Showing posts with label மாவு. Show all posts
Showing posts with label மாவு. Show all posts

Saturday, May 10, 2008

சத்து மாவு

தேவையான பொருட்கள்:

கோதுமை, கம்பு, பாசி பயறு, உளுந்து, சோயா, கேழ்வரகு, பொட்டு கடலை - தலா - 100 கிராம்
பாதாம், முந்திரி, பிஸ்தா- தலா 25 கிராம்
சாப்பாட்டு புழுங்கல் அரிசி - 1/2 கிலோ

செய்முரை:

பயறுகளை முதல் நாளே சுத்தம் செய்து ஊற விட்டு இரவில ஹாட் பாக்ஸில் போட்டு வைத்தால் நன்கு முளைவிட்டு இருக்கும். அரிசியை கழுவி சுத்தம் செய்து எல்லா பொருள்களையும் ஒன்றாக கலந்து வெயிலில் காய விட்டு மிஷினில் அரைத்து ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்து தேவைபடும்போது 1- ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து கொதிக்கவிட்டு பின் பால், சர்க்கரை கலந்து குடிக்கவும. இல்லையெனில் பாலுக்கு பதில் போர் கலந்தும் குடிக்கலாம். சர்க்கரை கலந்து குடிப்பவர்கள் 5 ஏலக்காய் கலந்து அரைத்து கொள்ளலாம். வெயில் காலத்தில் உப்பு போட்டு மோர் கலந்து குடித்தால் உடல் உஷ்ணத்தை குறைக்கும். சத்துள்ளதுகூட.

Friday, May 9, 2008

அடை மாவு

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1 கப்
பட்டாணிப் பருப்பு, துவரம்ப் பருப்பு - தலா 1 கப்
இட்லிக்கு போடும் புழுங்கல் அரிசி - 2 கப்
வரமிளகாய் - 10
சீரகம் - 2 ஸ்பூன்
கல் உப்பு- கொஞ்சம். 

செய்முரை:

இவற்றை ஒன்றாக கலந்து வெயிலில் காய வைத்து மிஷினில் குருனையாக அரைத்து [ ரவைபோல்] வைத்து கொண்டு தேவைபடும் சமயம் பெருங்காயம், கறிவேப்பிலை,பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி போட்டு கொஞ்ச நேரம் ஊறவைத்து அடைகளாக ஊற்றவும். மெல்லியதாக வேண்டும் எனில் கொஞ்சம் மாவை தண்ணியாக கரைத்து கொள்ள வேண்டும். புளிப்பாக அடை வேண்டும் எனில் மோர் கலந்து [தண்ணீருக்கு பதில்] ஊறவிட்டு அடைகளாக ஊற்றவும்.

எல்லா பயறு வகைகள் கலந்தும் அடை வார்க்கலாம். உளுந்து கலப்பதால் அடை பிய்ந்து போகாமல் அழகாக வரும். மொறுகலாகவும் வரும். எல்லா பயறுகளையும் முதல் நாள் ஊற விட்டு மறுநாள் ஹாட் பாக்ஸில் போட்டு வைத்து 1 மணி நேரம் கழித்து பார்த்தால் நன்கு முளைவிட்டு இருக்கும் . அரிசியை மட்டும் ஊற வைத்து [ மேலே சொன்ன அதே அளவு] பயறுகளை மிக்ஸியில் அரைத்து,சீக்கிரம் மாவாகிவிடும். பின்அரிசியுடன், 10 வர மிளகாய், உப்பு, பெருங்காயம், கொஞ்சம் கறிவேப்பிலை இஞ்சி ஒரு துண்டு போட்டு குருனையாக அரைத்து அந்த மாவில் 2- ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கல்ந்து அடைகளாக ஊற்றவும்.