Monday, November 5, 2007

தக்காளி பிரியாணி

செய்முரை:

பாசுமதி ரைஸ் - 2 கப், தக்காளி [நன்றாக பழுத்த சிகப்பு கலராக உள்ள பழமாக இருந்தால் சுவையாக இருக்கும்]. அரிசியை நன்கு கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறுவதால் சாப்டாக இருக்கும். ப்ரஷர் பேனை அடுப்பில் வைத்து, 2 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, சீரகம், 1/4 ஸ்பூன் பெருங்காயம், போட்டு ஒரு பெரிய வெங்காயதை ஸ்லைஸாக நறுக்கி போட்டு பொன் நிறமாக வதங்கியவுடன். தக்காளியை பொடி, பொடியாக நறுக்கி பொட்டு மசித்து விட்டு, அரிசியையும், வடிய விட்டு வெங்காயத்துடன் போட்டு சிறிது நேரம் வதக்கி, 3 கப் தண்ணீர் ஊற்றி, 2 ஸ்பூன் உப்பு போட்டு, நன்கு கலந்து பேனை முடி விடவும். சிம்மில் 1 விசில் விட்டு இறக்கவும். பரிமாறும் போது மல்லி இலை தூவி உடனே பரிமாறவும்.

1 comment:

  1. அருமையான ரெசிப்பி, சமைத்து பார்துவிட்டு மீண்டும் வருகிரோம்.

    ReplyDelete