Monday, November 5, 2007

மோர்க் கூழ்

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
மோர் - 4 கப்
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலைபருப்பு - 1/2 ஸ்பூன்
உளுததம்பருப்பு - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
பச்சைமிளகாய் [அ] வரமிளகாய் - 5
உப்பு தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு போடவும். சிவந்தபின், பெருங்காயம் போட வேண்டும். மோரில் அரிசி மாவை கலக்கவும். மாவு தோசை மாவு பதம் இருக்க வேண்டும். இந்த கலவையை அடுப்பில் இருக்கும் தாளிதம் செய்ததில் ஊற்றி கட்டி விழாமல் நன்கு கிளற வேண்டும். தேவைப்பட்டால் நெய், [அ] தேங்காய் கொஞ்சம் ஊற்றி நன்கு கலந்து வெந்தபின் இறக்கி,மல்லி இலை தூவி சாப்பிடலாம்.

1 comment:

  1. This is one of my Mother's signature dishes.

    கேழ்வரகு கூழ் செய்முறை பற்றி நேரம் அனுமதிக்கும் போது பதிவிடுங்களேன்.

    மீண்டும் நன்றி.

    ReplyDelete