Monday, November 5, 2007

ஆரோக்கியம் காக்க

1. மாதம் - 2 முறை முடக்கத்தான் கீரை துவையல் சாப்பிடலாம்.

2. பேரிச்சம்பழம், அத்திப்பழம், சப்போட்டாப்பழம் - தேன் கலந்து தினமும் சாப்பிடலாம்.

3. கீரை வகைகளில் தினம் ஒரு கீரை சாப்பிட்டால் அடிக்கடி வரும் சோர்வும், கை, கால் வலியும் வராது.

4. வயதானால் வரும் வாதபிடிப்புக்கு: பொடுதலை + வாதநாராயணன் இலை சாறு சம அளவு தினம் கலையிலும், மாலையிலும் 2 ஸ்பூன் சாப்பிட்டு 100 கிராம் பால் 21 நாட்கள் குடிக்க குணம் தெரியும். உணவில் உப்பு, புளி சேர்க்க கூடாது.

5. விளாம்பழம், நெல்லிக்காய், எலுமிச்சம்பழம் அடிக்கடி உணவில் சேர்த்தால் நககோளாறுகள் வராது. சர்க்கரை நோயினால் ஏற்படும் களைப்பிற்கு நெல்லிகாய் ஊறவைத்த நீரைகுடிக்கலாம்.

6. வைட்டமின் 'A' வெந்தயகீரை, முருங்கை கீரை, கேரட், பப்பாளி, தயிர், முட்டை ஆகியவற்றில் நிரைய உள்ளது.

7. வைட்டமின் 'B' கோதுமை, பருப்பு வகைகள், பால், தயிர் ஆகியவற்றில் உள்ளது.

8. வைட்டமின் 'C' முட்டைகோஸ், தக்காளி, மல்லி, எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா நெல்லிக்காய் ஆகியவற்றில் நிரைய உள்ளது.

9. இரும்பு சத்து முருங்கை கீரை, முள்ளங்கி, புதினா, முட்டைகோஸ், வெல்லம், கேழ்வரகு (ராகி) ஆகியவற்றில் நிரைய உள்ளது.

10. சுண்ணாம்பு சத்து: பச்சை காய்கறிகள்,பூண்டு, இஞ்சி, கேழ்வரகு, பால்.

11. புரத சத்து: பால்,தயிர், வெண்ணெய், பருப்பு மற்றும் கடலை வகைகள், முட்டையின் வெள்ளைக்கரு.

12. வாய்புண், குடல் புண் குணமாக மணத்தக்காளி கீரையை (10 இலைகள்) தினமும் காலையும், மாலையும் பச்சையாக மென்று 1 டம்ளர் மோர் தண்ணியாக குடிக்க வேண்டும்.

1 comment: