Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Wednesday, October 22, 2008

இஞ்சி லேகியம்

தேவையான பொருள்கள்:

இஞ்சி - 100 கிராம்
வெல்லம் - 200 கிராம்
மிளகு, திப்பிலி, சீரகம், தனியா, ஓமம், ஒவ்வொன்றிலும் - 10 கிராம்
நெய் - தேவையான அளவு.

செய்முறை:

இஞ்சியை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சாறு எடுத்து வடித்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து தெளிந்து இருக்கும். அந்த தெளிந்ததை மட்டும் எடுத்து, வெல்லத்தை மண் போக வடிகட்டி சுத்தம் செய்து இஞ்சி சாறை கலந்து கெட்டி பாகு வரும் வரை காய்ச்சவும். மற்ற பொருள்களை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து பாகில் போட்டு நெய் ஊற்றி கிளறவும். தீபாவளி அன்று மட்டும் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வயிறு பொருமலாக இருக்கும்போதும் சாப்பிடலாம்.

[2]

இஞ்சி சாறு - 200 கிராம்
வெல்லம் - 200 கிராம்
பாதாம், கசகசா, ஓமம் - தலா - 20 கிராம்
நெய் - தேவையானது

செய்முறை:

வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கல், மண் போக சுத்தம் வடித்து, கசகசா, ஓமத்தை வறுத்து பாதாம் பருப்புடன் இஞ்சி சாறை சேர்த்து அரைக்கவும். எல்லாவற்றையும் கலந்து அடுப்பில் வைத்து கிளறவும். அவ்வப்போது நெய் சேர்த்து கிளறவும். பதம் வந்தவுடன் இறக்கவும்.

Monday, August 11, 2008

ஆரோக்கியம்

  1. அஜீரணத்தை போக்க: கிராம்பு - 10 கிராம், ஓமம் - 20 கிராம், சுக்கு - 20 கிராம் இவற்றை பொடி செய்து 1/2 டம்ளர் சுடு நீரில் கலந்து குடிக்கவும். [அ] கொஞ்சம் பொடியை 1/2 ஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட்டால் அஜீரணம் நீங்கி, நன்கு பசி வரும்.
  2. பித்ததிற்க்கு : வேப்பம்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். பித்ததினால் வரும் தலைசுற்றலுக்கு கொத்தமல்லி [ தனியா] 100 கிராம், சிறிய சுக்கு இவற்றை மிக்ஸியில் பொடி செய்து 1 டம்ளர் நீரில் 1 ஸ்பூன் பொடியை போட்டு கொதிக்க விட்டு பனை வெல்லம் கலந்து குடிக்கவும். பால் சேர்த்தும் அருந்தலாம். காபி, டீ குடிப்பதை குறைத்து கொண்டு தினமும் 2 முறை குடிக்கலாம்.
  3. ஒற்றை தலைவலிக்கு : பாகற்இலை + சுக்கு + மிளகு + உப்பு இவற்றில் சுக்கை, மிளகை தட்டி போட்டு, இலை கிள்ளி போட்டு 1/2 டம்ளர் நீரில் போட்டு கொதிக்க விட்டு கொஞ்சமாக சுண்டியபின் [ இதுதான் கஷாயம்] 2 ஸ்பூன் அளவு [ தேவையானால்] தேன் கலந்து தினமும் 2 முறை குடிக்க சில நாட்களிலேயே குணம் தெரியும். உப்புக்கு பதி தேன் கலந்தும் குடிக்கலாம்.
  4. குடல் புண் குணமாக : மணத்தக்காளி கீரையை 1 கைப்பிடி அளவு மிக்ஸியில் அரைத்து மோர் கலந்து 1 வாரம் சாப்பிட்டால் புண் ஆறிவிடும். அடிக்கடி கூட்டு செய்து சாப்பிடலாம். லேசாக வதக்கி மிக்ஸியில் லேசாக அரைத்து தயிரில் கலந்து தயிர் பச்சடியாகவும் சாப்பிடலாம். இந்த கீரையில் அதிகமாக இரும்பு சத்தும், கால்சியமும் இருப்பதால் அடிக்கடி சாப்பிடலாம்.
  5. இரத்த சோகைக்கு : சிறிய வெங்காயத்தை நன்கு கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டு வதக்கி லேசாக உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சீரகத்தை பொடி செய்து இதனுடன் கலந்தும் சாப்பிடலாம். பொடியாக நறுக்கி பாலில் வேக வைத்தும் குடிக்கலாம். வதக்கிய வெங்காயத்தில் கொஞ்சம் வெல்லம் அப்படியே சாப்பிட்டால் வறட்டு இருமல் குறையும். உணவில் அடிக்கடி பச்சை வெங்காயத்தை கலந்து சாப்பிட வயிறு தொடர்பான நோய்கள் குணம் ஆகும்.

Thursday, November 8, 2007

வெந்தயம் தரும் வனப்பு

1.வெந்தயத்தை உணவாக, மருந்தாக, உடலுக்கு வனப்பு தரும் பொருளாக பயன் படுத்தலாம். ஒரு கரண்டி [100கிராம்] வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து [பொன் கலரில் பொரியும]. அதை ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்து, பொடி ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

2.கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு,[50கிராம்] 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்தால் இரண்டும் நன்கு பொரிந்துவிடும்.
அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு பாட்டிலில் போட்டு
வைத்து கொண்டால் பலவிதங்களில் நமக்கு பயன்படும்.

3. வயிறு உப்புசமாகவோ,பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த [2] வகை பொடியை 1ஸ்பூன்+கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க உடனே சரியாகும்.

4. தினமும் காலையில் [1] வகை பொடியை மோரிலோ, தண்ணீரிலோ கலந்து குடிக்க ப்ளட் சுகர் கட்டுபாடாகும்.இதை வெறும் வயிற்றில்தான் குடிக்கனும்.

5. பேதி போகும்போது மோரில் [1] பொடியை 1 மணிக்கு ஒரு முறை 3 முறை குடித்தால் பேதி நின்றுவிடும்.

6. முட்டு வலி இருப்பவர்கள் [சுகர் இல்லாதவர்கள்]1 ஸ்பூன் [1] வகை பொடி + சிறிய வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும். இது என் அனுபவம்.

7. சிலருக்கு் வெளியூர் செல்லும் சமயம்தான் அடிக்கடி பாத்ரூம் போக தோன்றும். அந்த சமயம் [1 வகை] பொடியை 1/2 ஸ்பூன் 1/2 டம்ளர் நீரில் கலக்கி குடித்தால் வயிறு கலாட்டா செய்யாது. கிளம்பும் சமயம் சிறிய டப்பாவில் இந்த பொடியை எடுத்து செல்லவும்.

8. ப்ளட்சுகர்+ ப்ளட் பிரஷர் குறைய, முழு வெந்தயம்- ஸ்பூன்,பாசிபயறு- 2 ஸ்பூன், கோதுமை-2 ஸ்பூன், இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அது ஊறும் அளவு நீர் ஊற்றி, மறுநாள் காலை மிளகு-2, சிறிது கல் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் தோசை ஊற்றி [நல்லெண்ணெய்] காலை உணவாக சாப்பிட்டால் பி.பி, சுகர் நன்றாக குறையும்.

9.வெந்தயத்தை கறுப்பாக வறுத்து காப்பிபொடியில் கலந்து காபி போட்டு் கொடுக்கலாம். சுகர் உள்ளவர்களுக்கு நல்லது.

10.வெந்தய கீரையை சுத்தம் செய்து நறுக்கி,மிளகாய்பொடி,மஞ்சள்பொடி, பெருங்காயதூள்,உப்பு இவை எல்லாம் கொஞ்சம் கோதுமை மாவில் போட்டு கலந்து நீர்விட்டு பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். இதற்கு தக்காளி சட்னி, வெங்காயம்+ தயிர் சேர்த்து சாப்பிட ருசி சூப்பர்.

11. எந்த வகை ஊறுகாய்க்கும் [2 வகை] பொடி சேர்க்கவும்.

12. 3 டம்ளர் இட்லி அரிசி, 1/2 டம்ளர் வெந்தயம் போட்டு ஊற வைத்து நன்கு ஊறிய பின் நைசாக அரைத்து தோசை ஊற்றி சாப்பிட பொன் கலரில் இருக்கும். வாசனையாகவும் இருக்கும்.உடலுக்கு நல்ல குளுமை.

13. 3 டம்ளர் புழுங்கல் அரிசியுடன்,1/2 டம்ளர் உளுந்ந்து, 1/2 டம்ளர் வெந்தயம் இவற்றை ஊற வைத்து உப்பு சேர்த்துஅரைத்து அடுத்த நாள் இட்லி ஊற்றினால் நல்ல பூப் போன்ற இட்லி தயார். இதற்கு எல்லா வித சட்னியும் சுவையாக இருக்கும். நோய் வந்தவர்கள் அடிக்கடி இந்த இட்லி சாப்பிட இழந்த ஆரோக்கியம் பெறலாம். எப்போதுமே இட்லிக்கு ஊற வைக்கும்போது 2- ஸ்பூன் வெந்தயம் ஊற வைப்பது நல்லது.

14. தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல் உப்பு கலந்து ]ஊற வைத்து சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும். தலையில் முடி கொட்டாது.

Monday, November 5, 2007

ஆரோக்கியம் காக்க

1. முருங்கைக்கீரை: வைட்டமின், ஏ, பி, சி, இரும்பு சத்து, 2 வாரத்துக்கு 1 முறை யாவது சாப்பிட்டால் மலகுடல்களில் சேரும் பூச்சிகள் வெளியேறும்.ஜீரண சக்தி குறைந்தவர்கள் [மிக்ஸியில் லேசாக ஒரு சுற்று சுற்றி] சாப்பிடலாம். கண் பார்வைக்கு நல்லது.

2. சிறுகீரை: இதில் கால்சியம் உள்ளது. அனைவருமே சாப்பிடலாம். மற்ற மருந்துகள் சாப்பிட்டு கொண்டு உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனையின் படிசாப்பிடலாம். நீரழிவு நோய் உள்ளவ்ர்கள் அடிக்கடி சாப்பிடலாம்.

3. மணத்தக்காளி: இதில் வைட்டமின் ஏ, பி, அதிக அளவில் உள்ளது. வயிற்றில் புண்,வாயில் புண் உள்ளவர்கள் தொடர்ந்து 2 நாட்கள் சாப்பிட்டால் சீக்கிரம் குணம் தெரியும். உடலின் சூட்டை தணித்து, உடலின் உள் உறுப்புகளில் புண் இருந்தால் அடிக்கடி சாப்பிட்டால் நன்கு குணம் அடையும். வயிற்றில் பூச்சிகள் வராது தடுக்கும் ஆற்றல் இந்த கீரைக்குமட்டும்தான் உண்டு.

4. கேரட்: இதில் விட்டமின் ஏ, நிறைய உள்ளது. கார்போஹைட்ரேட், தாது உப்புகள் மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் உள்ளன. தினமும் 1 டம்ளர் கேரட் ஜுஸ் இடிக்கலாம். சர்ககரை உள்ளவர்கள் சாப்பிட வேண்டாம். கண் பார்வைக்கு ரொம்ப நல்லது. தினமும் 2 கேரட் சாப்பிட்டால் உடல் வெயிட் போடாது. கேரட் சூப் வைத்து குடிக்கும்போது மிளகு,சீரகதூள் சேருவதால் உடல் கழிவுகள் வெளியேறும்.

5. சுண்டைக்காய்: இதை எல்லோருமே சாப்பிடலாம். ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட மூச்சு திணறல் குறையும். இதில் விட்டமின் சி, உள்ளது. வயிற்றில் சேரும் கிருமிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல்திறன்கூடும். சளியை கரைக்கும். இதில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, விட்டமின் ஏ, இந்த கீரையை எல்லோரும் சாப்பிடலாம். மூல சூடு உள்ளவர்கள், அதிக வெள்ளை பாடு உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் 1 கப் சாப்பிடலாம். உடல் சூட்டை தணித்து உடலுக்கு வலிமை தரும்.

6. முடக்கத்தான் கீரையில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. மூட்டுவலி, எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. எலும்புகளுக்கு இடையில் உள்ள திசுக்களுக்கு வலு தரும். வாயு, வாதத்தினால் வரும் வாத வீக்கம்,வலி, குடைச்சல் இவற்றை போக்கும்.

7. வெண்டைக்காயில் பாஸ்பரஸ், விட்டமின் ஏ, பி, சி, கொஞ்சம் அயன் சத்து. எலும்புகளுக்கு பலம் தரும். மூளைக்கு நல்லது. ஞாபக சக்தியை தூண்டும்.

8. பாகற்காயில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்யும் பாலிபெப்டுடைட் என்ற வேதிபொருள் நிறைய உள்ளது. சர்க்கரை உள்ளவர்கள் தினமும் சாப்பிட நல்லது. தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும். வேறு உபாதைகளுக்கு மருந்து எடுத்து கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் கேட்டு சாப்பிடவேண்டும். ஏனெனில் அந்த மருந்தின் வீரியத்தை முறியடிக்கும்.

ஆரோக்கியம் காக்க

1. மாதம் - 2 முறை முடக்கத்தான் கீரை துவையல் சாப்பிடலாம்.

2. பேரிச்சம்பழம், அத்திப்பழம், சப்போட்டாப்பழம் - தேன் கலந்து தினமும் சாப்பிடலாம்.

3. கீரை வகைகளில் தினம் ஒரு கீரை சாப்பிட்டால் அடிக்கடி வரும் சோர்வும், கை, கால் வலியும் வராது.

4. வயதானால் வரும் வாதபிடிப்புக்கு: பொடுதலை + வாதநாராயணன் இலை சாறு சம அளவு தினம் கலையிலும், மாலையிலும் 2 ஸ்பூன் சாப்பிட்டு 100 கிராம் பால் 21 நாட்கள் குடிக்க குணம் தெரியும். உணவில் உப்பு, புளி சேர்க்க கூடாது.

5. விளாம்பழம், நெல்லிக்காய், எலுமிச்சம்பழம் அடிக்கடி உணவில் சேர்த்தால் நககோளாறுகள் வராது. சர்க்கரை நோயினால் ஏற்படும் களைப்பிற்கு நெல்லிகாய் ஊறவைத்த நீரைகுடிக்கலாம்.

6. வைட்டமின் 'A' வெந்தயகீரை, முருங்கை கீரை, கேரட், பப்பாளி, தயிர், முட்டை ஆகியவற்றில் நிரைய உள்ளது.

7. வைட்டமின் 'B' கோதுமை, பருப்பு வகைகள், பால், தயிர் ஆகியவற்றில் உள்ளது.

8. வைட்டமின் 'C' முட்டைகோஸ், தக்காளி, மல்லி, எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா நெல்லிக்காய் ஆகியவற்றில் நிரைய உள்ளது.

9. இரும்பு சத்து முருங்கை கீரை, முள்ளங்கி, புதினா, முட்டைகோஸ், வெல்லம், கேழ்வரகு (ராகி) ஆகியவற்றில் நிரைய உள்ளது.

10. சுண்ணாம்பு சத்து: பச்சை காய்கறிகள்,பூண்டு, இஞ்சி, கேழ்வரகு, பால்.

11. புரத சத்து: பால்,தயிர், வெண்ணெய், பருப்பு மற்றும் கடலை வகைகள், முட்டையின் வெள்ளைக்கரு.

12. வாய்புண், குடல் புண் குணமாக மணத்தக்காளி கீரையை (10 இலைகள்) தினமும் காலையும், மாலையும் பச்சையாக மென்று 1 டம்ளர் மோர் தண்ணியாக குடிக்க வேண்டும்.