Monday, November 5, 2007

மஷ்ரூம் பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 3 கப் - இரண்டு முறை நன்கு கழுவி ஊறவைக்கவும்.
காளான் - 200 கிராம்,
பட்டை - 2
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
புதினா இலை - 1 கைபிடி
தக்காளி - 3
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

குக்கரில் 50 கிராம் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், இஞ்சி- பூண்டு விழுது, புதினா, நறுக்கிய தக்காளி போட்டு, 2 நிமிடம் கழித்து, அரிசியை போட்டு அத்னுடன் பச்சைமிளகாய் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்தபின் குக்கரை மூடி சிம்மில் வைத்து 1 விசில் வந்த்தும் அடுப்பை அணைத்து சத்தம் அடங்கிய பின் குக்கரை திறந்து தேவையானால் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி அதன் மேல் தூவலாம், மல்லி இலை தூவி பரிமாறவும், கம,கமக்கும் காளான் பிரியாணி தயார். எப்போதும் அரிசியை வறுத்து போட்டால் சாதம் குழையாது. இரவு வரை இருந்தாலும் கெடாது. வாசனைக்கு மேலே கொஞ்சம் நெய் ஊற்றலாம்.

No comments:

Post a Comment