Showing posts with label குறிப்புகள். Show all posts
Showing posts with label குறிப்புகள். Show all posts

Saturday, June 14, 2008

குறிப்புகள்: பஜ்ஜி

  1. பஜ்ஜிக்கு எந்த காய்கள் போட்டும் செய்யலாம். ஆனால் மெல்லியதாக நறுக்க வேண்டும். அப்போதுதான் காய்களும் வெந்து இருக்கும். காய்களை தடிமனாக நறுக்கினால் மேல் மாவு வெந்து இருக்கும். உள்ளே இருக்கும் காய்கள் வேகாது.
  2. மாவு கரைக்கும் போது இன்னும் கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து கொண்டால் இது போல் மொறு, மொறு அயிட்டங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் வாயு தொல்லை வராது.
  3. ஆரம்பத்தில் தண்ணீர் குறைவாக ஊற்ற வேண்டும். அதிகம் ஆனால் மறுபடியும் அதில் மாவு போட வேண்டி வரும். தண்ணீர் குறைவாக இருந்தால் பரவாயில்லை. உப்பும் அதேபோல்தான்.
  4. முதலில் எண்ணெய் கொஞ்சமாக வைத்து ஒன்று மட்டும் போட்டு உப்பு, காரம் பார்த்து பின் தேவையானால் போட்டு கொள்ளலாம்.
  5. காலிஃப்ளவர், பனீர் மஞ்சூரியன் செய்வதாக இருந்தால் மாவில் அந்த பொருள்களை கலந்துஃப்ரிஜில் மதியம் தேவை எனில் காலையிலேயே ரெடி செய்து வைத்து மாலையில் எடுத்து பொரித்து கொள்ளலாம். ஆனால் அன்றே உபயோகபடுத்தி விட வேண்டும்.
  6. சிலர் ஸ்நாஸ் செய்ய வாணலியில் அதிகமாக எண்ணெய் வைத்துதான் செய்வார்கள். அந்த பொருள் முழுகும் அளவுக்கு எண்ணெய் இருந்தால் போதும்.
  7. சீக்கிரம் வேலை முடிய ஒரே தடவையில் கலந்த பொருள்களை போடாமல் கொஞ்சம் கொஞ்சமாக போட்டால் எண்ணெயும் குறைவாகவே செலவு ஆகும். சுட்டெண்ணெய் உடலுக்கு கெடுதல் ஆவதை தடுக்கலாம். பொருளும் வேஸ்ட ஆகாது.
  8. கொஞ்சம் யோசனை செய்து செய்தால் செய்யும் பொருளும் ருசியாக, சூப்பராக வரும்.

Sunday, June 8, 2008

ருசியான சமையலுக்கு சில குறிப்புகள்

சமையல் ருசியாக இருக்க, செய்யும் குழம்பு, பொரியல், கூட்டு, கிரேவி,சட்னி,எதுவாக இருந்தாலும் செய்யும் அளவுக்கு தகுந்த படி மற்ற பொருள்களை சேர்க்க வேண்டும். அதிகமாக போனாலோ, குறைவாக இருந்தாலோ அதன் ருசி மாறிப் போகும். எல்லாவற்றுக்கும் இஞ்சிம் பூண்டு சேர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. மசாலா பொருட்கள் பிடிக்காதவர்கள் அதை சேர்க்காமலே ருசியாக செய்யலாம். சமையல் ஒன்றும் பெரிய விஷயமிலை. செய்ய தெரியாதவர்கள் கூட பயப்படாமல் தைரியமாக செய்தால் சமையல் ரொம்ப ஈஸி தான். செய்ய, செய்யதான் சமையல் வரும்.

அடுப்பை எரியவிடும்போது அதில் வைத்து சமைக்கும் பாத்திரத்திற்க்கு மேல் தீ எரிய கூடாது.தீ அதிகமானால் செய்யும் பொருட்கள் வேஸ்ட் ஆகிபோய்விடும்.ரொம்ப சிறியதாக எரிந்தாலும் சீக்கிரம் வேகாது.

செய்யும் பதார்த்தங்களை பொருத்து அடுப்பு மிதமாக எரிய வேண்டும்.

குக்கரில் காய்கள் வேகவைப்பதாக இருந்தால் மிதமாக எரியவிட்டு விசில் வரும்முன்பு [ அதாவது 1 நிமிடம்] காய்களின் அளவுகளை பொருத்து அடுப்பை அணைத்துவிட்டால் அதன் சூட்டிலேயே வெந்துவிடும்.

கீரைகள் செய்யும்போது கீரைகளை நன்கு கழுவி, பிழிந்து தேவையான வெந்தபருப்புடன், பச்சைமிளகாய்,வெங்காய், [தக்காளிபோடுவதாக இருந்தால்] கலந்து 1நிமிடம் விசில் வராமல் அடுப்பை அணைத்துவிட்டு திறந்தால் அதன் பச்சைகலரும் மாறாது. சத்தும் அப்படியே இருக்கும். சீக்கிரமே வெந்து இருக்கும்.

சாம்பாருக்கு சேர்க்கும் காய்களையும் பருப்பு தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு சிறிய குக்கர் [அ] ஃப்ரஷர் பேனில் வைத்தாலும் ஹையில் வைத்து விசில் வரும் முன்பே [1நிமிடம் போதும் ] அணைத்து விட்டால் வெந்துவிடும்.

குறைவான நபர்கள் இருக்கும் வீட்டில் மசாலா பொருட்களை கொஞ்சமாக போடனும். அதிகமானால் கசக்கும். ருசியும் மாறி போகும்.பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் சேர்க்காமலேயே செய்யலாம். ருசி வரும்.

கொஞ்சம் பொறுமையாகவும், யோசனையுடனும் சமையல் செய்தால் நம் வீட்டு சமையல் ஹோட்டல் சமையலைவிட சூப்பராக வரும். எதுவுமே நம் கையில்தான் இருக்கு. போடும் அளவு, செய்யும் முறை, பக்குவம் இதுதான் சமையல் ரகசியம்.

உப்பு எப்போதுமே குறைவாக போட்டு பின் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். அதிகமானால் அதற்கு எதையாவது கலந்தால் அதன் ஒரிஜனல் தன்மை போய் விடும். கொஞ்ச நாளில் சமையல் செய்ய அதுவும் சரியாகிபோகும். எந்த சமையல் செய்தாலும் அதுக்கு என்ன பொருட்கள் சேர்க்கவேண்டுமோ அதை மறக்காமல் சேர்த்தால் எல்லார் வீட்டு சமையலும் சூப்பர்தான்.

Friday, May 9, 2008

டிப்ஸ்

எந்த பொடிகள் செய்தாலும் அதனுடன் கல் உப்பு சேர்த்து அரைத்தால் வண்டுகள், பூச்சிகள் வராது. பொடி செய்தவுடன் பேப்பரில் போட்டு ஆறியபின் பாட்டிலில் போட்டு வைக்கவும். சூட்டுடன் போட்டு வைத்தால் பொடிகள் சீக்கிரமே கெட்டு போய் வண்டு, பூச்சிகள் வரும். அதே போல் எந்த வகை மாவு பொருட்களையும் மிஷினில் அரைக்கும் போதும், பேப்பரில் போட்டு ஆறியபின் எடுத்து வைக்கவும்.

பொடி செய்ய வரமிளகாய் வறுக்கும் போது கடைசியில்தான் வறுக்க வேண்டும் முதலிலேயே மிளகாயை போட்டால் கறுகிவிடும். சிகப்பு கலர் வராது. மிளகாய் தூள் சேர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அடுப்பை அணைத்து விட்டு மிளகாய் தூள் சேர்க்கவேண்டும். வாணலியின் சூட்டுக்கே வறுபட்டு விடும் ஏனெனில் அது மிஷினில் அரைத்து இருப்பதால் [ஏற்கனவே வறுபட்டு இருக்கும்]

Friday, December 21, 2007

புளி பேஸ்ட்

தேவையான அளவு புளியை சுடுநீரில் ஊறவைத்து,மிக்ஸியில் அரைக்கவும் ஓடு, நார் எதுவும் இல்லாமல் வடிகட்டி மைக்ரோ-ஹையில் மூடாமல் 10 நிமிடம் வைத்து நடுவில் ஒரு முறை கலந்து விடவும். தேவையான உப்பை போடவும். கெட்டியாக இருக்க வேண்டும். இதுதான் புளி பேஸ்ட் ஆறியபின் பாட்டிலில் போட்டு வைக்கவும்.

Tuesday, December 18, 2007

மைக்ரோவேவ் ஓவன் சமையல் டிப்ஸ்

மைக்ரோவேவ் ஓவன் சமையல் டிப்ஸ்:

1. ஓவனில் சமையலில் குறைந்த நேரத்தில் சமைக்கலாம். வைட்டமின், மற்றும் இதர சத்துக்களின் வேஸ்ட் ஆகாது. கையாள்வதும் எளிது.

2. சாதம் வைக்க குக்கரில் வைப்பதை விட அதிகமாக தண்ணீர் சேர்க்கவேண்டும். பச்சரிசி சாதம் சமைக்க ஒவனில் ,அரிசியும், தண்ணீரும் சேர்த்து ஓவனில் பாத்திரத்தை, மூடாமல் ஹையில் 5 நிமிடமும், பிறகு மூடி 15 நிமிடமும் வைக்கவும்.

3. சமைக்கும் பாத்திரத்தில் பாதி அளவு சமையல் பொருள் இருந்தால்தான் பொங்கி வழியாமல் சீராக சமைக்க முடியும். சுடு நீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவு.

4. புழுங்கல் அரிசியில் சாதம் வைக்க பச்ச்சரிசியில் வைப்பதுபோலவே நேரம் அளவு வைக்கவேண்டும்.

5. பாசுமதி அரிசியில் சமைக்கும் போது அரிசியும்,தண்ணீரும் சேர்த்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் ஹையில் வைக்கவும்.

6. பருப்பை வேகவைக்கும்போது அந்த பாத்திரத்தில் பருப்பும்,நீரும் பாதி அளவுதான் இருக்கவேண்டும். 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து வைத்தால் பொங்காது. 5 நிமிடங்களுக்கு 1 முறை வெளியே எடுத்து கலக்கிவிடவும்.

7. அதிக எண்ணெய் உபயோகபடுத்தி செய்யும் சமையலுக்கு 300 டிகிரி சென்டி கிரேட் தாங்கும் பாத்திரத்தைதான் உபயோகிக்கவேண்டும்.' மைக்ரோ-வேவ் ப்ரூஃப் ' என்று எழுதி இருக்கும் பாத்திரத்தை பார்த்து வாங்கவேண்டும்.

8. குழம்பு,மற்றும் கிரேவிகள் சமைத்தவுடன் வெளியே எடுத்தவுடன் குனிந்து பார்க்ககூடாது. அதிக சூட்டின் காரணமாக முகத்தில் படும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.

9. மூடியைத் திறக்கும் சமயம் மிகவும் கவனமாக மெதுவாக கொஞ்சம், கொஞ்சமாக திறக்கவும். அவசரமாக திறக்கும் சமயம் நீராவி வெளிவரும்போது காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.

10. ஓவனில் இருந்து பாத்திரத்தை வெறும் கைகளால் எடுக்ககூடாது.க்ளவுஸ் [அ] பிடித் துணியை பிடித்தோதான் எடுக்க வேண்டும்.ஏனெனில் ஓவனில் அலைகள் அதிகமாக இருக்கும்.கை சிறிது தவறினாலும் காயம் ஏற்படும்.

11. ஒவ்வொரு அவனிலும் ஒவ்வொரு மாதிரியான மின்சக்தியின் அளவுகள் குறிக்கபட்டு இருக்கும். அதில் இருக்கும் குறிப்பீட்டு முறையை படித்து புரிந்து கொண்ட பிறகே ஓவனை பயன்படுத்த வேண்டும்.

12. கேஸ்ஸில் சமைப்பதுபோலவே 1,2,3,4,5. இருப்பதுபோல் ஓவனிலும் மின் சக்தி 100 '/. 75 ./. 50 ./. 25 ./. என்று உள்ளன. அதிலும் ஓவனுக்கு ஓவன் மின் சக்தி குறியீடுகள் வித்யாசம் இருக்கும்.அதனால் நாம் உபயோகபடுத்தும் உணவின் அளவு, அதன் தன்மை, ஈரப்பதம் ஆகியவற்றை பொருத்தும் சமைக்கும் நேரம் வித்யாசப்படும்.

13. சப்பாத்திகளை மறுபடியும் சூடுசெய்யவேண்டுமானால் அவற்றை சுத்தமான துணியில் சுற்றி 30, முதல் 30 வினாடிகள் வைக்கவும். இட்லிகளை மறு சூடு செய்ய இட்லிகளை நீரில் நனைத்து அவன் பாத்திரத்தில் போட்டு மூடி, 10, 15 நிமிடம் வைக்கவும்.

14. உப்புமா, சாதம், பொரியலோ, பிரியாணியோ மறுசூடு செய்ய விரும்பினால் அவனில் வைக்கும் பாத்திரத்தில் அதை போட்டு சிறிதளவு நீரைத் தளித்து சூடு செய்தால் வறண்டு போகாமலும், அப்போதுதான் செய்தது போல் இருக்கும்.

15. ஒவனுக்கு பாத்திரங்கள் வாங்கும்போது அதற்காகவே தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் மைக்ரோ-சேஃப் என்று போட்டு இருந்தால் அவற்றை மறு சூடு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றையும் 3 நிமிடங்களுக்கு மேல் ஓவனில் வைக்க கூடாது. 110 டிகிரி சென்டிகிரேட் வரை தாங்கும் என்று கூறி கடைகளில் விற்கப்படும் பாத்திரங்களை வெறும் தண்ணீரில் வேகவைக்கும் உணவு பொருள்களை மட்டுமே தயாரிக்க முடியும்.

16. ஓவனில் உள்ள சுழலும் தட்டின் ஓரங்களில் பாத்திரத்தை வைத்து சமைத்தால் சீக்கிரம் உணவு சமைக்கப்ப்டும். உலோகபாத்திரங்களை ஓவனில் வைத்து சமைக்ககூடாது. ஏனெனில் அந்த உலோகத்தில் மைக்ரோ அலைகள் ஊடுருவ முடியாது. அது தவிர கண்ணாடிபோல் பிரதிபலித்து,ஓவனின் உட்புற உலோக தகட்டில் பட்டு பக்க விளைவுகள் ஏற்படும்.

17. அப்பளம் சுடும்போது, அப்பளத்தை சிறியதாக ஒடித்து கூரான முனை சுழலும் தட்டின் நடுபாகத்தை பார்ப்பதுபோல் வைத்தால் அப்பளம் சீராக சுடும். ஒன்றன் மேல் ஒன்றாக கூட வைத்து சுடலாம்.ஓவனில் வைக்கும் பாத்திரத்தை அலுமினியம் ஃபாயிலினால் முழுவதுமாக மூடி வைக்க கூடாது. அதிக அளவு வேககூடாது என்ற பகுதியை மட்டும் ஃபாயிலினால் மூட வேண்டும். அந்த அலுமினியம் ஃபாயில் ஓவனின் உட்புற உலோகதகடு உள்ள எந்த பாகத்தையும் தொடகூடாது. அப்படி தொட்டுகொண்டு இருந்தால் ஒவன் சீக்கிரம் ரிப்பேராகிவிடும். அதனால் தீ விபத்தும் ஏற்படலாம்.

18. உப்புமா செய்யும் போது, மிக குறைந்த எண்ணெயில் தயாரித்தபின், வெளியே எடுத்தபிறகு தேவையான எண்ணெய்ச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வைத்து எடுக்கவும். எண்ணெயின் கொதிநிலை 300 டிகிரி சென்டிகிரேட் என்பதால் முதலிலேயே முழு எண்ணெய் சேர்க்ககூடாது.

19. காய்களை ஒரே அளவாக நறுக்கிகொண்டுதான் வேகவைக்கவேண்டும். வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும். உப்பை முதலிலேயே சேர்த்தால் காய்கள் வறண்டுவிடும்.ஆதலால் வெந்தபின்புதான் உப்பு சேர்த்து சமைக்க வேண்டும்.

20. உருளைக்கிழங்கு, கத்தரிக்காய்,சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்ற தோல் தடிமனான காய்களை முள் கரண்டியால் குத்தியோ, அல்லது துண்டாகவோ செய்துதான் ஓவனில் வைக்க வேண்டும்.தோலுடன் கூடிய நிலக்கடலையை வேகவைக்க அது முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மைக்ரோ-ஹையில் 10 நிமிடம்மூடி வைக்கவும். பின் வெளியே எடுத்து உப்பு போட்டு 5 நிமிடங்கள் ஊறியபின் வடியவிட்டு சாப்பிடவும்.

21. ஓவனின் உள் பக்கத்தையும்,வெளிபக்கத்தையும் துடைத்து சுத்தமாக ஈர துணியால் துடைக்கவும். அதிக நாட்கள் உழைக்கும். மைக்ரோவேவ் சமையலில் உள்ளே வைக்க அகன்ற பாத்திரங்களையே உபயோகிக்க வேண்டும்.

Thursday, November 15, 2007

டிப்ஸ்

எலுமிச்சை சாறில் ஒரு ஸ்பூன் தேன் 1+1 என்ற அளவில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகள் பலப்படும்.

1 ஸ்பூன் தேனில் கடுகு அளவு லவங்கபொடியை குழைத்து சாப்பிட அக உறுப்புகள் அனைத்தும் பலம்பெறும்.

சிறிய வெங்காயத்தின் சாறு 1 ஸ்பூன்,தேன் 1 ஸ்பூன் கலந்து சாப்பிட உடலின் சக்தி கூடும். இஞ்சியை தோல் நீக்கி, துண்டாக நறுக்கி தேனில் ஊறவைத்து ஒரு துண்டுகள் 4 முறை சாப்பிட சக்தி கூடும்.

பச்சை சுண்டைக்காயை அடிக்கடி சமைத்து உண்டால் சளி, கபகட்டு, வயிறு சம்பந்தபட்ட நோய்கள் தீரும். தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால் தலைசுற்றலுக்கு நல்லது.

சிறிது சுக்கை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட வாயு,விக்கல் போகும். சூட்டினால் வயிற்றில் வலி இருந்தால் சுடுநீரில் [1கப்] பெருங்காயம், துளி உப்பு கலந்து மெதுவாக குடித்தால் குணம் தெரியும். 1ஸ்பூன் சீரகத்தை நன்றாக மென்று தின்று 1 டம்ளர் சுடுநீர்[ வெந்நீர்] மெல்ல குடித்தாலும் குணம் தெரியும்.

பேரிச்சம்பழம் 5 தினமும் சாப்பிட்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடி நரம்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.பாசி பயறை முளைகட்டி சாப்பிட, வெந்நீரில் தினசரி தேன் கலந்து சாப்பிட, நெல்லிக்காயை[அ] நெல்லி பொடியை தேனில் கலந்து சாப்பிட, வாரம் ஒரு தடவையாவது சுண்டைக்காயை சமையலில் சேர்த்துகொள்ளலாம். வசம்பு பொடியை காலை,மாலை 1/4 ஸ்பூன் சுடுநீரில் கலந்து குடித்தாலும் நரம்பு தளர்ச்சி நீங்கும்.

ஃபிரிட்ஜ் இருக்கிறதே என்று நிறைய காய்களை வாங்கி அடைக்க வேண்டாம். மலிவாக கிடைக்கிறது என்றும் ஃப்ரிட்ஜில் காய்களை அடைக்க வேண்டாம். 2 நாட்களுக்கு ஒரு முறை காய்கள் வைக்கும் கவர்களை மாற்ற வேண்டும். பார்க்காமல் விட்டால் எல்லாம் அழுகி போய்விடும். தினமும் அரிசி உணவை குறைத்து காய்கள்,பழங்கள், சூப்,சாலட், என்று சாப்பிட்டால் உடலுக்கு சத்து கிடைக்கும்.

தேங்காய் நிறைய இருந்தால் துருவி ஃப்ளாஸ்டிக் பாக்ஸில் போட்டு ஃப்ரிசரில் வைத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் அப்போதுதான் துருவியதுபோல் இருக்கும். ஆனால் 2 நிமிடம்முன்பே தேவையானதை எடுத்து வெளியில் வைத்து கொள்ள வேண்டும். சட்னிக்கு தேவைஎனில் அதில் கொஞ்சம் சுடுநீர் ஊற்றி ஆறியபின் உபயோகபடுத்தலாம்.

முட்டைகோஸ் வாங்கும்போது இலைபிரியாமலும்,பச்சையாகவும் இருந்தால் புதியது. கீரைகள் மஞ்சளாக இருந்தாளோ, பூத்து இருந்தால் அது பழையது.

Monday, November 5, 2007

டிப்ஸ் [பாயசம் சுவை அதிகரிக்க]

1. தீயை மிதமாக எரியவிட்டு பாலை சுண்டவிட்டால் பாயசம் திரட்டுபால் வாசனையுடன் சூப்பராக இருக்கும்.

2. பாலில் வேக வைத்து செய்ய கூடிய பாயசங்களை தீயை குறைத்து வேக வைத்தால் நாம் மறந்து வேறு வேலையாக இருந்தால்கூட தீய்ந்து போய்விடாது. மிதமாக எரிவதால் சுவை கூடும்.

3. பால் கெட்டியாக இருந்து, பால் சுண்டும் நிறம் தேவை எனில் [லைட் ப்ரவுன்] வெறும் வாணலியில் காய்ந்தபின் 2 ஸ்பூன் சர்க்கரை போட்டு குறைந்த தீயில் வைத்து கரைய விட்டால் அந்த கலர் வரும். அதில் செய்த பாயசத்தை கலந்தால் பாலை சுண்ட வைத்த எஃபெக்ட் கிடைக்கும்.

4. சூடாக பரிமாறும் பாயசங்களை விட, குளிர வைத்துப் பரிமாறும் பாயசங்களுக்கு கூடுதலாக சர்க்கரை போடனும். [ சிலர் பாயசம் செய்து ஃப்ரிஜ்ஜில் வைத்து சாப்பிடுபவர்களுக்கு]

5. பாயசத்துக்கு ஏலக்காய் பொடி செய்பவர்கள் ஏலக்காயை லேசாக வறுத்து கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து வைத்து கொண்டால் மிகவும் செளகரியமாக இருக்கும். ஏலக்காய் போட்டு செய்யும் ஸ்வீட்களுக்கு போட்டு கொள்ளலாம்.

6. கண்டென்ஸ்ட்டு மில்க் வாங்கி சேர்க்க முடியாத நிலையில், பாலையே அதிகமாக சேர்த்து காய்ச்சும்போது சிறிய தட்டை பால் காய்ச்சும் பாத்திரத்தில் போட்டுவிட்டால் பால் பொங்காமல் சீக்கிரம் சுண்டி விடும். பால் பாதி சுண்டிய பின் தட்டை எடுத்து விடலாம்.

7. எந்த பாயசம் செய்தாலும் 10,முந்திரி, பாதாம்பருப்பு,பிஸ்தா பருப்பு, இவற்றையும் வறுத்து பொடி செய்து வைத்து கொண்டு கடைசியில் இறக்கும் சமயம் சேர்த்தால் சுவைகூடும். சில பேர் பருப்புகளை எறிந்து விடுவார்கள். இது தவிர்க்கப்படும். ஏனெனில் இந்த பருப்புகள் எல்லாம் விலை அதிகம்.

டிப்ஸ்

1. வேலைக்கு செல்பவர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் புளியை நேரம் கிடைக்கும் போது புளியை கெட்டியாக கரைத்து, உப்பு போட்டு கொதிக்கவிட்டு பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டு, சமையலுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.

2. கறும்பு சாறு சேர்த்து சர்க்கரை பொங்கல் செய்தால் சுவையோ,சுவை.

3. மெது வடைக்கு அரைக்கும் போது ஒரு கைப்பிடி சாதம் சேர்த்து அரைத்தால் மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே சாப்டாகவும் இருக்கும்.

4. தோசை கருகாமல் வர ஒவ்வொரு தோசை ஊற்றும்போதும் லேசாக தண்ணீர் தெளித்து ஊற்றினால் பொன் தீயாமல் நிறமாக வரும்.

5. பலகாரங்களுக்கு வெள்ளை எள்ளை விட கறுப்பு எள் நல்லது.பார்க்கவும் அழகாக இருக்கும்.ருசியும் சூப்பர்.

6. காய்கறிகளை பொடியாக ந்றுகினால் சீக்கிரம் வெந்து விடுவதுடன், காயின் நிறமும்,சத்தும் கிடைக்கும்.காய் நறுக்கியதை பார்த்தாலே சாப்பிட ஆசை வர வேண்டும்.

7. காய்களை புதியதாக வாங்கி சமைத்தால், சத்தும், வாசனையும் அபாரம்.

8. ஃப்ரிஜ் இருக்கறது என்று நிறைய காய்களை வாங்கி அடைக்க வேண்டாம்.

9. திட்ட மிட்டு சமையல் செய்தால் பொருளும் வேஸ்ட் ஆகாது. சீக்கிரமாகவும் செய்து விடலாம். ஏனோ தானோ என்று சமைக்க கூடாது. சமையல் ஒரு கலை ஆதலால் பொறுமையாகவும், பக்குவமாகவும், ரசனையுடன் சமைக்க வேண்டும்.

10. திட்டமிட்டு சமையல் செய்ய எல்லாம் ரெடி செய்து கொண்டு அடுப்பை பற்ற வைத்தால் சமைக்கும் நேரமும்,கேஸும் குறைவாகவே ஆகும்.

11. நேரம் கிடைக்கும் போது இஞ்சி, பூண்டை உறித்து, உப்பு சேர்த்து அரைத்து வைத்து கொண்டால், மசாலா குழம்பு வகைகளுக்கு ஏற்றது.

12. பச்சைமிளகாயை உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து வைத்து கொண்டால் சில்லி பேஸ்ட்.

13. மிளகு சீரகம் பொடிசெய்து வைத்து கொண்டால் அவசர ரசத்திற்க்கு கை கொடுக்கும்.

14. கட்டி பெருங்காயம்,வெந்தயம் வறுத்து பொடி செய்து வைத்து கொண்டால் எல்லா வகை குழம்புகளுக்கும் கை கொடுக்கும்.

15. இஞ்சி நிறைய இருக்கும் சமயங்களில் தோல் சீவி பொடியாக நறுக்கி, மிளகு, சீரகம், 1/4ஸ்பூன் உப்பு சேர்த்து பொடி செய்து வைத்து கொண்டால், வெண் பொங்கல், மற்ற சமையலிலும் பயன் படுத்தி கொள்ளலாம்.

16. எந்த பொடி வகை செய்தாலும் கொஞ்சம் கல் உப்பையும் சேர்த்து பொடி செய்து கொண்டால் ரொம்ப நாடகள் ஆனாலும் கெடாது.

17. கலர் பொடி சேர்ப்பத்ற்க்கு பதில் லெமன் சால்ட், எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். புளியை ஊற வைக்கும் போதே சிறிது கல் உப்பும் சேர்க்கலாம்.

18. சமையலில் நல்ல எண்ணெய் அதிகம் உபயோகப்படுத்தினால் உடலுக்கு நல்லது.

19. சாம்பாரில் பருப்பை சேர்க்கும் போதுநன்கு கொதிக்க விட்டு இறக்கினால் அதிக நேரம் கெடாது.

20. காய்களை எண்ணெயில் 1 நிமிடம் வதக்கி விட்டு போட்டால் வாசனையாக இருக்கும்.விரைவில் வெந்துவிடும்.

21. ரசத்திற்க்கு பருப்பு தண்ணீர் விட்டு நுரைத்து வந்தவுடன் இற்க்கி 1 ஸ்பூன் நெய்யில் கடுகு, மிளகு, சீரக பொடி, கடா பெருங்காயம் பொடித்துபோட்டால் மணமாக இருக்கும்.

22. தேங்காய் பால் ஊற்றி செய்யும் குழம்புகளுக்கு இறக்கும் போதுதான் பால் ஊற்ற வேண்டும் இல்லையெனில் பால் திரிந்துவிடும்.

23. அல்வா செய்யும் சமயம் பதம் தவறி நீர்த்துவிட்டால் கார்ன் ஃப்ளார் மாவை தேவையான அளவு சேர்த்துபின், [அதற்கு தகுந்த சர்க்கரைபோடவும்] ஆறியபின் விரைவில் கெட்டியாகிவிடும். அல்வாவும் மினுமினுப்பாக, சுவையாக இருக்கும்.

24. குலோப்ஜாமூன் செய்ய சர்க்கரை பாகில் எலுமிச்சை சாறு 5 சொட்டுகள் விட்டால் பாகு இளகியே இருக்கும்.

25. ரவா கேசரி செய்யும் சமயம் நீர்த்து விட்டால், அதை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு கோதுமை மாவு கொஞ்சம் எடுத்து வறுத்து போட்டால் கெட்டியாகிவிடும். 2 ஸ்பூன் நெய்விட்டால் சூப்பராக இரூக்கும்.