Friday, May 9, 2008

அடை மாவு

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1 கப்
பட்டாணிப் பருப்பு, துவரம்ப் பருப்பு - தலா 1 கப்
இட்லிக்கு போடும் புழுங்கல் அரிசி - 2 கப்
வரமிளகாய் - 10
சீரகம் - 2 ஸ்பூன்
கல் உப்பு- கொஞ்சம். 

செய்முரை:

இவற்றை ஒன்றாக கலந்து வெயிலில் காய வைத்து மிஷினில் குருனையாக அரைத்து [ ரவைபோல்] வைத்து கொண்டு தேவைபடும் சமயம் பெருங்காயம், கறிவேப்பிலை,பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி போட்டு கொஞ்ச நேரம் ஊறவைத்து அடைகளாக ஊற்றவும். மெல்லியதாக வேண்டும் எனில் கொஞ்சம் மாவை தண்ணியாக கரைத்து கொள்ள வேண்டும். புளிப்பாக அடை வேண்டும் எனில் மோர் கலந்து [தண்ணீருக்கு பதில்] ஊறவிட்டு அடைகளாக ஊற்றவும்.

எல்லா பயறு வகைகள் கலந்தும் அடை வார்க்கலாம். உளுந்து கலப்பதால் அடை பிய்ந்து போகாமல் அழகாக வரும். மொறுகலாகவும் வரும். எல்லா பயறுகளையும் முதல் நாள் ஊற விட்டு மறுநாள் ஹாட் பாக்ஸில் போட்டு வைத்து 1 மணி நேரம் கழித்து பார்த்தால் நன்கு முளைவிட்டு இருக்கும் . அரிசியை மட்டும் ஊற வைத்து [ மேலே சொன்ன அதே அளவு] பயறுகளை மிக்ஸியில் அரைத்து,சீக்கிரம் மாவாகிவிடும். பின்அரிசியுடன், 10 வர மிளகாய், உப்பு, பெருங்காயம், கொஞ்சம் கறிவேப்பிலை இஞ்சி ஒரு துண்டு போட்டு குருனையாக அரைத்து அந்த மாவில் 2- ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கல்ந்து அடைகளாக ஊற்றவும்.

No comments:

Post a Comment