Monday, May 18, 2009

வாழைப்பூ பச்சடி

தேவையானவை :

துவரம்பருப்பு - 50 - கிராம்
வாழைப்பூ - சிறியதாக - 1 கசப்பு இல்லாமல் இருக்கனும்
சிறிய வெங்காயம் - 10
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
வரமிளகாய் - 2
மஞ்சள் தூள் - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு

தாளிக்க : கடுகு - 1/4 ஸ்பூன்
கடலைபருப்பு - 1/4ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - கொஞ்சம்
எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை :

வாழைப்பூ கசக்காமல் இருக்குதா என்று பார்க்க பூவை பிரித்து உள்ளே இருக்கும் இதழை கொஞ்சம் எடுத்து வாயில் போட்டு பார்த்தால் கசக்காமல் இருக்க வேண்டும். பருப்பை மஞ்சள்தூள் போட்டு வேக வைத்து கொள்ள வேண்டும். வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். [ கறுத்து போகாமல் இருக்கும்] வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், வரமிளகாய்,போட்டு வறுபட்டபின் பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். பின்பு தக்காளியை போட்டு சுருள வதக்கவும். மோரில் ஊறிய வாழைப்பூவை நன்கு பிழிந்து போட்டு +மஞ்சள் பொடி போட்டு வதக்கவும். பொடியாக நறுக்கினால் சீக்கிரம் வதங்கி விடும். பின்பு வெந்த பருப்பை வாழைப்பூ கலவையில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். கடைசியாகவும் தாளிக்கலாம். மேலே மல்லி இலை போடவும். சாதத்தில் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும். தளர்வாக வேண்டும் எனில் 1/2 கப் தண்ணீர் சேர்க்கலாம்.

No comments:

Post a Comment