Tuesday, December 18, 2007

மைக்ரோவேவ் ஓவன் சமையல் டிப்ஸ்

மைக்ரோவேவ் ஓவன் சமையல் டிப்ஸ்:

1. ஓவனில் சமையலில் குறைந்த நேரத்தில் சமைக்கலாம். வைட்டமின், மற்றும் இதர சத்துக்களின் வேஸ்ட் ஆகாது. கையாள்வதும் எளிது.

2. சாதம் வைக்க குக்கரில் வைப்பதை விட அதிகமாக தண்ணீர் சேர்க்கவேண்டும். பச்சரிசி சாதம் சமைக்க ஒவனில் ,அரிசியும், தண்ணீரும் சேர்த்து ஓவனில் பாத்திரத்தை, மூடாமல் ஹையில் 5 நிமிடமும், பிறகு மூடி 15 நிமிடமும் வைக்கவும்.

3. சமைக்கும் பாத்திரத்தில் பாதி அளவு சமையல் பொருள் இருந்தால்தான் பொங்கி வழியாமல் சீராக சமைக்க முடியும். சுடு நீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவு.

4. புழுங்கல் அரிசியில் சாதம் வைக்க பச்ச்சரிசியில் வைப்பதுபோலவே நேரம் அளவு வைக்கவேண்டும்.

5. பாசுமதி அரிசியில் சமைக்கும் போது அரிசியும்,தண்ணீரும் சேர்த்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் ஹையில் வைக்கவும்.

6. பருப்பை வேகவைக்கும்போது அந்த பாத்திரத்தில் பருப்பும்,நீரும் பாதி அளவுதான் இருக்கவேண்டும். 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து வைத்தால் பொங்காது. 5 நிமிடங்களுக்கு 1 முறை வெளியே எடுத்து கலக்கிவிடவும்.

7. அதிக எண்ணெய் உபயோகபடுத்தி செய்யும் சமையலுக்கு 300 டிகிரி சென்டி கிரேட் தாங்கும் பாத்திரத்தைதான் உபயோகிக்கவேண்டும்.' மைக்ரோ-வேவ் ப்ரூஃப் ' என்று எழுதி இருக்கும் பாத்திரத்தை பார்த்து வாங்கவேண்டும்.

8. குழம்பு,மற்றும் கிரேவிகள் சமைத்தவுடன் வெளியே எடுத்தவுடன் குனிந்து பார்க்ககூடாது. அதிக சூட்டின் காரணமாக முகத்தில் படும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.

9. மூடியைத் திறக்கும் சமயம் மிகவும் கவனமாக மெதுவாக கொஞ்சம், கொஞ்சமாக திறக்கவும். அவசரமாக திறக்கும் சமயம் நீராவி வெளிவரும்போது காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.

10. ஓவனில் இருந்து பாத்திரத்தை வெறும் கைகளால் எடுக்ககூடாது.க்ளவுஸ் [அ] பிடித் துணியை பிடித்தோதான் எடுக்க வேண்டும்.ஏனெனில் ஓவனில் அலைகள் அதிகமாக இருக்கும்.கை சிறிது தவறினாலும் காயம் ஏற்படும்.

11. ஒவ்வொரு அவனிலும் ஒவ்வொரு மாதிரியான மின்சக்தியின் அளவுகள் குறிக்கபட்டு இருக்கும். அதில் இருக்கும் குறிப்பீட்டு முறையை படித்து புரிந்து கொண்ட பிறகே ஓவனை பயன்படுத்த வேண்டும்.

12. கேஸ்ஸில் சமைப்பதுபோலவே 1,2,3,4,5. இருப்பதுபோல் ஓவனிலும் மின் சக்தி 100 '/. 75 ./. 50 ./. 25 ./. என்று உள்ளன. அதிலும் ஓவனுக்கு ஓவன் மின் சக்தி குறியீடுகள் வித்யாசம் இருக்கும்.அதனால் நாம் உபயோகபடுத்தும் உணவின் அளவு, அதன் தன்மை, ஈரப்பதம் ஆகியவற்றை பொருத்தும் சமைக்கும் நேரம் வித்யாசப்படும்.

13. சப்பாத்திகளை மறுபடியும் சூடுசெய்யவேண்டுமானால் அவற்றை சுத்தமான துணியில் சுற்றி 30, முதல் 30 வினாடிகள் வைக்கவும். இட்லிகளை மறு சூடு செய்ய இட்லிகளை நீரில் நனைத்து அவன் பாத்திரத்தில் போட்டு மூடி, 10, 15 நிமிடம் வைக்கவும்.

14. உப்புமா, சாதம், பொரியலோ, பிரியாணியோ மறுசூடு செய்ய விரும்பினால் அவனில் வைக்கும் பாத்திரத்தில் அதை போட்டு சிறிதளவு நீரைத் தளித்து சூடு செய்தால் வறண்டு போகாமலும், அப்போதுதான் செய்தது போல் இருக்கும்.

15. ஒவனுக்கு பாத்திரங்கள் வாங்கும்போது அதற்காகவே தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் மைக்ரோ-சேஃப் என்று போட்டு இருந்தால் அவற்றை மறு சூடு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றையும் 3 நிமிடங்களுக்கு மேல் ஓவனில் வைக்க கூடாது. 110 டிகிரி சென்டிகிரேட் வரை தாங்கும் என்று கூறி கடைகளில் விற்கப்படும் பாத்திரங்களை வெறும் தண்ணீரில் வேகவைக்கும் உணவு பொருள்களை மட்டுமே தயாரிக்க முடியும்.

16. ஓவனில் உள்ள சுழலும் தட்டின் ஓரங்களில் பாத்திரத்தை வைத்து சமைத்தால் சீக்கிரம் உணவு சமைக்கப்ப்டும். உலோகபாத்திரங்களை ஓவனில் வைத்து சமைக்ககூடாது. ஏனெனில் அந்த உலோகத்தில் மைக்ரோ அலைகள் ஊடுருவ முடியாது. அது தவிர கண்ணாடிபோல் பிரதிபலித்து,ஓவனின் உட்புற உலோக தகட்டில் பட்டு பக்க விளைவுகள் ஏற்படும்.

17. அப்பளம் சுடும்போது, அப்பளத்தை சிறியதாக ஒடித்து கூரான முனை சுழலும் தட்டின் நடுபாகத்தை பார்ப்பதுபோல் வைத்தால் அப்பளம் சீராக சுடும். ஒன்றன் மேல் ஒன்றாக கூட வைத்து சுடலாம்.ஓவனில் வைக்கும் பாத்திரத்தை அலுமினியம் ஃபாயிலினால் முழுவதுமாக மூடி வைக்க கூடாது. அதிக அளவு வேககூடாது என்ற பகுதியை மட்டும் ஃபாயிலினால் மூட வேண்டும். அந்த அலுமினியம் ஃபாயில் ஓவனின் உட்புற உலோகதகடு உள்ள எந்த பாகத்தையும் தொடகூடாது. அப்படி தொட்டுகொண்டு இருந்தால் ஒவன் சீக்கிரம் ரிப்பேராகிவிடும். அதனால் தீ விபத்தும் ஏற்படலாம்.

18. உப்புமா செய்யும் போது, மிக குறைந்த எண்ணெயில் தயாரித்தபின், வெளியே எடுத்தபிறகு தேவையான எண்ணெய்ச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வைத்து எடுக்கவும். எண்ணெயின் கொதிநிலை 300 டிகிரி சென்டிகிரேட் என்பதால் முதலிலேயே முழு எண்ணெய் சேர்க்ககூடாது.

19. காய்களை ஒரே அளவாக நறுக்கிகொண்டுதான் வேகவைக்கவேண்டும். வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும். உப்பை முதலிலேயே சேர்த்தால் காய்கள் வறண்டுவிடும்.ஆதலால் வெந்தபின்புதான் உப்பு சேர்த்து சமைக்க வேண்டும்.

20. உருளைக்கிழங்கு, கத்தரிக்காய்,சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்ற தோல் தடிமனான காய்களை முள் கரண்டியால் குத்தியோ, அல்லது துண்டாகவோ செய்துதான் ஓவனில் வைக்க வேண்டும்.தோலுடன் கூடிய நிலக்கடலையை வேகவைக்க அது முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மைக்ரோ-ஹையில் 10 நிமிடம்மூடி வைக்கவும். பின் வெளியே எடுத்து உப்பு போட்டு 5 நிமிடங்கள் ஊறியபின் வடியவிட்டு சாப்பிடவும்.

21. ஓவனின் உள் பக்கத்தையும்,வெளிபக்கத்தையும் துடைத்து சுத்தமாக ஈர துணியால் துடைக்கவும். அதிக நாட்கள் உழைக்கும். மைக்ரோவேவ் சமையலில் உள்ளே வைக்க அகன்ற பாத்திரங்களையே உபயோகிக்க வேண்டும்.

5 comments:

  1. நன்றி. இந்தப் பதிவு பயனுள்ளதாய் இருக்கும் என நினைக்கிறேன். நேற்றுதான் ஓவன் வாங்கி இருக்கிறோம்

    ReplyDelete
  2. @ஜெயக்குமார்
    செய்து பார்த்துவிட்டு கருத்துக்களை தெரிவிக்கவும்.

    ReplyDelete
  3. சாதம் வைக்க water + rice how much,

    1:3 or 1:2?

    ReplyDelete
  4. மைக்ரோவேவ் ஓவனில் - Covection / Solo என்ன வித்தியாசம்.?

    ReplyDelete
  5. நாங்க இன்னைக்கு வாங்கியிருக்கின்றோம். என்ன என்ன பாத்திரங்கள் உபயோகிக்கலாம் என்று இன்னும் விரிவாக சொன்னால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete