Showing posts with label பச்சடி. Show all posts
Showing posts with label பச்சடி. Show all posts

Tuesday, May 19, 2009

பூந்தி தயிர்பச்சடி

தேவையானவை :

புளிக்காத தயிர் - 2 கப்
காராபூந்தி - 1 கப்
கேரட் - சிறியதாக - 1
வெள்ளரிக்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 5
உப்பு - தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - கொஞ்சம்
புதினா இலை - 10
மல்லி இலை - கொஞ்சம்
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை:

தயிரில் உப்பு கலந்து கடைந்து அதில் மல்லி, புதினாவை நறுக்கி போட்டு கொள்ளவும். கேரட், வெள்ளரிக்காயை துருவி கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்தபின் பெருங்காயம் போட்டு அடுப்பை அணைத்து எல்லாவற்றையும் போட்டு, தயிரையும் கடைந்து ஊற்றி நன்றாக கலக்கவும்

Monday, May 18, 2009

வாழைப்பூ பச்சடி

தேவையானவை :

துவரம்பருப்பு - 50 - கிராம்
வாழைப்பூ - சிறியதாக - 1 கசப்பு இல்லாமல் இருக்கனும்
சிறிய வெங்காயம் - 10
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
வரமிளகாய் - 2
மஞ்சள் தூள் - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு

தாளிக்க : கடுகு - 1/4 ஸ்பூன்
கடலைபருப்பு - 1/4ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - கொஞ்சம்
எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை :

வாழைப்பூ கசக்காமல் இருக்குதா என்று பார்க்க பூவை பிரித்து உள்ளே இருக்கும் இதழை கொஞ்சம் எடுத்து வாயில் போட்டு பார்த்தால் கசக்காமல் இருக்க வேண்டும். பருப்பை மஞ்சள்தூள் போட்டு வேக வைத்து கொள்ள வேண்டும். வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். [ கறுத்து போகாமல் இருக்கும்] வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், வரமிளகாய்,போட்டு வறுபட்டபின் பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். பின்பு தக்காளியை போட்டு சுருள வதக்கவும். மோரில் ஊறிய வாழைப்பூவை நன்கு பிழிந்து போட்டு +மஞ்சள் பொடி போட்டு வதக்கவும். பொடியாக நறுக்கினால் சீக்கிரம் வதங்கி விடும். பின்பு வெந்த பருப்பை வாழைப்பூ கலவையில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். கடைசியாகவும் தாளிக்கலாம். மேலே மல்லி இலை போடவும். சாதத்தில் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும். தளர்வாக வேண்டும் எனில் 1/2 கப் தண்ணீர் சேர்க்கலாம்.

Sunday, May 17, 2009

மாங்காய் இனிப்பு பச்சடி

தேவையானவை:

மாங்காய் கொஞ்சம் புளிப்பாக - 1
சர்க்கரை - 1/2 கப்
வெல்லம் - 1/4 கப்
சுக்கு பொடி - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பச்சை மிளகாய் - 4

தாளிக்க:

கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - கொஞ்சம்
வரமிளகாய் - 2

செய்முறை:

மாங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு 1 விசில் விட்டு வேகவிடவும். வெல்லத்தை கல், மண் போக சுத்தம் செய்து அதனுடன் சர்க்கரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெந்தமாங்காயை நன்கு மசித்து சுக்கு பொடி, உப்பும் போட்டு வெல்ல+சர்க்கரை கலவையில் கலந்து விடவும். வாணலியில் 2 எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டு பொரிந்ததும் பச்சை மிளகாய், வரமிளகாயை கிள்ளி போட்டு வறுபட்டதும் பச்சடியில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

மாம்பழ தயிர்பச்சடி

தேவையானவை:

பழுத்த மாம்பழம் - 1
புளிக்காத தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 3
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
மல்லி இலை - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு


தாளிக்க : 
கடுகு, பெருங்காயம் - கொஞ்சம்,
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை :

மாம்பழத்தை கழுவி தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயுடன் தேங்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதில் மாம்பழதுண்டுகள் உப்பு சேர்த்து கையால் நன்கு பிசைந்து [அ] மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். அதில் தயிரையும் ஊற்றி நன்கு கலக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் காயவிட்டு கடுகு போட்டு வெடித்ததும், பெருங்காயம் போட்டு பொரிந்ததும் தயிர் கலவையில் போட்டு கலக்கவும். மேலே கறிவேப்பிலை, மல்லி இலை போடவும். இனிப்பும் புளிப்பும் கலந்து இருக்கும் இந்த பச்சடி.

Saturday, May 16, 2009

தக்காளி, அன்னாசிப்பழம் பச்சடி

தேவையானவை :

அன்னாசிப்பழம் - பழுத்து, புளிப்பு இல்லாமல் பாதி - 1/2
நன்கு பழுத்த பெங்களூர் தக்காளிப்பழம் - 10
சர்க்கரை - 50 கிராம்
ரோஸ் எசன்ஸ் - 2 துளிகள்
கார்ன்ஃப்ளார் - 1/2 ஸ்பூன்

செய்முறை :

அன்னாசிப்பழத்தை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கெட்டியான வாணலியில் அன்னாசிப்பழத்தை வதக்கி சுண்டியதும் தக்காளியை போட்டு குறைந்த தீயில் கொதிக்க விடவும். கார்ன்ஃப்ளாரை 1/4 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கொதி வந்ததும் இறக்கி ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும். இதை சப்பாத்தி, பிரெட், பீட்ஸா எல்லாத்துக்கும் தொட்டு கொள்ளலாம்.

உருளைக்கிழங்கு தயிர் பச்சடி

தேவையானவை :

உருளைக்கிழங்கு - 200 கிராம் [அ] 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 5
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
புளிக்காத தயிர் - 1 கப்
உப்பு - ருசிக்கு ஏற்ப

தாளிக்க : கடுகு,
எண்ணெய் - 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்

செய்முறை :

உருளைக்கிழங்கை வேகவிட்டு மசித்து கொள்ளவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் லேசாக அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும் பெருங்காயம் போட்டு பொரிந்ததும் உருளைக்கிழங்கை போட்டு 1 நிமிடம் வதக்கி ஆறிய பின் உப்பு, தயிர்,கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு கடைசியில் தக்காளியை நீளமாக நறுக்கி போட்டு நன்கு கலந்து சாப்பிடலாம்.

கத்தரிக்காய் தயிர்பச்சடி

தேவையானவை :

பிஞ்சு கத்தரிக்காய் - 4
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 4 [அ] 6
புளிக்காத தயிர் - 1 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க : கடுகு, கொஞ்சம் பெருங்காயம், எண்ணெய் - 1 ஸ்பூன்.


செய்முறை :

கத்தரிக்காயை நீளமாகவும், மெல்லியதாகவும் நறுக்கி கழுவி கொண்டு வாணலியில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் பெருங்காயம் போட்டு பொரிந்ததும் காயை போட்டு வதக்கிக்கொள்ளவும். தேங்காய் பச்சை மிளகாயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிகொள்ளவும்.இவை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து உப்பு + தயிர் ஊற்றி நன்கு கலந்து விடவும். மேலே மல்லி இலை போட்டு கொள்ளவும். வித்யாசமான ருசியுடன் சூப்பராக இருக்கும்.

தேங்காய் - தக்காளி பச்சடி

தேவையானவை:

தக்காளி சிவப்பாக - 4
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
புளிக்காத தயிர் - 1 கப்
பச்சைமிளகாய் -6
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவைக்கு

தாளிக்க: கடுகு - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை:

தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். இதனுடன் தேங்காய், உப்பு, தயிர் சேர்த்து ஒன்றாக கலக்கவும். எண்ணெயை காய விட்டு கடுகு போடு வெடித்தபின் அதில் சேர்த்து நன்றாக கலந்து மேலே மல்லி தழை போட்டு கொள்ளலாம்.

Wednesday, May 13, 2009

உழுந்து பச்சடி

தேவையானவை: 

வெள்ளை உளுந்து- 1/4 கப்,
தயிர் - 1 கப்
தாளிக்க எண்ணெய் - 2 ஸ்பூன், கடுகு - கொஞ்சம்,
பெருங்காய தூள் - கொஞ்சம்
வரமிளகாய்- 4
உப்பு- தேவையானது.

செய்முறை:

உளுந்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும், பெருங்காயம், வரமிளகாய் போட்டு அடுப்பை அணைத்து ஆறியபின் அதில் உளுந்து பொடி, தயிர், ஊப்பு,போட்டு நன்கு கலக்கவும். சூப்பர் வாசனையுடன் இருக்கும். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். தோசைக்கும் நன்றாக இருக்கும்.

மணத்தக்காளி பச்சடி

தேவையானவை: 

மணத்தக்காளி வற்றல்- 1/4 கப்
தயிர்- 2 கப்
பெருங்காயதூள்- கொஞ்சம்
வரமிளகாய்- 4
உப்பு கொஞ்சம்,
கறிவேப்பிலை கொஞ்சம்
எண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை: 

வற்றலை எண்ணெய் விட்டு பொரிய வறுத்து கொள்ளவும். இன்னும் கொஞ்சம் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய், பெருங்காயம் வறுத்து ஆறியபின் அதில் தயிர், மணத்தக்காளி வற்றல் போட்டு நன்கு கலந்து சாப்பிடவும். வற்றலில் உப்பு இருப்பதால் பார்த்து உப்பு போடவும். கறிவேப்பிலை மேலே போடவும். இந்த பச்சடி பித்ததுக்கு ரொம்ப நல்லது. வயிற்றுக் கோளாறுகள் வராமல் தடுக்கும். வயிற்றுபுண் இருந்தால் ஆற்றும்.

காய்கறி பச்சடி

தேவையானவை:

கேரட்- 1
வெள்ளரிக்காய்- 1
வெள்ளை பூசணி- 1 கீற்று
செள செள - சிறியது
கோஸ்- 50 கிராம்
குடை மிளகாய்- 1
பெரிய வெங்காயம்- 1
தேங்காய் துறுவல் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய்- 4
உப்பு- தேவையானவை;
தேவையானால் பெங்களூர் தக்காளி- 3
தாளிக்க கடுகு.
தேங்காயுடன், மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.


செய்முறை:

எல்லா காய்களையும் நன்கு சுத்தம் செய்து துறுவி கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும், பெருங்காயத்தை போட்டு அடுப்பை அணைத்து விடவும். அதில் துறுவிய காய்களுடன் அரைத்ததேங்காய் உப்பு போட்டு, தயிறும் ஊற்றி, கடைசியில் பெரிய வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி போட்டு, அதனுடன் மல்லி இலை, தக்காளி பொடியாக நறுக்கி நன்கு கலக்கவும். இந்த பச்சடியை கப்பில் போட்டும் சாப்பிடலாம். சப்பாத்திக்கு, தோசைவகைகள், உப்புமா எல்லாவற்றுக்கும் தொட்டு சாப்பிடலாம். சூப்பராக இருக்கும்.

Tuesday, June 10, 2008

தக்காளியில் செய்யும் ரெசிபிகள்

தக்காளி பச்சடி :

தேவையானவை
: தக்காளி - 1/2 கிலோ
சர்க்கரை - 100 கிராம்
துருவிய தேங்காய் - 1 கப்
பச்சை மிளகாய் - 10
மஞ்சள் பொடி - கொஞ்சம்
உப்பு - 1 ஸ்பூன்
தாளிக்க எண்ணெய் - கொஞ்சம்


செய்முறை
:

தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கெட்டியான பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து மஞ்சள்பொடி போட்டு தக்காளியை போட்டு வதக்கவும். துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு 1 சுற்று சுற்றி பச்சை மிளகாய், சர்க்கரை,உப்பு போட்டு மறுபடியும் ஒரு சுற்றி அதை தக்காளியில் போடவும். கொஞ்சம் சுண்டியபின் சிறிய கரண்டி தயிர் ஊற்றவும். நன்கு கிளறவும். இது தக்காளி வாசனை,காரம், தேங்காய் வாசனையுடன் சூப்பராக இருக்கும்.

Sunday, June 8, 2008

வெள்ளரிக்காய் பச்சடி

தேவையான பொருள்கள் :

பெரிய வெள்ளரிக்காய் - 1
புளிக்காத தயிர் - 200 கிராம்
பச்சை மிள்காய் - 5
தாளிக்க கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
கொஞ்சம் எண்ணெய்.

செய்முறை :

வெள்ளரிக்காயை துருவி பிழிந்தால் நீர் வந்து விடும். அதை கீழே ஊற்ற வேண்டாம். மோர் கலந்து குடிக்கலாம். வாணலியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், பச்சைமிளகாய் போட்டு அடுப்பை அணைத்து வெள்ளரிக்காய், தயிர் ஊற்றி கறிவேப்பிலை, மல்லி போட்டு, உப்பு போட்டு நன்கு கலந்துவிட்டால் வெள்ளரிக்காய் பச்சடி ரெடி. சப்பாத்தி, கலந்த சாதம், எல்லாவற்றுக்கும் ஏற்றது. பச்சை வெங்காயவாசனை பிடித்தவர்கள் மெல்லியதாக நறுக்கி சேர்த்து கொள்ளலாம். சிறிய கேரட்டை துருவி சேர்த்தால் கலராக இருக்கும். ச்த்துள்ளது. அவரவர் விருப்பம் போல் சேர்த்து கொள்ளலாம்.

Thursday, January 17, 2008

தக்காளி பச்சடி

தேவையான பொருள்கள்

பழுத்த தக்காளி- 200 கிராம்
துறுவிய தேங்காய்- 1 மூடி
பச்சை மிளகாய்- 7
பொட்டு கடலை- 2 ஸ்பூன்
சீரகம்- 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையானவை
மஞ்சள்தூள்- கொஞ்சம்
தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு- 1/2 ஸ்பூன்
பெருங்காயம்- கொஞ்சம்

செய்முறை

தக்காளியை பொடியாக நறுக்கி கைகளால் கரைத்து வைத்து கொள்ளவும். தேங்காயுடன், சீரகம், பச்சைமிளகாய், உப்பு பொட்டு கடலை போட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவம். கெட்டியான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு,பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து தக்காளியை ஊற்றி கொதிக்கவிடவும். கொஞ்சம் சுண்டியபின், அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி ஒருகொதி வந்தவுடன் இறக்கவும். கடைசியில் 1/4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி விடவும். தக்காளி பச்சடி தயார். மல்லி இலை பொடியாக நறுக்கி மேலே தூவினால் நன்றாக இருக்கும்.

தக்காளி ஜாம்

தேவையான பொருள்கள்; பெங்களுர் தக்காளி- 1/2 கிலோ
சர்க்கரை- 300 கிராம்
சிட்ரிக் ஆசிட்- 1/2 ஸ்பூன்
சிட்டிகை உப்பு- சுவைக்கு
ரெட் கலர் பவுடர்- ஒரு சிட்டிகை
விருப்பபட்டால் ரோஸ் எசன்ஸ்- 1/4 ஸ்பூன்

செய்முறை: தக்காளியை மிக்ஸியில் அடித்து சாறு எடுத்து கொள்ளவும். அதை வடிக்கட்டவும் . அதில் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், கலந்து ஒரு கெட்டியான பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் கிளறவும். கொஞ்ச நேரத்தில் பாகு பதம் வரும். அதில் ரோஸ் எசன்ஸ், கலர் போட்டு கலந்து ஆறியபின் சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைத்து பயன் படுத்தவும். தக்காளி ஜாம் தயார்.

Monday, November 5, 2007

சுண்டைக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய் பிஞ்சானது - 1 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 6
புளி விழுது - 2 ஸ்பூன்
பெருங்காயம், மஞ்சள்தூள், 1/4, ஸ்பூன்,
தாளிக்க கடுகு, உப்பு தேவையான அளவு,

செய்முறை:

துவரம்பருப்பை லேசாக வறுத்து குழைய வேகவிடவும். சுண்டைக்காயை பளாஸ்டிக் கவரில் போட்டு குழவிக்கல்லால் தட்டினால் விதை தனியாக வந்துவிடும்.அதை புளி விழுதில் கொஞ்சம் உப்பு போட்டு பிரட்டி வைக்கவும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைபருப்பு, ஊளுத்தம்பருப்பு,பெருங்காயம், கீறிய மிளகாய், மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வதங்கியதும், தக்காளியை போட்டு, உப்பு சேர்த்து வதங்கியபின் சுண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும. பச்சை வாசனை போன பின் வேகவைத்த பருப்பை சேர்த்து, கறிவேப்பிலை சேர்த்து கடைசியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கொதி வந்ததும் இறக்கி விடவும்.

சுண்டைக்காயை பொடியாக நறுக்கியும் செய்யலாம். கொஞ்சம் பொறுமை வேண்டும். இது உடலுக்கு குளிர்ச்சி தரும், ஆரோக்கியம் தரும் அருமையான பச்சடி. அடிக்கடி செய்து சாப்பிட்டால் வயிறு கோளாறுகள் ஏதும் வராது.

வெண்டைக்காய் தயிர் பச்சடி

தேவையானவை:

புளிக்காத தயிர் - 1 கப்
வெண்டைக்காய் - 100 கிராம்
தேங்காய் துறுவியது - 1 கப்
பச்சை மிளகாய் - 6
உப்பு - 1 ஸ்பூன்
தாளிக்க கடுகு, சீரகம், ஊளுத்தம் பருப்பு, பெருங்காயம் - தலா 1/4 ஸ்பூன்,

செய்முறை:

நறுக்கும் முன்பே தண்ணீரில் வெண்டைக்காயை அலம்பி பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் 2-ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, ஊளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளித்து பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை போட்டு நன்கு வதக்கவும். தேங்காய், பச்சைமிளகாயை அரைத்து தயிரில் கலந்து, அதில் வதக்கிய வெண்டைக்காய், உப்பு, போட்டு, நன்கு கலந்து வாசனைக்கு 1/4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து மல்லி தழை தூவி கலந்து பரிமாறவும். ருசியான தயிர் பச்சடி ரெடி.

கோஸ்மல்லி

தேவையான பொருட்கள்:

பாசி பருப்பு - 1 கப்,
துருவிய கேரட் - 1 கப்,
பச்சை மிளகாய் - 5,
எலுமிச்சம் பழம் - 1 [அ] சிட்ரிக் பவுடர்- 1/4 ஸ்பூன்,
மல்லி இலை - 1 கைப்பிடி,
கறிவேப்பிலை - 10.
உப்பு - 1 ஸ்பூன்

செய்முறை:

பாசி பருப்பை நன்கு கழுவி 1/2 மணி நேரம் ஊற வைத்து, ஊறிய பின் நன்கு தண்ணிரை வடித்து விட்டு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் உப்பு, எலுமிச்சை சாறு , மல்லி இலை போட்டு நன்கு கலந்து கடுகு தாளிக்கவும். இதற்கு பருப்பை பச்சையாகதான் போடவேண்டும்.அடிக்கடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு வலு தரும்.