Monday, November 5, 2007

டிப்ஸ்

1. வேலைக்கு செல்பவர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் புளியை நேரம் கிடைக்கும் போது புளியை கெட்டியாக கரைத்து, உப்பு போட்டு கொதிக்கவிட்டு பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டு, சமையலுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.

2. கறும்பு சாறு சேர்த்து சர்க்கரை பொங்கல் செய்தால் சுவையோ,சுவை.

3. மெது வடைக்கு அரைக்கும் போது ஒரு கைப்பிடி சாதம் சேர்த்து அரைத்தால் மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே சாப்டாகவும் இருக்கும்.

4. தோசை கருகாமல் வர ஒவ்வொரு தோசை ஊற்றும்போதும் லேசாக தண்ணீர் தெளித்து ஊற்றினால் பொன் தீயாமல் நிறமாக வரும்.

5. பலகாரங்களுக்கு வெள்ளை எள்ளை விட கறுப்பு எள் நல்லது.பார்க்கவும் அழகாக இருக்கும்.ருசியும் சூப்பர்.

6. காய்கறிகளை பொடியாக ந்றுகினால் சீக்கிரம் வெந்து விடுவதுடன், காயின் நிறமும்,சத்தும் கிடைக்கும்.காய் நறுக்கியதை பார்த்தாலே சாப்பிட ஆசை வர வேண்டும்.

7. காய்களை புதியதாக வாங்கி சமைத்தால், சத்தும், வாசனையும் அபாரம்.

8. ஃப்ரிஜ் இருக்கறது என்று நிறைய காய்களை வாங்கி அடைக்க வேண்டாம்.

9. திட்ட மிட்டு சமையல் செய்தால் பொருளும் வேஸ்ட் ஆகாது. சீக்கிரமாகவும் செய்து விடலாம். ஏனோ தானோ என்று சமைக்க கூடாது. சமையல் ஒரு கலை ஆதலால் பொறுமையாகவும், பக்குவமாகவும், ரசனையுடன் சமைக்க வேண்டும்.

10. திட்டமிட்டு சமையல் செய்ய எல்லாம் ரெடி செய்து கொண்டு அடுப்பை பற்ற வைத்தால் சமைக்கும் நேரமும்,கேஸும் குறைவாகவே ஆகும்.

11. நேரம் கிடைக்கும் போது இஞ்சி, பூண்டை உறித்து, உப்பு சேர்த்து அரைத்து வைத்து கொண்டால், மசாலா குழம்பு வகைகளுக்கு ஏற்றது.

12. பச்சைமிளகாயை உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து வைத்து கொண்டால் சில்லி பேஸ்ட்.

13. மிளகு சீரகம் பொடிசெய்து வைத்து கொண்டால் அவசர ரசத்திற்க்கு கை கொடுக்கும்.

14. கட்டி பெருங்காயம்,வெந்தயம் வறுத்து பொடி செய்து வைத்து கொண்டால் எல்லா வகை குழம்புகளுக்கும் கை கொடுக்கும்.

15. இஞ்சி நிறைய இருக்கும் சமயங்களில் தோல் சீவி பொடியாக நறுக்கி, மிளகு, சீரகம், 1/4ஸ்பூன் உப்பு சேர்த்து பொடி செய்து வைத்து கொண்டால், வெண் பொங்கல், மற்ற சமையலிலும் பயன் படுத்தி கொள்ளலாம்.

16. எந்த பொடி வகை செய்தாலும் கொஞ்சம் கல் உப்பையும் சேர்த்து பொடி செய்து கொண்டால் ரொம்ப நாடகள் ஆனாலும் கெடாது.

17. கலர் பொடி சேர்ப்பத்ற்க்கு பதில் லெமன் சால்ட், எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். புளியை ஊற வைக்கும் போதே சிறிது கல் உப்பும் சேர்க்கலாம்.

18. சமையலில் நல்ல எண்ணெய் அதிகம் உபயோகப்படுத்தினால் உடலுக்கு நல்லது.

19. சாம்பாரில் பருப்பை சேர்க்கும் போதுநன்கு கொதிக்க விட்டு இறக்கினால் அதிக நேரம் கெடாது.

20. காய்களை எண்ணெயில் 1 நிமிடம் வதக்கி விட்டு போட்டால் வாசனையாக இருக்கும்.விரைவில் வெந்துவிடும்.

21. ரசத்திற்க்கு பருப்பு தண்ணீர் விட்டு நுரைத்து வந்தவுடன் இற்க்கி 1 ஸ்பூன் நெய்யில் கடுகு, மிளகு, சீரக பொடி, கடா பெருங்காயம் பொடித்துபோட்டால் மணமாக இருக்கும்.

22. தேங்காய் பால் ஊற்றி செய்யும் குழம்புகளுக்கு இறக்கும் போதுதான் பால் ஊற்ற வேண்டும் இல்லையெனில் பால் திரிந்துவிடும்.

23. அல்வா செய்யும் சமயம் பதம் தவறி நீர்த்துவிட்டால் கார்ன் ஃப்ளார் மாவை தேவையான அளவு சேர்த்துபின், [அதற்கு தகுந்த சர்க்கரைபோடவும்] ஆறியபின் விரைவில் கெட்டியாகிவிடும். அல்வாவும் மினுமினுப்பாக, சுவையாக இருக்கும்.

24. குலோப்ஜாமூன் செய்ய சர்க்கரை பாகில் எலுமிச்சை சாறு 5 சொட்டுகள் விட்டால் பாகு இளகியே இருக்கும்.

25. ரவா கேசரி செய்யும் சமயம் நீர்த்து விட்டால், அதை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு கோதுமை மாவு கொஞ்சம் எடுத்து வறுத்து போட்டால் கெட்டியாகிவிடும். 2 ஸ்பூன் நெய்விட்டால் சூப்பராக இரூக்கும்.

1 comment: