Friday, May 15, 2009

அவல் இட்லி

தேவையான பொருட்கள்:

அவல் - 2 கப்
கெட்டியான தயிர் - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய்- 5 [அ] 7
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 ஸ்பூன்


தாளிக்க:
கடுகு, உழுந்து, கடலைப்பருப்பு - தலா 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்

செய்முறை:

அவலை மிக்ஸியில் ரவைபோல் குருணையாக பொடித்து கொள்ளவும். அதில் ஒரு கப் தயிரை கடைந்து 1 கப் தண்ணீர் சேர்த்து, உப்பும் போட்டு அவல் குருணையை ஊற விடவும். 5 நிமிடத்தில் ஊறிவிடும். அவல் ஊறுவதற்க்குள் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்ப்பருப்பு, போட்டு பொன்நிறமானவுடன் அடுப்பை அனைத்து, அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை கலந்து ஊறிய அவல் போட்டு எல்லாவற்றையும் நன்கு கலந்து [இட்லி மாவு பதத்தைவிட கொஞ்சம் கெட்டியாக இருக்கனும்] இட்லி தட்டில் ஊற்றி நன்கு வேகவிட்டு எடுக்கவும். தேவை எனில் மாவில் நெய் [அ] தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி கலந்து கொள்ளலாம். கையில் தொட்டால் ஒட்டாமல் நன்கு உதிராக இருக்கும். கார சட்னி சூப்பராக இருக்கும்.

No comments:

Post a Comment