Wednesday, August 20, 2008

சேனை கிழங்கு பொரியல்

தேவையானவை : சேனைக்கிழங்கு - 1/4 கிலோ,
மிளகு - 1 ஸ்பூன்,
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு,
கடலை மாவு - 1 ஸ்பூன்

மிளகு, சீரகம், சோம்பு, உப்பு இவற்றை மைய அரைத்து கடலை மாவுடன் சேர்த்து [இது பேஸ்ட்] போல் இருக்கும்.

செய்முறை : சேனை கிழங்கை தோல் சீவி ஓரே அளவாக தடிமனாக நறுக்கி கொள்ளவும். கொதிக்கும் நீரில் கிழங்கும், உப்பும், போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். கொஞ்ச நேரம் ஊறியபின் அரைத்த பேஸ்டை கிழங்கின் மேல் தடவி, தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடு ஆனவுடன் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கிழங்கை போட்டு இருபுறமும் வேகவிட்டு மொறுமொறுப்பாக ஆனவுடன் எடுக்கவும். இது மிளகின் வாசனையுடன் சூப்பராக இருக்கும்.

Tuesday, August 19, 2008

காலிஃப்ளவர் மிளகு பொரியல்

தேவையான பொருள்கள்
 
காலிஃப்ளவர் - 1 பெரிய வெங்காயம் -1
சிட்ரிக் ஆசிட் - 1/4 ஸ்பூன் [அ] எலுமிச்சை பழம் - 1
உப்பு - தேவைக்கு
மஞ்சள் பொடி - கொஞ்சம்
எண்ணெய் தேவைக்கு
மிளகு தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி - கொஞ்சம்.

செய்முறை:

காலிஃப்ளவரை சிறியதாக கட் செய்து சுடு நீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். காலிஃப்ளவரை போட்டு லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைத்து கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும். பாதி வெந்தவுடன் மிளகு பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கவும். சுருள வதங்கியவுடன் இறக்கவும். மல்லி இலை பொடியாக நறுக்கி போடவும். சப்பாத்தி, பூரி, தோசைக்கு தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.

ஸ்டஃப்டு கத்தரிக்காய்

தேவையான பொருள்கள்:

கத்தரிக்காய் பிஞ்சாக - 1/4 கிலோ
எண்ணெய் - 50 கிராம்
உப்பு - கொஞ்சம்.

வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்,
மல்லி[ தனியா ] - 2 ஸ்பூன்,
வர மிளகாய் - 6 [அ] 8
வெந்தயம் - கொஞ்சம்,
கட்டி பெருங்காயம் - சிறியதாக,
உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
துறுவிய தேங்காய் - 1/4 கப்
கொஞ்சம் கல் உப்பு.

செய்முறை :

கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி மேலே கூறி உள்ள பொருட்களை பொன் நிறமாக வறுத்து, ஆறிய பின் பொடி செய்யும் போது கல் உப்பை சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும். கத்தரிக்காயை நீளமாக பாதி வரை கீறி கொள்ளவும். இல்லையெனில் சுருளாகவும் கீறி கொள்ளலாம். [முழுதாக கீற வேண்டாம் ] பொடியை கத்தரிக்காயில் கொஞ்சம்மாக ஸ்பூனில் எடுத்து அடைக்கவும். எண்ணெய்யை சூடு செய்து சீரகம் தாளித்து கத்தரிக்காயை போட்டு, கொஞ்சம் மஞ்சள் பொடியை போட்டு சிம்மில் வைதது மூடி வைத்து, பாதி வெந்தவுடன் பொடி மீதம் இருந்தால் அதையும் போட்டு காய் உடையாமல் கிளறி மூடி வைத்து காய்க்கு [உப்பு] போட்டு மூடி வைத்து நன்கு வேகவிட்டு எடுக்கவும். காயின் மேல் சுருக்கமாக இருந்தால் காய் நன்கு வெந்துவிட்டது என்று அர்த்தம். தேவைக்கு ஏற்ப எண்ணெய் சேர்த்து கொள்ளலாம். கறிவேப்பிலை, மல்லி பொடியாக நறுக்கி போடவும். இந்த கத்தரிக்காய் பொரியல் சூப்பராக இருக்கும்.

Monday, August 11, 2008

ஆரோக்கியம்

  1. அஜீரணத்தை போக்க: கிராம்பு - 10 கிராம், ஓமம் - 20 கிராம், சுக்கு - 20 கிராம் இவற்றை பொடி செய்து 1/2 டம்ளர் சுடு நீரில் கலந்து குடிக்கவும். [அ] கொஞ்சம் பொடியை 1/2 ஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட்டால் அஜீரணம் நீங்கி, நன்கு பசி வரும்.
  2. பித்ததிற்க்கு : வேப்பம்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். பித்ததினால் வரும் தலைசுற்றலுக்கு கொத்தமல்லி [ தனியா] 100 கிராம், சிறிய சுக்கு இவற்றை மிக்ஸியில் பொடி செய்து 1 டம்ளர் நீரில் 1 ஸ்பூன் பொடியை போட்டு கொதிக்க விட்டு பனை வெல்லம் கலந்து குடிக்கவும். பால் சேர்த்தும் அருந்தலாம். காபி, டீ குடிப்பதை குறைத்து கொண்டு தினமும் 2 முறை குடிக்கலாம்.
  3. ஒற்றை தலைவலிக்கு : பாகற்இலை + சுக்கு + மிளகு + உப்பு இவற்றில் சுக்கை, மிளகை தட்டி போட்டு, இலை கிள்ளி போட்டு 1/2 டம்ளர் நீரில் போட்டு கொதிக்க விட்டு கொஞ்சமாக சுண்டியபின் [ இதுதான் கஷாயம்] 2 ஸ்பூன் அளவு [ தேவையானால்] தேன் கலந்து தினமும் 2 முறை குடிக்க சில நாட்களிலேயே குணம் தெரியும். உப்புக்கு பதி தேன் கலந்தும் குடிக்கலாம்.
  4. குடல் புண் குணமாக : மணத்தக்காளி கீரையை 1 கைப்பிடி அளவு மிக்ஸியில் அரைத்து மோர் கலந்து 1 வாரம் சாப்பிட்டால் புண் ஆறிவிடும். அடிக்கடி கூட்டு செய்து சாப்பிடலாம். லேசாக வதக்கி மிக்ஸியில் லேசாக அரைத்து தயிரில் கலந்து தயிர் பச்சடியாகவும் சாப்பிடலாம். இந்த கீரையில் அதிகமாக இரும்பு சத்தும், கால்சியமும் இருப்பதால் அடிக்கடி சாப்பிடலாம்.
  5. இரத்த சோகைக்கு : சிறிய வெங்காயத்தை நன்கு கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டு வதக்கி லேசாக உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சீரகத்தை பொடி செய்து இதனுடன் கலந்தும் சாப்பிடலாம். பொடியாக நறுக்கி பாலில் வேக வைத்தும் குடிக்கலாம். வதக்கிய வெங்காயத்தில் கொஞ்சம் வெல்லம் அப்படியே சாப்பிட்டால் வறட்டு இருமல் குறையும். உணவில் அடிக்கடி பச்சை வெங்காயத்தை கலந்து சாப்பிட வயிறு தொடர்பான நோய்கள் குணம் ஆகும்.