Monday, November 5, 2007

காய்கறி கூட்டு

தேவையான பொருட்கள்:

பூசணி, அவரை, கத்திரிக்காய், பரங்கி, முருங்கைகாய் - 2,
கொத்தவரங்காய், புடலங்காய், பீர்க்கங்காய், தட்டைபயிறு, பாசிப்பருப்பு தலா - 50 கிராம்
பச்சைமிளகாய் - 6
தேங்காய் துறுவியது - 1/2 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தட்டைபயிறை லேசாக வறுத்து முதல் நாளே ஊற வைக்கவேண்டும். பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவைக்க வேண்டும். காய்களை பொடியாக நறுக்கவேண்டும். தேங்காயுடன், சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவேண்டும். வெந்த பருப்புடன் காய்களை சேர்த்து 2 நிமிடம் கழித்து அரைத்த விழுதுடன், உப்பையும் சேர்த்து நன்கு கொதித்து வரும் சமயம் இறக்கி தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் தேங்காய் எண்ணைய் ஊற்றி கடுகு, தேவைபபட்டால் கடலைபருப்பு, உளுத்தமபருப்பு, பெருங்காயம் தாளிக்கலாம். கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு இறக்கிவிடவும். சத்துள்ள, வயிற்றுக்கு கெடுதல் செய்யாத கூட்டு தயார்.

No comments:

Post a Comment