Sunday, June 8, 2008

ருசியான சமையலுக்கு சில குறிப்புகள்

சமையல் ருசியாக இருக்க, செய்யும் குழம்பு, பொரியல், கூட்டு, கிரேவி,சட்னி,எதுவாக இருந்தாலும் செய்யும் அளவுக்கு தகுந்த படி மற்ற பொருள்களை சேர்க்க வேண்டும். அதிகமாக போனாலோ, குறைவாக இருந்தாலோ அதன் ருசி மாறிப் போகும். எல்லாவற்றுக்கும் இஞ்சிம் பூண்டு சேர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. மசாலா பொருட்கள் பிடிக்காதவர்கள் அதை சேர்க்காமலே ருசியாக செய்யலாம். சமையல் ஒன்றும் பெரிய விஷயமிலை. செய்ய தெரியாதவர்கள் கூட பயப்படாமல் தைரியமாக செய்தால் சமையல் ரொம்ப ஈஸி தான். செய்ய, செய்யதான் சமையல் வரும்.

அடுப்பை எரியவிடும்போது அதில் வைத்து சமைக்கும் பாத்திரத்திற்க்கு மேல் தீ எரிய கூடாது.தீ அதிகமானால் செய்யும் பொருட்கள் வேஸ்ட் ஆகிபோய்விடும்.ரொம்ப சிறியதாக எரிந்தாலும் சீக்கிரம் வேகாது.

செய்யும் பதார்த்தங்களை பொருத்து அடுப்பு மிதமாக எரிய வேண்டும்.

குக்கரில் காய்கள் வேகவைப்பதாக இருந்தால் மிதமாக எரியவிட்டு விசில் வரும்முன்பு [ அதாவது 1 நிமிடம்] காய்களின் அளவுகளை பொருத்து அடுப்பை அணைத்துவிட்டால் அதன் சூட்டிலேயே வெந்துவிடும்.

கீரைகள் செய்யும்போது கீரைகளை நன்கு கழுவி, பிழிந்து தேவையான வெந்தபருப்புடன், பச்சைமிளகாய்,வெங்காய், [தக்காளிபோடுவதாக இருந்தால்] கலந்து 1நிமிடம் விசில் வராமல் அடுப்பை அணைத்துவிட்டு திறந்தால் அதன் பச்சைகலரும் மாறாது. சத்தும் அப்படியே இருக்கும். சீக்கிரமே வெந்து இருக்கும்.

சாம்பாருக்கு சேர்க்கும் காய்களையும் பருப்பு தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு சிறிய குக்கர் [அ] ஃப்ரஷர் பேனில் வைத்தாலும் ஹையில் வைத்து விசில் வரும் முன்பே [1நிமிடம் போதும் ] அணைத்து விட்டால் வெந்துவிடும்.

குறைவான நபர்கள் இருக்கும் வீட்டில் மசாலா பொருட்களை கொஞ்சமாக போடனும். அதிகமானால் கசக்கும். ருசியும் மாறி போகும்.பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் சேர்க்காமலேயே செய்யலாம். ருசி வரும்.

கொஞ்சம் பொறுமையாகவும், யோசனையுடனும் சமையல் செய்தால் நம் வீட்டு சமையல் ஹோட்டல் சமையலைவிட சூப்பராக வரும். எதுவுமே நம் கையில்தான் இருக்கு. போடும் அளவு, செய்யும் முறை, பக்குவம் இதுதான் சமையல் ரகசியம்.

உப்பு எப்போதுமே குறைவாக போட்டு பின் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். அதிகமானால் அதற்கு எதையாவது கலந்தால் அதன் ஒரிஜனல் தன்மை போய் விடும். கொஞ்ச நாளில் சமையல் செய்ய அதுவும் சரியாகிபோகும். எந்த சமையல் செய்தாலும் அதுக்கு என்ன பொருட்கள் சேர்க்கவேண்டுமோ அதை மறக்காமல் சேர்த்தால் எல்லார் வீட்டு சமையலும் சூப்பர்தான்.

1 comment: