தேவையானவை
பூசணி
அவரை
கோஸ்
பரங்கி
கத்தரிக்காய்
கொத்தவரங்காய்
பாசிப்பருப்பு - 1/2 கப்
பச்சைமிளகாய் - 5
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்,
உப்பு தேவைக்கு
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
தாளிக்க எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை
பாசிப்பருப்புடன் மஞ்சள்பொடி சேர்த்து மலர வேகவிடவும். தேங்காயுடன் 2 பச்சைமிளகாய், 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும். காய்களை பொடியாக நறுக்கி கொள்ளவும். நன்கு சுத்தம் செய்து கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கவும். அதில் மிளகாயை கீறி போடவும். பாதி வெந்தபின் உப்பு போட்டு, வெந்தபருப்பு, அரைத்துவிட்ட தேங்காயை போட்டு, கெட்டியாக இருந்தால் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். இறக்கிவிட்டு நெய்யில் [அ] தேங்காய் எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். நன்கு கலந்து விடவும்.இதற்கு தக்காளி, எலுமிச்சை தேவை இல்லை. எல்லா காய்கள், பருப்பு ஒன்றாக போட்டு ஃப்ரஷர் பேனிலும் ஒரு விசில் விட்டு பின், தாளிக்கலாம். எல்லா காய்களும் சேர்க்கலாம். சத்துள்ளது.
Showing posts with label கூட்டு. Show all posts
Showing posts with label கூட்டு. Show all posts
Thursday, July 23, 2009
Wednesday, May 13, 2009
கீரை தயிர் கூட்டு
தேவையானவை:
பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கப்
தயிர்- 1 கப்
தேங்காய் துறுவியது - கொஞ்சம்
பச்சை மிளகாய்- 2
மிளகு- 1/4 ஸ்பூன்
ஊளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
பெருங்காயம் சிறிய கட்டி
தாளிக்க- கடுகு, சுவைக்கு ஏற்ப உப்பு.
செய்முறை:
கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு ஊளுத்தம்பருப்பு, தேங்காய், பெருங்காயம், மிளகு, மிளகாய், பொன் நிறத்தில் வறுத்து ஆறியபின் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கீரை நன்கு பொடியாக நறுக்கி கொண்டு, மண் போக சுத்தம் செய்து வாணலியில் அரைத்ததுடன் கீரையை சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும். ஆறியபின் தயிர், உப்பும் சேர்த்து நன்கு கலக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். சுவையான தயிர் கூட்டு தயார்.
பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கப்
தயிர்- 1 கப்
தேங்காய் துறுவியது - கொஞ்சம்
பச்சை மிளகாய்- 2
மிளகு- 1/4 ஸ்பூன்
ஊளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
பெருங்காயம் சிறிய கட்டி
தாளிக்க- கடுகு, சுவைக்கு ஏற்ப உப்பு.
செய்முறை:
கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு ஊளுத்தம்பருப்பு, தேங்காய், பெருங்காயம், மிளகு, மிளகாய், பொன் நிறத்தில் வறுத்து ஆறியபின் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கீரை நன்கு பொடியாக நறுக்கி கொண்டு, மண் போக சுத்தம் செய்து வாணலியில் அரைத்ததுடன் கீரையை சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும். ஆறியபின் தயிர், உப்பும் சேர்த்து நன்கு கலக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். சுவையான தயிர் கூட்டு தயார்.
Monday, November 5, 2007
பூசணிக்காய் கூட்டு
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் - 100 கிராம்
பாசி பருப்பு வறுத்தது - 1 கப்
பச்சை மிளகாய் - 7
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
தாளிக்க - கடுகு, ஊளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு
செய்முறை:
காயை தோல் சீவி பொடியாக நறுக்கி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். தேங்காயுடன், சீரகம் மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். காய் வெந்ததும் அரைத்ததை போட்டு 2 நிமிடம் கழித்து வெந்த பாசிபருப்பை சேர்த்து நன்கு கொதி வந்ததும் இறக்கி தாளிப்பு கரண்டியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். சத்துக்கள் நிறைந்த இந்த கூட்டு சூப்பராக இருக்கும்.
பூசணிக்காய் - 100 கிராம்
பாசி பருப்பு வறுத்தது - 1 கப்
பச்சை மிளகாய் - 7
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
தாளிக்க - கடுகு, ஊளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு
செய்முறை:
காயை தோல் சீவி பொடியாக நறுக்கி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். தேங்காயுடன், சீரகம் மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். காய் வெந்ததும் அரைத்ததை போட்டு 2 நிமிடம் கழித்து வெந்த பாசிபருப்பை சேர்த்து நன்கு கொதி வந்ததும் இறக்கி தாளிப்பு கரண்டியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். சத்துக்கள் நிறைந்த இந்த கூட்டு சூப்பராக இருக்கும்.
காய்கறி கூட்டு
தேவையான பொருட்கள்:
பூசணி, அவரை, கத்திரிக்காய், பரங்கி, முருங்கைகாய் - 2,
கொத்தவரங்காய், புடலங்காய், பீர்க்கங்காய், தட்டைபயிறு, பாசிப்பருப்பு தலா - 50 கிராம்
பச்சைமிளகாய் - 6
தேங்காய் துறுவியது - 1/2 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தட்டைபயிறை லேசாக வறுத்து முதல் நாளே ஊற வைக்கவேண்டும். பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவைக்க வேண்டும். காய்களை பொடியாக நறுக்கவேண்டும். தேங்காயுடன், சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவேண்டும். வெந்த பருப்புடன் காய்களை சேர்த்து 2 நிமிடம் கழித்து அரைத்த விழுதுடன், உப்பையும் சேர்த்து நன்கு கொதித்து வரும் சமயம் இறக்கி தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் தேங்காய் எண்ணைய் ஊற்றி கடுகு, தேவைபபட்டால் கடலைபருப்பு, உளுத்தமபருப்பு, பெருங்காயம் தாளிக்கலாம். கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு இறக்கிவிடவும். சத்துள்ள, வயிற்றுக்கு கெடுதல் செய்யாத கூட்டு தயார்.
பூசணி, அவரை, கத்திரிக்காய், பரங்கி, முருங்கைகாய் - 2,
கொத்தவரங்காய், புடலங்காய், பீர்க்கங்காய், தட்டைபயிறு, பாசிப்பருப்பு தலா - 50 கிராம்
பச்சைமிளகாய் - 6
தேங்காய் துறுவியது - 1/2 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தட்டைபயிறை லேசாக வறுத்து முதல் நாளே ஊற வைக்கவேண்டும். பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவைக்க வேண்டும். காய்களை பொடியாக நறுக்கவேண்டும். தேங்காயுடன், சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவேண்டும். வெந்த பருப்புடன் காய்களை சேர்த்து 2 நிமிடம் கழித்து அரைத்த விழுதுடன், உப்பையும் சேர்த்து நன்கு கொதித்து வரும் சமயம் இறக்கி தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் தேங்காய் எண்ணைய் ஊற்றி கடுகு, தேவைபபட்டால் கடலைபருப்பு, உளுத்தமபருப்பு, பெருங்காயம் தாளிக்கலாம். கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு இறக்கிவிடவும். சத்துள்ள, வயிற்றுக்கு கெடுதல் செய்யாத கூட்டு தயார்.
Subscribe to:
Posts (Atom)