Showing posts with label இனிப்பு. Show all posts
Showing posts with label இனிப்பு. Show all posts

Thursday, May 14, 2009

அவல் பாயசம்

தேவையானவை:

அவல் - 100 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
முந்திரி- 20
பால் - 2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
நெய் - கொஞ்சம்

செய்முறை:

நெய்யில் அவலையும் முந்திரியையும் வறுத்து மிக்ஸியில் பவுடராக செய்து 1 கப் பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அவலை வேகவிட்டு, பின் மீதி உள்ள பால் சேர்த்து கொதிக்கவிட்டு, கொஞ்சம் ஆறியபின் சர்க்கரை, ஏலக்காய்பொடி சேர்க்கவும். சுவையாக இருக்கும் இந்த பாயசத்தை சீக்கிரம் தயார் செய்து விடலாம்.

Thursday, April 2, 2009

சேமியா கேசரி

தேவையான பொருட்கள்:

வருத்த சேமியா - 250 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
முந்திரி -10
திராட்சை -10
ஏலக்காய் - 2
பால் – 100 கிராம்
நெய் – 50 கிராம்
கேசரி கலர் – 1 சிட்டிகை
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு முதலில் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுக்கவும். 1 கப் தண்ணீர், பால் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். 1 சிட்டிகை கேசரி கலர் மற்றும் பொடித்த ஏலக்காயை சேர்க்கவும். இதில் வருத்த சேமியாவை சேர்த்து வேக விடவும். தண்ணீர் நன்றாக சுண்டியவுடன் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான சேமியா கேசரி தயார்.

Monday, November 5, 2007

கார்ன் ப்ளார் அல்வா

தேவையான பொருட்கள்:

கார்ன் ப்ளார் -200கிராம் [1 டம்ளர்]
சர்க்கரை-400 கிராம்,
நெய்-500 கிராம்,
முந்திரி-50கிராம்,
பாதாம் பருப்பு-10 பொடியாக ஒடித்து கொள்ளவும்,
பிஸ்தா - 6 சிறியதாக் ஒடித்து கொள்ளவும்,
ஏலக்காய் -10,
சர்க்கரையுடன் பொடி செய்து கொள்ளவும்,
விருப்பமான கலர்- கொஞ்சம்,
தண்ணீர்- 2 டம்ளர்,

செய்முறை:

கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் நெய்விட்டு முந்திரி,பாதாம்,பிஸ்தா இவற்றை பொன் கலரில் வறுத்து எடுத்து கொண்டு 2 ஸ்பூன் நெய் விட்டு மாவை லேசாக வறுத்து கொள்ள வேண்டும்.வறுப்பதால் அல்வா கட்டி தட்டாது, வாசனையாகவும் இருக்கும். அந்த வாணலியை அடுப்பில் வைத்து 2 டம்ளர் நீர் ஊற்றி கொதி வரும் சமயம் வறுத்த மாவை கொஞ்சம், கொஞ்சமாக தூவி நன்கு கிளறவும். கொஞ்சம் நெய்யை ஊற்றவும். கை விடாமல் நன்கு கிளறவும். இப்போது சர்க்கரை போட்டு கை விடாமல் கிளறவும்.அடுப்பை சிம்மில் எரிய விட்டு செய்யவும்.கலரை சேர்க்கவும். நடுவில் நெய்யை ஊற்றி கிளறிகொண்டே இருக்கவும். மாவை வறுத்து செய்வதால் சீக்கிரமே ரெடி ஆகிவிடும். கடைசியில் முந்திரி, பாதாம், பிஸ்தா ஏலக்காய்தூள் சேர்த்து கெட்டியான பதம் வந்தவுடன் இறக்கவும். இந்த அல்வா செய்வது எளிது, டேஸ்ட் சூப்பராக இருக்கும். தேவையான பொருட்களை அருகில் வைத்து கொண்டு செய்யவும்.தேவையானால் வாசனைக்கு ரோஸ் எசன்ஸ் விடலாம்.

பெங்கால் ஸ்வீட்

தேவையான பொருட்கள்:

கெட்டியான பால்-1/2 லிட்டர்,
சர்க்கரை-1/2 கிலோ,
தேங்காய்-1,
முந்திரி-200கிராம்,
நெய்-100கிராம்,
ஏலபொடி-கொஞ்சம்,

செய்முறை:

தேங்காயை துருவி ,கொஞ்சம்பால், முந்திரியை சேர்த்து அரைத்து கொள்ளவும். கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை,ஏலத்தூள், அரைத்த விழுது, மீதி பால் ஊற்றி கிளறவும். கெட்டியாக வந்தபின் நெய்யை ஊற்றி கிளறவும். கொஞ்ச நேரத்தில் நன்கு சுருண்டு வரும்போது இறக்கி ஒரு நெய் தடவிய தட்டில் போட்டு, ஆறியபின் துண்டுகள் போடவும்.

கேரட் லட்டு

தேவையான பொருட்கள்:

கேரட்-1/2 கிலோ,
ரவை- 1/4 கிலோ,
கடலை மாவு- 2 ஸ்பூன்,
பால் கோவா- 1/4 கிலோ,
சர்க்கரை-3/4 கிலோ,
முந்திரி,பாதாம்,பிஸ்தா-சிறியதாக உடைத்து வைத்து கொள்ளவும்.
ஏலக்காய் பொடி கொஞ்சம்,
நெய்-1/2கிலோ,

செய்முறை:

கெட்டியான வாணலியில் 1 ஸ்பூன் நெய்விட்டு ரவையும்,கடலை மாவையும் பொன் நிறமாக வறுத்து கொள்ளவும். கேரட்டை துருவி அதோடு பால் கோவாவையும் சேர்த்து கொஞ்சம் நெய்விட்டு வதக்கி கொள்ளவும். சர்க்கரை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் வறுத்த ரவை, கேரட் உடைத்து வைதுள்ள முந்திரி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கெட்டியான பின் இற்க்கி வைத்து ஆறியபின் ல்ட்டுகளாக பிடிக்கவும்.

பாதாம் கீர்

தேவையான பொருட்கள்:

கெட்டியான பால்-1/2 லிட்டர்,
பாதாம்பருப்பு- 30,
சர்க்கரை- 1/2 கிலோ,
அரிசி மாவு- சிறிய ஸ்பூனில் 2,
தேங்காய்- 1,
ஏலக்காய்-2,
வெனில்லா எச்ன்ஸ்- 5 சொட்டுகள்.

செய்முறை:

தேங்காயை துருவி மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து வைத்துகொள்ளவும். பாதாம்பருப்பை ஊறவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாலை நன்கு காய்ச்சி பாதாம் விழுதுடன், அரிசிமாவு, சர்க்கரையை நன்கு கலந்து கை விடாமல் கிளறவும். கட்டி தட்ட கூடாது. இறக்கும் சமயம் தேங்காய்பாலை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இற்க்கி, ஏலக்காய், எசன்ஸ் போடவும். சூடாகவும் குடிக்கலாம் . ஆறிய பின் ஃ ப்ரிஜில் வைத்தும் குடிக்கலாம். அது அவரவர் விருப்பம் போல் செய்யலாம். கலர் வேண்டுமானால் குங்குமப்பூ போட்டு கொள்ளலாம். வாசனையாக இருக்கும்.

கேரட் அல்வா

தேவையான பொருட்கள்:

கேரட் துருவல்- 1 கப்
கெட்டியான பால்- 1 கப்
சர்க்கரை - 3 கப்
நெய் - 200கிராம்
முந்திரி - 10
ஏலக்காய்-2

செய்முறை:

கேரட் துருவலுடன் ஏலக்காய் போட்டு, கொஞ்சம் பால் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு அரைத்த விழுதை போட்டு பச்சை வாசனை போகும்வரை கிளறி கொண்டே சர்க்கரை போட்டு கிளறவும்.முந்திரியையும் போட்டு நன்கு கிளறி கெட்டியான பின் மீதி நெய்யும் ஊற்றி பதம் வந்தவுடன் இறக்கவும். சுவையான் கேரட் அல்வா தயார்.

பாசி பருப்பு பர்ஃபி

தேவையான பொருட்கள்:

1- கப் பாசிபருப்பை லேசாக வறுத்து மிக்ஸியில் பவுடர் செய்து கொள்ளவும்.
சர்க்கரை இல்லாத கோவா -50கிராம்,
சர்க்கரை- 2. 1/2கப்,
நெய்- 2. 1/2 கப்,
அழகுக்கு முந்திரி-10,

செய்முறை:

கெட்டியான வாணலியில் சர்க்கரை போட்டு அது முழ்கும் அளவுக்கு நீர் விட்டு கம்பி பதம் வரை கொதிக்க விடவும். மாவுடன் கோவாவை கலந்து வைத்து கொள்ளவும். பாகு கம்பி பதம் வந்தவுடன் மாவை கொஞ்சமாக தூவி கொண்டே கிளறவும். நடுவில் நெய்யை ஊற்றவும். எல்லாம் சேர்ந்து வாணலியில் ஒட்டாமல் வந்த சமயம், நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் தேவைபடும் அளவில் கட் செய்து ஒவ்வோரு துண்டிலும் ஒரு முந்திரியை வைத்து அழகு செய்யவும். உடலுக்கும் நல்லது. சுவையும் சூப்பர்.

பிரெட் குலோப் ஜாமுன்

தேவையான பொருட்கள்:

பிரெட் ஸ்லைஸ் - 8
கோவா - 25 கிராம்,
பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் - 2 ஸ்பூன்,
ஏலக்காய்தூள் -1/4 ஸ்பூன்,
பால்- 1/4-கப்,
ரோஸ் எசன்ஸ்- 1/4 ஸ்பூன்,
கேசரி கலர்- கொஞ்சம்,
பாகுக்கு சர்க்கரை- 1. 1/2 கப்,
ஜாமுன் பொரிக்க தேவையான நெய்[அ] எண்ணெய்.

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி, பிரட்டின் ஓரங்களை நீக்கி விட்டு பிசையவும். வேறு கிண்ணத்தில் கோவா, 1 ஸ்பூன் சர்க்கரை, பருப்புகள், ஏலக்காய்,சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்ட, நடுவில் பருப்புகளை வைத்து மூடி உருட்டவும். ஒரு கெட்டியான பாத்திரத்தில் சர்க்கரை, 1 டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். வேறு கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்[அ] நெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன் கலரில் பொரித்து எடுத்து, இறக்கி வைத்துள்ள பாகில் போடவும். மாவை விரல்களால் மெதுவாக பிசையவும். ஜாமூன் மிருதுவாக இருக்கும். சுவையும் சூப்பராக இருக்கும்.

இனிப்பு அப்பம்

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
வெல்லம் - 1.25 கப்
ஏலக்காய் - 5
எண்ணெய் பொரிக்க

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி 1மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும். வெல்லத்தல் சிறிது தண்ணீர் விட்டு சுடான பின் வடிகட்டவும். அதில் கோதுமைமாவு, அரைத்த அரிசி மாவு, ஏலக்காய்பொடி [சுக்கு] போட்டு இட்லி மாவு பதத்திற்க்கு கரைத்து, அதில் 1 ஸ்பூன் நெய் விட்டு வைக்கவும் குழிவாக உள்ள வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சிறிய கரண்டியால் மாவை எடுத்து ஊற்றவும். ஊற்றியவுடன் முதலில் கீழே தங்கி பின்பு தான் மேலே வரும். அவசரப்பட்டு திருப்பினால் பிரிந்து விடும். ஒரு பக்கம் சிவக்க விட்டு, திருப்பி போட்டு சிவந்த பின் எடுக்கவும். கரகரவென்று வேண்டும் என்றால் கொஞ்சநேரம் விட்டு எடுக்கலாம். அடுப்பை மிதமாக எரிய விடவேண்டும்.

அவல் கேசரி

தேவையான பொருட்கள்:

அவல் - 2 கப்
சர்க்கரை - 4 கப்
நெய் - 2 கப்
முந்திரி - 10
திராட்சை - 10
ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
கார்ன்ப்ளவர் - 2 ஸ்பூன்
ஒரு சிட்டிகை உப்பு.

செய்முரை:

அவலை வெறும் வாணலியில் நனறாக வறுத்து,மிக்ஸியில் ரவை போல் உடைத்து கொள்ளவும். கெட்டியான பாத்திரத்தில் நெய்-2ஸ்பூன் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். அதே பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அவல் ரவையை கொஞ்சம், கொஞ்சமாக தூவி கிளறவும். பாதி வெந்தபின், சர்க்கரை, தேவையானல் கேசரி பவுடர் 1/4 ஸ்பூன் போட்டு நன்றாக கிளறவும்.சிறிது,சிறிதாக நெய் ஊற்றி கிளறவும். அடுப்பை சிம்மில் எரியவிட்டு கிளறவும். கார்ன் ப்ளவரை லேசாக தூவிவிட்டு கிளறவும். கொஞ்ச நேரத்தில் நனறாக வெந்து விடும். கடைசியில் வறுத்த முந்திரி, திராட்சை,ஏலக்காய்தூள்,சிட்டிகைஉப்பு போட்டு இறக்கவும். 10 நிமிடத்தில் செய்து விடலாம். சூப்பராக இருக்கும்.

அக்கார அடிசல்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப்
பால் 3/4 லிட்டர்
வெல்லம் - 2.5 கப்
முந்திரி - 10 சிறியதாக பொடித்து கொள்ளவும்
திராட்சை - 10
ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 50 கிராம்

செய்முறை:

அரிசியை இரண்டு முறை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பாலை 1 கப் தண்ணீர் விட்டு காய்ச்சி பொங்கிவரும் போது அரிசியை போட்டு அடுப்பை சிம்மில் எரியவிடவும். நன்கு வெந்தபின். வெல்லத்தை அடுப்பில் வைத்து கரைந்தபின் கல், மண் இருந்தால் சுத்தம் செய்து வடிக்கட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். கெட்டி பாகு வந்தவுடன் அதை வெந்த சாதத்தில் போட்டு. கொஞ்சம் நெய்யை விட்டு நன்கு கெட்டியாகும் வரை அடி பிடிக்காமல் கிளறவும். நன்கு கெட்டியான பின் இறக்கி மீதி நெய்யை காய வைத்து அதில் முந்திரி, திராட்சை, வறுத்து சேர்த்துகடைசியில் ஏலக்காய் பொடி தூவி நன்கு கிளறி இறக்கி பரிமாறவும்.சூடாக சாப்பிட்டால் சுவை அறுமை.