Showing posts with label வடை. Show all posts
Showing posts with label வடை. Show all posts

Friday, May 15, 2009

அவல் வடை

தேவையான பொருட்கள்:

அவல் - 200 கிராம்
உருளைக்கிழங்கு - சிறியதாக ஒன்று
பச்சைமிளகாய் - 6
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

அவலை மிக்ஸியில் குருணையாக பொடித்து தண்ணீர் ஊற்றி நன்கு அலம்பி வடித்து விடவும். அதில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். அதிலேயே அவல் ஊறிவிடும். உருளைக்கிழங்கை வேக்விட்டு , உதிர்த்து கொள்ளவும். ஊறிய அவலுடன் உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய்,வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை, உப்பு எல்லாம் போட்டு நன்கு கலந்து, பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொண்டு வாணலியில் எண்ணெய் காயவிட்டு வடைகளாக தட்டி பொன் கலரில் பொரித்து எடுக்கவும்.

Monday, November 5, 2007

ரவா வடை

தேவையானவை:

ரவை- 1 கப்,
தயிர்- கொஞ்சம், ரவையில் போட்டு பிசைந்தால் கெட்டியாக
இருக்க வேண்டும்,
இஞ்சி- சிறிய துண்டு,
பச்சை மிளகாய்-4,
கறிவேப்பலை,மல்லி இலை கொஞ்சம்,
உப்பு- 1ஸ்பூன்,
பொரிக்க எண்ணெய்.

செய்முறை:

ரவையில் தயிரை ஊற்றி வைக்கவும் அதில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை,மல்லி, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து, எண்ணெய் காய வைத்து வடைகளாக தட்டி எடுக்கவும். 5 நநிமிடத்தில் மொறு,மொறுப்பான வடை ரெடி. அடுப்பை சிம்மில் எரிய விடவும். அப்போதுதான் உள்ளே வெந்து மேலே கரகரவென்று இருக்கும்.

சேமியா வடை

தேவையான பொருட்கள்:

சேமியா-100கிராம்,
கடலை மாவு-50 கிராம்,
பெரிய வெங்காயம்-1,
சிறிய கேரட்-1,
இஞ்சி- 1துண்டு,
பச்சை மிளகாய்-6,
கறிவேப்பிலை,மல்லி, உப்பு தேவையானது,

செய்முறை:

சேமியாவை 10 நிமிடம் நீரில் ஊற வைக்கவும். கேரட்டை துருவி,வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி, கடலைமாவு,ஊறவைத்த சேமியாவுடன் கலந்து,உப்பு போட்டு, எல்லாவற்றையும் போட்டு கெட்டியாக பிசைந்து, உருட்டி வடைகளாக தட்டி போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

மசால் வடை

தேவையான பொருள்கள்:

கடலைபருப்பு- 1 கப்,
துவரம்பருப்பு- 2 ஸ்பூன்,
பட்டாணிபருப்பு-1 கப்,
வரமிளகாய்-10,
இஞ்சி-சிறிய துண்டு,
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1/4 கப்,
கறிவேப்பிலை சிறிது,
உப்பு தேவையானது,

செய்முறை:

எல்லா பருப்புகளையும் கலந்து 30நிமிடம் ஊற வைத்து, மிளகாய், கல் உப்பு , இஞ்சி போட்டு கரகரப்பாக அரைக்கவும்.அரைத்தபின் வெங்காயத்தையும் போட்டு நன்கு கலந்து, வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். அரைக்கும் மாவு கெட்டியாக இருந்தால்தான், வடை ரொம்ப நேரம் இருந்தாலும் மொறு,மொறுப்பாக இருக்கும்.

மெது வடை

தேவையான பொருள்கள்:

வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ,
ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி,
இஞ்சி- சிறிய துண்டு,
பச்சை மிளகாய்-10,
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொஞ்சம்,
உப்பு தேவையானது,[கல் உப்பு]
கல் உப்பு போடுவதால் எண்ணெய் குடிக்காது,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்-1/2 கப்,

செய்முறை:

பருப்பு, அரிசி,ஊற வைத்து, வடித்து கெட்டியாக அரைத்து கொண்டு மாவை எடுத்தால் பந்து மாதிரி கையில் ஒட்டாமல் வர வேண்டும். அதில் இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, போட்டு கலந்து, உப்பை மாவை எடுக்கும் சமயம் போட்டு அரைத்து எடுக்கவும்] எண்ணெய் காய வைத்து வடைகளாக தட்டி எடுக்கவும். தண்ணீர் அதிகமாகி விட்டால் கொஞ்சம் ரவை சேர்த்துக் கொள்ளலாம். அடுப்பை மிதமாக எரிய விட வேண்டும். பொன்கலரில், மொறு, மொறுப்பான வடை ரெடி. தயிர் வடை வேண்டும் எனில் தேவையான தயிரில் கொஞ்சம் கேரட்டை துருவி போட்டு, 1 ஸ்பூன் தேங்காய், 2 பச்சைமிளகாய் அரைத்து கலந்து கொஞ்சம் உப்பு தூவி, கடுகு தாளித்தால் தயிர் வடை ரெடி. மேலே மல்லி தழை தூவி அலங்கரிக்கவும். தயிர் புளிக்காமல் இருக்க வேண்டும்.