Friday, May 9, 2008

டிப்ஸ்

எந்த பொடிகள் செய்தாலும் அதனுடன் கல் உப்பு சேர்த்து அரைத்தால் வண்டுகள், பூச்சிகள் வராது. பொடி செய்தவுடன் பேப்பரில் போட்டு ஆறியபின் பாட்டிலில் போட்டு வைக்கவும். சூட்டுடன் போட்டு வைத்தால் பொடிகள் சீக்கிரமே கெட்டு போய் வண்டு, பூச்சிகள் வரும். அதே போல் எந்த வகை மாவு பொருட்களையும் மிஷினில் அரைக்கும் போதும், பேப்பரில் போட்டு ஆறியபின் எடுத்து வைக்கவும்.

பொடி செய்ய வரமிளகாய் வறுக்கும் போது கடைசியில்தான் வறுக்க வேண்டும் முதலிலேயே மிளகாயை போட்டால் கறுகிவிடும். சிகப்பு கலர் வராது. மிளகாய் தூள் சேர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அடுப்பை அணைத்து விட்டு மிளகாய் தூள் சேர்க்கவேண்டும். வாணலியின் சூட்டுக்கே வறுபட்டு விடும் ஏனெனில் அது மிஷினில் அரைத்து இருப்பதால் [ஏற்கனவே வறுபட்டு இருக்கும்]

No comments:

Post a Comment