Showing posts with label பிரியாணி. Show all posts
Showing posts with label பிரியாணி. Show all posts

Thursday, May 14, 2009

அவல் பிரியாணி

தேவையானவை:

அவல் - 200 கிராம்
அவரவர்க்கு பிடித்த காய்களும் போட்டுக் கொள்ளலாம். பொடியாகவோ, மெல்லிய நீள துண்டுகளாகவோ, நறுக்கவும்.
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பற்கள்
பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு வாசனைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு


செய்முறை:

அவலை 2 முறை நன்கு கழுவி, நன்கு வடியவிட்டு வைக்கவும். இருமுறை அலம்பும் போதும் தண்ணீர் ஊற்றுவதால் அதிலேயே ஊறி தண்ணீரை உறிஞ்சுகொள்ளும். தனியாக நீரூற்றி ஊறவக்க்த்தேவை இல்லை. இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்த உடனேயே இஞ்சி, பூண்டு விழுது போட்டுவிட்டு நீளமாக நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்க்கவும். வெங்காயம் சிவக்க வதங்கியபின் காய்களுடன், உப்பு போட்டு பாதி வதங்கியபின் அவலையும் போட்டு நன்கு வதக்கவும்.

அடுப்பை சிம்மில் எரியவிடவும். தேவை எனில் பிரட்டை நெய்யில் பொரித்தும் போடலாம். அவல் பிரியாணியை எளிதில் செய்து விடலாம். மேலே மல்லி இலை, புதினா இலைகளை போட்டு சாப்பிடவும். சூப்பராக இருக்கும்.

Monday, May 26, 2008

ரவா குஸ்கா

தேவையானவை:

ரவை- 1 கப்,
பெரிய வெங்காயம்- 2 நீளமாக மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்,
இஞ்சி, பூண்டு விழுது- 2 ஸ்பூன்,
பச்சை மிளகாய்- 5 கீறி கொள்ளவும்,
பட்டை-1 லவங்கம்-2
உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
தேங்காய் பால் -2 கப், [அ] சாதாரணபாலில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து வைத்து கொள்ளவும்.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தபின் பட்டை, லவங்கம், இஞ்சி,பூண்டு விழுது போட்டு நன்கு வதங்கியபின் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கியபின் தேங்காய் பால் ஊற்றி கொதி வரும்போது உப்பும் ரவையும் போட்டு கிளறவும். 2 நிமிடத்தில் நன்கு வெந்துவிடும். ரவை வெறும் வாணலியில் பொன் கலரில் வறுத்து கொண்டு விடவும். வறுப்பதால் வாசனையாகவும். குழையாமலும் வரும். 1 ஸ்பூன் நெய் விட்டு இறக்கவும்.ரவை குஸ்கா ரெடி.

Monday, November 5, 2007

தக்காளி பிரியாணி

செய்முரை:

பாசுமதி ரைஸ் - 2 கப், தக்காளி [நன்றாக பழுத்த சிகப்பு கலராக உள்ள பழமாக இருந்தால் சுவையாக இருக்கும்]. அரிசியை நன்கு கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறுவதால் சாப்டாக இருக்கும். ப்ரஷர் பேனை அடுப்பில் வைத்து, 2 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, சீரகம், 1/4 ஸ்பூன் பெருங்காயம், போட்டு ஒரு பெரிய வெங்காயதை ஸ்லைஸாக நறுக்கி போட்டு பொன் நிறமாக வதங்கியவுடன். தக்காளியை பொடி, பொடியாக நறுக்கி பொட்டு மசித்து விட்டு, அரிசியையும், வடிய விட்டு வெங்காயத்துடன் போட்டு சிறிது நேரம் வதக்கி, 3 கப் தண்ணீர் ஊற்றி, 2 ஸ்பூன் உப்பு போட்டு, நன்கு கலந்து பேனை முடி விடவும். சிம்மில் 1 விசில் விட்டு இறக்கவும். பரிமாறும் போது மல்லி இலை தூவி உடனே பரிமாறவும்.

நூடுல்ஸ் பிரியாணி

செய்முறை:

எந்த வகையான நூடுல்ஸ் வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம். தேவையான நூடுல்ஸை கொத்க்கும் நீரில் போட்டு 2 நிமிடம் விட்டு நீரை வடித்துவிட்டு, நன்கு உதிராக வைத்துக் கொள்ளவும். பிடித்தமான காய்கறிகளை, நறுக்கி கொண்டு, அடுப்பில் ப்ரஷர் பேனை வைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை 1, லவங்கம் 3, ஏலக்காய் 2 இவற்றை போட்டு வறுபட்டபின் இஞ்சி, பூண்டு விழுது 1 ஸ்பூன் போட்டு பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய காய்களை போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து உப்பு, கறிமசால்பொடி 1 ஸ்பூன் போட்டு வதங்கிய பின் வடிய வைத்துள்ள நூடுல்ஸை போட்டு உடையாமல் கிளறவும். சுவையான நூடுல்ஸ் தயார். மேலே தக்காளி,வெள்ளைக்காய், வெங்காயம் வட்டமாக நறுக்கி மல்லி இலை தூவி பரிமாறவும்.தேவையானால் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கொள்ளலாம். செய்தவுடன் சாப்பிடவும். 10 நிமிடத்தில் செய்து விடலாம்.

அவல் பிரியாணி

செய்முறை:

அவல் - 1/4 கிலோ அவலை நன்கு கழுவி வடிய விட்டால் போதும், அதில் உள்ள தண்ணீரில் ஊறி இருக்கும். கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கடுகு 1 ஸ்பூன், பட்டை சிறியதுண்டு 4, லவங்கம் 4, ஏலக்காய் 2, பச்சைமிளகாய் 6 [பொடியாக நறுக்கி கொள்ளவும்], பெரியவெங்காயம் 1 பொடியாக நறுக்கி, எல்லாவற்றையும் வதக்கவும். உப்பு சேர்த்து ஊறிய அவலை சேர்த்து நன்கு வதககவும். மேலே மல்லி,கறிவேப்பிலை,தக்காளி பொடியாக ந்றுக்கி சேர்க்கலாம். அவல் ஊறினால் போதும் 5 நிமிடத்தில் செய்து விடலாம்.

மஷ்ரூம் பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 3 கப் - இரண்டு முறை நன்கு கழுவி ஊறவைக்கவும்.
காளான் - 200 கிராம்,
பட்டை - 2
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
புதினா இலை - 1 கைபிடி
தக்காளி - 3
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

குக்கரில் 50 கிராம் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், இஞ்சி- பூண்டு விழுது, புதினா, நறுக்கிய தக்காளி போட்டு, 2 நிமிடம் கழித்து, அரிசியை போட்டு அத்னுடன் பச்சைமிளகாய் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்தபின் குக்கரை மூடி சிம்மில் வைத்து 1 விசில் வந்த்தும் அடுப்பை அணைத்து சத்தம் அடங்கிய பின் குக்கரை திறந்து தேவையானால் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி அதன் மேல் தூவலாம், மல்லி இலை தூவி பரிமாறவும், கம,கமக்கும் காளான் பிரியாணி தயார். எப்போதும் அரிசியை வறுத்து போட்டால் சாதம் குழையாது. இரவு வரை இருந்தாலும் கெடாது. வாசனைக்கு மேலே கொஞ்சம் நெய் ஊற்றலாம்.