Monday, November 5, 2007

டிப்ஸ் [பாயசம் சுவை அதிகரிக்க]

1. தீயை மிதமாக எரியவிட்டு பாலை சுண்டவிட்டால் பாயசம் திரட்டுபால் வாசனையுடன் சூப்பராக இருக்கும்.

2. பாலில் வேக வைத்து செய்ய கூடிய பாயசங்களை தீயை குறைத்து வேக வைத்தால் நாம் மறந்து வேறு வேலையாக இருந்தால்கூட தீய்ந்து போய்விடாது. மிதமாக எரிவதால் சுவை கூடும்.

3. பால் கெட்டியாக இருந்து, பால் சுண்டும் நிறம் தேவை எனில் [லைட் ப்ரவுன்] வெறும் வாணலியில் காய்ந்தபின் 2 ஸ்பூன் சர்க்கரை போட்டு குறைந்த தீயில் வைத்து கரைய விட்டால் அந்த கலர் வரும். அதில் செய்த பாயசத்தை கலந்தால் பாலை சுண்ட வைத்த எஃபெக்ட் கிடைக்கும்.

4. சூடாக பரிமாறும் பாயசங்களை விட, குளிர வைத்துப் பரிமாறும் பாயசங்களுக்கு கூடுதலாக சர்க்கரை போடனும். [ சிலர் பாயசம் செய்து ஃப்ரிஜ்ஜில் வைத்து சாப்பிடுபவர்களுக்கு]

5. பாயசத்துக்கு ஏலக்காய் பொடி செய்பவர்கள் ஏலக்காயை லேசாக வறுத்து கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து வைத்து கொண்டால் மிகவும் செளகரியமாக இருக்கும். ஏலக்காய் போட்டு செய்யும் ஸ்வீட்களுக்கு போட்டு கொள்ளலாம்.

6. கண்டென்ஸ்ட்டு மில்க் வாங்கி சேர்க்க முடியாத நிலையில், பாலையே அதிகமாக சேர்த்து காய்ச்சும்போது சிறிய தட்டை பால் காய்ச்சும் பாத்திரத்தில் போட்டுவிட்டால் பால் பொங்காமல் சீக்கிரம் சுண்டி விடும். பால் பாதி சுண்டிய பின் தட்டை எடுத்து விடலாம்.

7. எந்த பாயசம் செய்தாலும் 10,முந்திரி, பாதாம்பருப்பு,பிஸ்தா பருப்பு, இவற்றையும் வறுத்து பொடி செய்து வைத்து கொண்டு கடைசியில் இறக்கும் சமயம் சேர்த்தால் சுவைகூடும். சில பேர் பருப்புகளை எறிந்து விடுவார்கள். இது தவிர்க்கப்படும். ஏனெனில் இந்த பருப்புகள் எல்லாம் விலை அதிகம்.

No comments:

Post a Comment