தேவையானவை:
அவல் - 200 கிராம்
அவரவர்க்கு பிடித்த காய்களும் போட்டுக் கொள்ளலாம். பொடியாகவோ, மெல்லிய நீள துண்டுகளாகவோ, நறுக்கவும்.
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பற்கள்
பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு வாசனைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
அவலை 2 முறை நன்கு கழுவி, நன்கு வடியவிட்டு வைக்கவும். இருமுறை அலம்பும் போதும் தண்ணீர் ஊற்றுவதால் அதிலேயே ஊறி தண்ணீரை உறிஞ்சுகொள்ளும். தனியாக நீரூற்றி ஊறவக்க்த்தேவை இல்லை. இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்த உடனேயே இஞ்சி, பூண்டு விழுது போட்டுவிட்டு நீளமாக நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்க்கவும். வெங்காயம் சிவக்க வதங்கியபின் காய்களுடன், உப்பு போட்டு பாதி வதங்கியபின் அவலையும் போட்டு நன்கு வதக்கவும்.
அடுப்பை சிம்மில் எரியவிடவும். தேவை எனில் பிரட்டை நெய்யில் பொரித்தும் போடலாம். அவல் பிரியாணியை எளிதில் செய்து விடலாம். மேலே மல்லி இலை, புதினா இலைகளை போட்டு சாப்பிடவும். சூப்பராக இருக்கும்.
Thursday, May 14, 2009
அவல் புட்டு
தேவையானவை:
அவல்- 200 கிராம்
பொடித்த வெல்லம் - 150 கிராம்
தேங்காய் துருவல் - 100 கிராம்
ஏலக்காய் பொடி - கொஞ்சம்
நெய் - கொஞ்சம்
செய்முறை:
அவலை நெய்யில் பொன் நிறமாக வறுத்து பின் மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும். அதனுடன் தேங்காய், வெல்லம், ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இது உதிராக இருக்கும். தேவை எனில் முந்திரி வறுத்து சேர்த்து கலக்கவும். சீக்கிரம் செய்து விடலாம்.[ அவலை வறுக்கும்போது சிவக்க வறுக்கவும்.
அவல்- 200 கிராம்
பொடித்த வெல்லம் - 150 கிராம்
தேங்காய் துருவல் - 100 கிராம்
ஏலக்காய் பொடி - கொஞ்சம்
நெய் - கொஞ்சம்
செய்முறை:
அவலை நெய்யில் பொன் நிறமாக வறுத்து பின் மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும். அதனுடன் தேங்காய், வெல்லம், ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இது உதிராக இருக்கும். தேவை எனில் முந்திரி வறுத்து சேர்த்து கலக்கவும். சீக்கிரம் செய்து விடலாம்.[ அவலை வறுக்கும்போது சிவக்க வறுக்கவும்.
அவல் பாயசம்
தேவையானவை:
அவல் - 100 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
முந்திரி- 20
பால் - 2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
நெய் - கொஞ்சம்
செய்முறை:
நெய்யில் அவலையும் முந்திரியையும் வறுத்து மிக்ஸியில் பவுடராக செய்து 1 கப் பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அவலை வேகவிட்டு, பின் மீதி உள்ள பால் சேர்த்து கொதிக்கவிட்டு, கொஞ்சம் ஆறியபின் சர்க்கரை, ஏலக்காய்பொடி சேர்க்கவும். சுவையாக இருக்கும் இந்த பாயசத்தை சீக்கிரம் தயார் செய்து விடலாம்.
அவல் - 100 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
முந்திரி- 20
பால் - 2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
நெய் - கொஞ்சம்
செய்முறை:
நெய்யில் அவலையும் முந்திரியையும் வறுத்து மிக்ஸியில் பவுடராக செய்து 1 கப் பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அவலை வேகவிட்டு, பின் மீதி உள்ள பால் சேர்த்து கொதிக்கவிட்டு, கொஞ்சம் ஆறியபின் சர்க்கரை, ஏலக்காய்பொடி சேர்க்கவும். சுவையாக இருக்கும் இந்த பாயசத்தை சீக்கிரம் தயார் செய்து விடலாம்.
அவல் மோர் களி
தேவையானவை:
அவல் - 200 கிராம்
லேசாக புளித்த மோர் - 500 கிராம்
பச்சை மிளகாய் - 4
கடுகு - 1/4 ஸ்பூன்
பெருங்காயதூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையானவை
ஊப்பு - ருசிக்கு ஏற்ப
கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்
செய்முறை:
அவலை மிக்ஸியில் நன்கு பொடிசெய்து கொள்ளவும். அதில் மோரை கலந்து ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், தேவைஎனில் உளுத்தம்பருப்பு, கடலைபருப்பும் தாளித்து கொள்ளலாம். ஊறிய அவலில் உப்பும் போட்டு நன்றாக கலந்து கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது மோர் கலந்து வாணலியில் ஊற்றி கெட்டியாகும் வரை போட்டு கிளறவும். கையில் ஒட்டாமல் வந்ததும் வாசனைக்கு 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, மல்லி போட்டு கலந்து சாப்பிடலாம். மோர் மிளகாய் இருந்தால் தாளிக்கும்போது போடலாம். வாசனையாக இருக்கும்.
அவல் - 200 கிராம்
லேசாக புளித்த மோர் - 500 கிராம்
பச்சை மிளகாய் - 4
கடுகு - 1/4 ஸ்பூன்
பெருங்காயதூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையானவை
ஊப்பு - ருசிக்கு ஏற்ப
கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்
செய்முறை:
அவலை மிக்ஸியில் நன்கு பொடிசெய்து கொள்ளவும். அதில் மோரை கலந்து ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், தேவைஎனில் உளுத்தம்பருப்பு, கடலைபருப்பும் தாளித்து கொள்ளலாம். ஊறிய அவலில் உப்பும் போட்டு நன்றாக கலந்து கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது மோர் கலந்து வாணலியில் ஊற்றி கெட்டியாகும் வரை போட்டு கிளறவும். கையில் ஒட்டாமல் வந்ததும் வாசனைக்கு 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, மல்லி போட்டு கலந்து சாப்பிடலாம். மோர் மிளகாய் இருந்தால் தாளிக்கும்போது போடலாம். வாசனையாக இருக்கும்.
தயிர் பூரி
தேவையானவை:
மைதா - 100 கிராம்
ரவை - 2 ஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1
சாட் மசாலா பொடி- 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1/4 ஸ்பூன்
கெட்டியான தயிர் - 1 கப்
மல்லி இலை - கொஞ்சம்
புதினா இலை - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு ஏற்ப
பூரி பொரிக்க எண்ணெய்
ஓமம் - கொஞ்சம்
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். புதினா, மல்லி இலையுடன் கொஞ்சம் உப்பு, 1 மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். மைதாவுடன் ரவை, உப்பு கலந்து கெட்டியாக பிசைந்து பூரியாக பொரித்து கொள்ளவும். கிண்ணத்தில் பூரிகளை உதிர்த்து போட்டு, அதனுடன் உருளைகிழங்கு, புதினா, மல்லி பேஸ்ட், ஓமம், சாட் பொடி, காரபொடி, தயிர் உப்பு எல்லாவற்றையும் நன்கு கலந்து மேலே கொஞ்சம் மல்லி இலைகளை தூவி சாப்பிடவும்.
மைதா - 100 கிராம்
ரவை - 2 ஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1
சாட் மசாலா பொடி- 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1/4 ஸ்பூன்
கெட்டியான தயிர் - 1 கப்
மல்லி இலை - கொஞ்சம்
புதினா இலை - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு ஏற்ப
பூரி பொரிக்க எண்ணெய்
ஓமம் - கொஞ்சம்
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். புதினா, மல்லி இலையுடன் கொஞ்சம் உப்பு, 1 மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். மைதாவுடன் ரவை, உப்பு கலந்து கெட்டியாக பிசைந்து பூரியாக பொரித்து கொள்ளவும். கிண்ணத்தில் பூரிகளை உதிர்த்து போட்டு, அதனுடன் உருளைகிழங்கு, புதினா, மல்லி பேஸ்ட், ஓமம், சாட் பொடி, காரபொடி, தயிர் உப்பு எல்லாவற்றையும் நன்கு கலந்து மேலே கொஞ்சம் மல்லி இலைகளை தூவி சாப்பிடவும்.
Wednesday, May 13, 2009
உழுந்து பச்சடி
தேவையானவை:
வெள்ளை உளுந்து- 1/4 கப்,
தயிர் - 1 கப்
தாளிக்க எண்ணெய் - 2 ஸ்பூன், கடுகு - கொஞ்சம்,
பெருங்காய தூள் - கொஞ்சம்
வரமிளகாய்- 4
உப்பு- தேவையானது.
செய்முறை:
உளுந்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும், பெருங்காயம், வரமிளகாய் போட்டு அடுப்பை அணைத்து ஆறியபின் அதில் உளுந்து பொடி, தயிர், ஊப்பு,போட்டு நன்கு கலக்கவும். சூப்பர் வாசனையுடன் இருக்கும். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். தோசைக்கும் நன்றாக இருக்கும்.
வெள்ளை உளுந்து- 1/4 கப்,
தயிர் - 1 கப்
தாளிக்க எண்ணெய் - 2 ஸ்பூன், கடுகு - கொஞ்சம்,
பெருங்காய தூள் - கொஞ்சம்
வரமிளகாய்- 4
உப்பு- தேவையானது.
செய்முறை:
உளுந்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும், பெருங்காயம், வரமிளகாய் போட்டு அடுப்பை அணைத்து ஆறியபின் அதில் உளுந்து பொடி, தயிர், ஊப்பு,போட்டு நன்கு கலக்கவும். சூப்பர் வாசனையுடன் இருக்கும். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். தோசைக்கும் நன்றாக இருக்கும்.
தயிர் சாதம்
தேவையானவை:
பச்சரிசி - 2 கப்
தயிர் - 2 கப்
கொட்டை இல்லாத திராட்சை- 20
மாதுளை முத்துக்கள்- 1/4 கப்
ஆப்பிள் சிறிய துண்டுகளாக - 10
புளிப்பு இல்லாத மாங்காய் துண்டுகள்- 10
வெள்ளரிக்காய் பொடியாக நறுக்கியது- 1/4 கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி- பொடியாக 1/2 ஸ்பூன்
முந்திரி பொடியாக - 2 ஸ்பூன்
தாளிக்க- கடுகு, பெருங்காயம்- கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம் உப்பு.
செய்முறை:
அரிசியை நன்கு அலம்பி 6 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக விடவும். ஆறியபின் பெரிய கிண்ணத்தில் போட்டு, மேலே கூறி உள்ள எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து , கடுகு, பெருங்காயம் தாளித்து தயிரையும் ஊற்றி நன்கு கலந்து, மேலே கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு கொள்ளவும். கெட்டியாக இருந்தால் பால் சேர்த்து கொள்ளலாம் சூப்பராக இருக்கும். இதற்கு தொட்டு கொள்ள வறுத்த மோர் மிளகாய், அல்லது மாவடு இருந்தால் சுவை சூப்பர்தான்.
பச்சரிசி - 2 கப்
தயிர் - 2 கப்
கொட்டை இல்லாத திராட்சை- 20
மாதுளை முத்துக்கள்- 1/4 கப்
ஆப்பிள் சிறிய துண்டுகளாக - 10
புளிப்பு இல்லாத மாங்காய் துண்டுகள்- 10
வெள்ளரிக்காய் பொடியாக நறுக்கியது- 1/4 கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி- பொடியாக 1/2 ஸ்பூன்
முந்திரி பொடியாக - 2 ஸ்பூன்
தாளிக்க- கடுகு, பெருங்காயம்- கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம் உப்பு.
செய்முறை:
அரிசியை நன்கு அலம்பி 6 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக விடவும். ஆறியபின் பெரிய கிண்ணத்தில் போட்டு, மேலே கூறி உள்ள எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து , கடுகு, பெருங்காயம் தாளித்து தயிரையும் ஊற்றி நன்கு கலந்து, மேலே கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு கொள்ளவும். கெட்டியாக இருந்தால் பால் சேர்த்து கொள்ளலாம் சூப்பராக இருக்கும். இதற்கு தொட்டு கொள்ள வறுத்த மோர் மிளகாய், அல்லது மாவடு இருந்தால் சுவை சூப்பர்தான்.
மணத்தக்காளி பச்சடி
தேவையானவை:
மணத்தக்காளி வற்றல்- 1/4 கப்
தயிர்- 2 கப்
பெருங்காயதூள்- கொஞ்சம்
வரமிளகாய்- 4
உப்பு கொஞ்சம்,
கறிவேப்பிலை கொஞ்சம்
எண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை:
வற்றலை எண்ணெய் விட்டு பொரிய வறுத்து கொள்ளவும். இன்னும் கொஞ்சம் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய், பெருங்காயம் வறுத்து ஆறியபின் அதில் தயிர், மணத்தக்காளி வற்றல் போட்டு நன்கு கலந்து சாப்பிடவும். வற்றலில் உப்பு இருப்பதால் பார்த்து உப்பு போடவும். கறிவேப்பிலை மேலே போடவும். இந்த பச்சடி பித்ததுக்கு ரொம்ப நல்லது. வயிற்றுக் கோளாறுகள் வராமல் தடுக்கும். வயிற்றுபுண் இருந்தால் ஆற்றும்.
மணத்தக்காளி வற்றல்- 1/4 கப்
தயிர்- 2 கப்
பெருங்காயதூள்- கொஞ்சம்
வரமிளகாய்- 4
உப்பு கொஞ்சம்,
கறிவேப்பிலை கொஞ்சம்
எண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை:
வற்றலை எண்ணெய் விட்டு பொரிய வறுத்து கொள்ளவும். இன்னும் கொஞ்சம் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய், பெருங்காயம் வறுத்து ஆறியபின் அதில் தயிர், மணத்தக்காளி வற்றல் போட்டு நன்கு கலந்து சாப்பிடவும். வற்றலில் உப்பு இருப்பதால் பார்த்து உப்பு போடவும். கறிவேப்பிலை மேலே போடவும். இந்த பச்சடி பித்ததுக்கு ரொம்ப நல்லது. வயிற்றுக் கோளாறுகள் வராமல் தடுக்கும். வயிற்றுபுண் இருந்தால் ஆற்றும்.
காய்கறி பச்சடி
தேவையானவை:
கேரட்- 1
வெள்ளரிக்காய்- 1
வெள்ளை பூசணி- 1 கீற்று
செள செள - சிறியது
கோஸ்- 50 கிராம்
குடை மிளகாய்- 1
பெரிய வெங்காயம்- 1
தேங்காய் துறுவல் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய்- 4
உப்பு- தேவையானவை;
தேவையானால் பெங்களூர் தக்காளி- 3
தாளிக்க கடுகு.
தேங்காயுடன், மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
செய்முறை:
எல்லா காய்களையும் நன்கு சுத்தம் செய்து துறுவி கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும், பெருங்காயத்தை போட்டு அடுப்பை அணைத்து விடவும். அதில் துறுவிய காய்களுடன் அரைத்ததேங்காய் உப்பு போட்டு, தயிறும் ஊற்றி, கடைசியில் பெரிய வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி போட்டு, அதனுடன் மல்லி இலை, தக்காளி பொடியாக நறுக்கி நன்கு கலக்கவும். இந்த பச்சடியை கப்பில் போட்டும் சாப்பிடலாம். சப்பாத்திக்கு, தோசைவகைகள், உப்புமா எல்லாவற்றுக்கும் தொட்டு சாப்பிடலாம். சூப்பராக இருக்கும்.
கேரட்- 1
வெள்ளரிக்காய்- 1
வெள்ளை பூசணி- 1 கீற்று
செள செள - சிறியது
கோஸ்- 50 கிராம்
குடை மிளகாய்- 1
பெரிய வெங்காயம்- 1
தேங்காய் துறுவல் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய்- 4
உப்பு- தேவையானவை;
தேவையானால் பெங்களூர் தக்காளி- 3
தாளிக்க கடுகு.
தேங்காயுடன், மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
செய்முறை:
எல்லா காய்களையும் நன்கு சுத்தம் செய்து துறுவி கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும், பெருங்காயத்தை போட்டு அடுப்பை அணைத்து விடவும். அதில் துறுவிய காய்களுடன் அரைத்ததேங்காய் உப்பு போட்டு, தயிறும் ஊற்றி, கடைசியில் பெரிய வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி போட்டு, அதனுடன் மல்லி இலை, தக்காளி பொடியாக நறுக்கி நன்கு கலக்கவும். இந்த பச்சடியை கப்பில் போட்டும் சாப்பிடலாம். சப்பாத்திக்கு, தோசைவகைகள், உப்புமா எல்லாவற்றுக்கும் தொட்டு சாப்பிடலாம். சூப்பராக இருக்கும்.
கீரை தயிர் கூட்டு
தேவையானவை:
பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கப்
தயிர்- 1 கப்
தேங்காய் துறுவியது - கொஞ்சம்
பச்சை மிளகாய்- 2
மிளகு- 1/4 ஸ்பூன்
ஊளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
பெருங்காயம் சிறிய கட்டி
தாளிக்க- கடுகு, சுவைக்கு ஏற்ப உப்பு.
செய்முறை:
கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு ஊளுத்தம்பருப்பு, தேங்காய், பெருங்காயம், மிளகு, மிளகாய், பொன் நிறத்தில் வறுத்து ஆறியபின் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கீரை நன்கு பொடியாக நறுக்கி கொண்டு, மண் போக சுத்தம் செய்து வாணலியில் அரைத்ததுடன் கீரையை சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும். ஆறியபின் தயிர், உப்பும் சேர்த்து நன்கு கலக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். சுவையான தயிர் கூட்டு தயார்.
பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கப்
தயிர்- 1 கப்
தேங்காய் துறுவியது - கொஞ்சம்
பச்சை மிளகாய்- 2
மிளகு- 1/4 ஸ்பூன்
ஊளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
பெருங்காயம் சிறிய கட்டி
தாளிக்க- கடுகு, சுவைக்கு ஏற்ப உப்பு.
செய்முறை:
கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு ஊளுத்தம்பருப்பு, தேங்காய், பெருங்காயம், மிளகு, மிளகாய், பொன் நிறத்தில் வறுத்து ஆறியபின் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கீரை நன்கு பொடியாக நறுக்கி கொண்டு, மண் போக சுத்தம் செய்து வாணலியில் அரைத்ததுடன் கீரையை சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும். ஆறியபின் தயிர், உப்பும் சேர்த்து நன்கு கலக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். சுவையான தயிர் கூட்டு தயார்.
Friday, April 10, 2009
ஆலு சப்ஜி
தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு - 350 கிராம்
தக்காளி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 2 ஸ்பூன்
சமையல் எண்ணெய் - 4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி- 1 ஸ்பூன்
தனியா பொடி - 2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1/2 ஸ்பூன்
ஆம்சூர் பொடி - 1/2 ஸ்பூன்
கசூரி மேதி - 1 ஸ்பூன்
மல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பிரஷர் குக்கரில் உருளை கிழங்கை போட்டு முழுகும் வரை தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும். ஆறியவுடன் தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சீரகம் சேர்த்து பொரிய விடவும். இதில் பொடியாக நறுக்கிய தக்காளி, நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய் பொடி, தனியா பொடியுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன், மசித்த உருளை கிழங்கை போட்டு நன்றாக கிளறவும். 2 கப் தண்ணீர், கரம் மசாலா பொடி, ஆம்சூர் பொடி, கசூரி மேதி சேர்த்து நன்றாக கொதித்தவுடன், மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
ஆலு சப்ஜி தயார். பூரி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.
உருளை கிழங்கு - 350 கிராம்
தக்காளி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 2 ஸ்பூன்
சமையல் எண்ணெய் - 4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி- 1 ஸ்பூன்
தனியா பொடி - 2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1/2 ஸ்பூன்
ஆம்சூர் பொடி - 1/2 ஸ்பூன்
கசூரி மேதி - 1 ஸ்பூன்
மல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பிரஷர் குக்கரில் உருளை கிழங்கை போட்டு முழுகும் வரை தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும். ஆறியவுடன் தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சீரகம் சேர்த்து பொரிய விடவும். இதில் பொடியாக நறுக்கிய தக்காளி, நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய் பொடி, தனியா பொடியுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன், மசித்த உருளை கிழங்கை போட்டு நன்றாக கிளறவும். 2 கப் தண்ணீர், கரம் மசாலா பொடி, ஆம்சூர் பொடி, கசூரி மேதி சேர்த்து நன்றாக கொதித்தவுடன், மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
ஆலு சப்ஜி தயார். பூரி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.
Thursday, April 2, 2009
சேமியா கேசரி
தேவையான பொருட்கள்:
வருத்த சேமியா - 250 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
முந்திரி -10
திராட்சை -10
ஏலக்காய் - 2
பால் – 100 கிராம்
நெய் – 50 கிராம்
கேசரி கலர் – 1 சிட்டிகை
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு முதலில் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுக்கவும். 1 கப் தண்ணீர், பால் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். 1 சிட்டிகை கேசரி கலர் மற்றும் பொடித்த ஏலக்காயை சேர்க்கவும். இதில் வருத்த சேமியாவை சேர்த்து வேக விடவும். தண்ணீர் நன்றாக சுண்டியவுடன் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான சேமியா கேசரி தயார்.
வருத்த சேமியா - 250 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
முந்திரி -10
திராட்சை -10
ஏலக்காய் - 2
பால் – 100 கிராம்
நெய் – 50 கிராம்
கேசரி கலர் – 1 சிட்டிகை
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு முதலில் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுக்கவும். 1 கப் தண்ணீர், பால் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். 1 சிட்டிகை கேசரி கலர் மற்றும் பொடித்த ஏலக்காயை சேர்க்கவும். இதில் வருத்த சேமியாவை சேர்த்து வேக விடவும். தண்ணீர் நன்றாக சுண்டியவுடன் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான சேமியா கேசரி தயார்.
Wednesday, October 22, 2008
இஞ்சி லேகியம்
தேவையான பொருள்கள்:
இஞ்சி - 100 கிராம்
வெல்லம் - 200 கிராம்
மிளகு, திப்பிலி, சீரகம், தனியா, ஓமம், ஒவ்வொன்றிலும் - 10 கிராம்
நெய் - தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சியை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சாறு எடுத்து வடித்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து தெளிந்து இருக்கும். அந்த தெளிந்ததை மட்டும் எடுத்து, வெல்லத்தை மண் போக வடிகட்டி சுத்தம் செய்து இஞ்சி சாறை கலந்து கெட்டி பாகு வரும் வரை காய்ச்சவும். மற்ற பொருள்களை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து பாகில் போட்டு நெய் ஊற்றி கிளறவும். தீபாவளி அன்று மட்டும் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வயிறு பொருமலாக இருக்கும்போதும் சாப்பிடலாம்.
[2]
இஞ்சி சாறு - 200 கிராம்
வெல்லம் - 200 கிராம்
பாதாம், கசகசா, ஓமம் - தலா - 20 கிராம்
நெய் - தேவையானது
செய்முறை:
வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கல், மண் போக சுத்தம் வடித்து, கசகசா, ஓமத்தை வறுத்து பாதாம் பருப்புடன் இஞ்சி சாறை சேர்த்து அரைக்கவும். எல்லாவற்றையும் கலந்து அடுப்பில் வைத்து கிளறவும். அவ்வப்போது நெய் சேர்த்து கிளறவும். பதம் வந்தவுடன் இறக்கவும்.
இஞ்சி - 100 கிராம்
வெல்லம் - 200 கிராம்
மிளகு, திப்பிலி, சீரகம், தனியா, ஓமம், ஒவ்வொன்றிலும் - 10 கிராம்
நெய் - தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சியை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சாறு எடுத்து வடித்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து தெளிந்து இருக்கும். அந்த தெளிந்ததை மட்டும் எடுத்து, வெல்லத்தை மண் போக வடிகட்டி சுத்தம் செய்து இஞ்சி சாறை கலந்து கெட்டி பாகு வரும் வரை காய்ச்சவும். மற்ற பொருள்களை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து பாகில் போட்டு நெய் ஊற்றி கிளறவும். தீபாவளி அன்று மட்டும் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வயிறு பொருமலாக இருக்கும்போதும் சாப்பிடலாம்.
[2]
இஞ்சி சாறு - 200 கிராம்
வெல்லம் - 200 கிராம்
பாதாம், கசகசா, ஓமம் - தலா - 20 கிராம்
நெய் - தேவையானது
செய்முறை:
வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கல், மண் போக சுத்தம் வடித்து, கசகசா, ஓமத்தை வறுத்து பாதாம் பருப்புடன் இஞ்சி சாறை சேர்த்து அரைக்கவும். எல்லாவற்றையும் கலந்து அடுப்பில் வைத்து கிளறவும். அவ்வப்போது நெய் சேர்த்து கிளறவும். பதம் வந்தவுடன் இறக்கவும்.
Subscribe to:
Posts (Atom)