தேவையானவை:
அவல் - 200 கிராம்
லேசாக புளித்த மோர் - 500 கிராம்
பச்சை மிளகாய் - 4
கடுகு - 1/4 ஸ்பூன்
பெருங்காயதூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையானவை
ஊப்பு - ருசிக்கு ஏற்ப
கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்
செய்முறை:
அவலை மிக்ஸியில் நன்கு பொடிசெய்து கொள்ளவும். அதில் மோரை கலந்து ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், தேவைஎனில் உளுத்தம்பருப்பு, கடலைபருப்பும் தாளித்து கொள்ளலாம். ஊறிய அவலில் உப்பும் போட்டு நன்றாக கலந்து கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது மோர் கலந்து வாணலியில் ஊற்றி கெட்டியாகும் வரை போட்டு கிளறவும். கையில் ஒட்டாமல் வந்ததும் வாசனைக்கு 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, மல்லி போட்டு கலந்து சாப்பிடலாம். மோர் மிளகாய் இருந்தால் தாளிக்கும்போது போடலாம். வாசனையாக இருக்கும்.
Showing posts with label களி. Show all posts
Showing posts with label களி. Show all posts
Thursday, May 14, 2009
Monday, November 5, 2007
வெந்தய களி
தேவையான பொருட்கள்:
வெந்தயம் -1 கப்
பனை வெல்லம் [எ] கருப்பட்டி தூள் செய்தது - 2 .5 கப்
நல்லெண்ணெய் - 1 கப்
செய்முறை:
வெந்தயத்தை [2,3] முறை நன்கு மண் போக கழுவிமுதல்நாள் இரவே ஊற வைக்க வேண்டும்.காலையில் வடிக்கட்டி மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கெட்டியாக [வடைக்கு அரைப்பதுபோல்] அரைக்க வேண்டும். தூள் செய்த பனை வெல்லத்தை கல், மண் போக சுத்தம் செய்து, அதனுடன் அரைத்த வெந்தயத்தை போட்டு அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு அதில் வெந்தய விழுது, வெல்லபாகு ஆகியவற்றை போட்டு நன்கு கிளற வேண்டும்.வாணலியில் ஒட்டாத பதம் வரவெண்டும். இதை சூடாகவே சாப்பிடலாம். இதை சாப்பிட்டால் பல நோய்களுக்கு காரணமான மலச்சிக்கல் வரவே வராது. வெந்தயத்தில் உள்ள வழுவழுப்பான பொருள் எலும்புகள் தேயாமல், மூட்டு வலிகள் வராமலிருக்கும். இடுப்புக்கு வலு கொடுக்கும். தோல் சுருக்கம் வராது. ஊளை சதை குறையும். இன்னும் பல நன்மைகள் வெந்தயகளிக்கு உண்டு.
வெந்தயம் -1 கப்
பனை வெல்லம் [எ] கருப்பட்டி தூள் செய்தது - 2 .5 கப்
நல்லெண்ணெய் - 1 கப்
செய்முறை:
வெந்தயத்தை [2,3] முறை நன்கு மண் போக கழுவிமுதல்நாள் இரவே ஊற வைக்க வேண்டும்.காலையில் வடிக்கட்டி மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கெட்டியாக [வடைக்கு அரைப்பதுபோல்] அரைக்க வேண்டும். தூள் செய்த பனை வெல்லத்தை கல், மண் போக சுத்தம் செய்து, அதனுடன் அரைத்த வெந்தயத்தை போட்டு அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு அதில் வெந்தய விழுது, வெல்லபாகு ஆகியவற்றை போட்டு நன்கு கிளற வேண்டும்.வாணலியில் ஒட்டாத பதம் வரவெண்டும். இதை சூடாகவே சாப்பிடலாம். இதை சாப்பிட்டால் பல நோய்களுக்கு காரணமான மலச்சிக்கல் வரவே வராது. வெந்தயத்தில் உள்ள வழுவழுப்பான பொருள் எலும்புகள் தேயாமல், மூட்டு வலிகள் வராமலிருக்கும். இடுப்புக்கு வலு கொடுக்கும். தோல் சுருக்கம் வராது. ஊளை சதை குறையும். இன்னும் பல நன்மைகள் வெந்தயகளிக்கு உண்டு.
Subscribe to:
Posts (Atom)