Tuesday, February 26, 2008

சீடை [உப்பு சீடை]

தேவையானவை:

மாவு பச்சரிசி - 1/2 கிலோ
உளுத்தம் பருப்பு -2 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 50 கிராம்
கல் உப்பு, பெருங்காயம் - கொஞ்சம்
பொரிக்க எண்ணெய்.
கடலைப் பருப்பு [அ] பாசிப்பருப்பு ஊறவக்கவும் [3 ஸ்பூன்]

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி நிழலில் காய வைத்து அரைத்து கொள்ளவும். மாவு ஈரமாக இருக்கும். நன்கு சலித்து கொள்ளவும். இல்லையெனில் சீடை வெடிக்கும். ஊளுத்தம்பருப்பை வறுத்து பொடி செய்து கொள்ளவும். அரிசிமாவை கெட்டியான வாணலியில் போட்டு கோலம் போடும் பதத்திற்கு வறுக்கவும். அதனுடன் எல்லாவற்றையும் சேர்த்து [ பெருங்காயம்,உப்பு ஊறவைத்து அந்த நீர், மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி துணியில் போட்டு கொஞ்ச நேரம் காய்ந்தபின் எண்ணெயில் பொட்டு பொரித்து எடுக்கவும். காரம் தேவைபடுபவர்கள் மிளகாய்தூள் [அ] மிளகுதூள் சேர்த்து கொள்ளலாம். தேங்காய் சேர்க்கும் போது ஈரம் இருப்பதால் தண்ணீர் தெளித்து பிசையவும். முதலிலேயே தண்ணீர் அதிகமாக போனால் ஒன்றும் செய்ய முடியாது. கவனமாக செய்யவும். மாவை வறுக்காமல் போட்டால் சீடை வெடிக்கும்.

1 comment: