Thursday, May 14, 2009

அவல் மோர் களி

தேவையானவை:


அவல் - 200 கிராம்
லேசாக புளித்த மோர் - 500 கிராம்
பச்சை மிளகாய் - 4
கடுகு - 1/4 ஸ்பூன்
பெருங்காயதூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையானவை
ஊப்பு - ருசிக்கு ஏற்ப
கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்

செய்முறை:


அவலை மிக்ஸியில் நன்கு பொடிசெய்து கொள்ளவும். அதில் மோரை கலந்து ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், தேவைஎனில் உளுத்தம்பருப்பு, கடலைபருப்பும் தாளித்து கொள்ளலாம். ஊறிய அவலில் உப்பும் போட்டு நன்றாக கலந்து கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது மோர் கலந்து வாணலியில் ஊற்றி கெட்டியாகும் வரை போட்டு கிளறவும். கையில் ஒட்டாமல் வந்ததும் வாசனைக்கு 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, மல்லி போட்டு கலந்து சாப்பிடலாம். மோர் மிளகாய் இருந்தால் தாளிக்கும்போது போடலாம். வாசனையாக இருக்கும்.

No comments:

Post a Comment