Monday, November 5, 2007

பாம்பே சட்னி

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் பெரியதாக - 2
பச்சை மிளகாய் - 7,
இஞ்சி பெரிய துண்டு
தக்காளி தேவையானால் - 2.
கறிவேப்பிலை,மல்லி இலை கொஞ்சம்,
உப்பு தேவையான அளவு

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கடுகு, சீரகம் தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதங்கியபின் இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளியையும் பொடியாக நறுக்கி போட்டு, வதங்கியபின் 2 ஸ்பூன் கடலை மாவில், 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு கரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலை,மல்லி போடவும். இந்த சட்னி தண்ணியாக இருந்தால் இட்லி, தோசைக்கும், கெட்டியாக இருந்தால் பூரி, சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம். இதை 5 நிமிடத்தில் செய்து விடலாம்.

No comments:

Post a Comment