Thursday, July 23, 2009

காய்கறி கூட்டு

தேவையானவை


பூசணி
அவரை
கோஸ்
பரங்கி
கத்தரிக்காய்
கொத்தவரங்காய்
பாசிப்பருப்பு - 1/2 கப்
பச்சைமிளகாய் - 5
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்,
உப்பு தேவைக்கு
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
தாளிக்க எண்ணெய் - 4 ஸ்பூன்

செய்முறை

பாசிப்பருப்புடன் மஞ்சள்பொடி சேர்த்து மலர வேகவிடவும். தேங்காயுடன் 2 பச்சைமிளகாய், 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும். காய்களை பொடியாக நறுக்கி கொள்ளவும். நன்கு சுத்தம் செய்து கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கவும். அதில் மிளகாயை கீறி போடவும். பாதி வெந்தபின் உப்பு போட்டு, வெந்தபருப்பு, அரைத்துவிட்ட தேங்காயை போட்டு, கெட்டியாக இருந்தால் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். இறக்கிவிட்டு நெய்யில் [அ] தேங்காய் எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். நன்கு கலந்து விடவும்.இதற்கு தக்காளி, எலுமிச்சை தேவை இல்லை. எல்லா காய்கள், பருப்பு ஒன்றாக போட்டு ஃப்ரஷர் பேனிலும் ஒரு விசில் விட்டு பின், தாளிக்கலாம். எல்லா காய்களும் சேர்க்கலாம். சத்துள்ளது.

2 comments:

  1. i saw your blog's link at ponmalars.blogspot.com

    ReplyDelete
  2. மிக மிக அருமை

    ReplyDelete