டியவுடன் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான சேமியா கேசரி தயார்.