Monday, November 5, 2007

கார்ன் ப்ளார் அல்வா

தேவையான பொருட்கள்:

கார்ன் ப்ளார் -200கிராம் [1 டம்ளர்]
சர்க்கரை-400 கிராம்,
நெய்-500 கிராம்,
முந்திரி-50கிராம்,
பாதாம் பருப்பு-10 பொடியாக ஒடித்து கொள்ளவும்,
பிஸ்தா - 6 சிறியதாக் ஒடித்து கொள்ளவும்,
ஏலக்காய் -10,
சர்க்கரையுடன் பொடி செய்து கொள்ளவும்,
விருப்பமான கலர்- கொஞ்சம்,
தண்ணீர்- 2 டம்ளர்,

செய்முறை:

கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் நெய்விட்டு முந்திரி,பாதாம்,பிஸ்தா இவற்றை பொன் கலரில் வறுத்து எடுத்து கொண்டு 2 ஸ்பூன் நெய் விட்டு மாவை லேசாக வறுத்து கொள்ள வேண்டும்.வறுப்பதால் அல்வா கட்டி தட்டாது, வாசனையாகவும் இருக்கும். அந்த வாணலியை அடுப்பில் வைத்து 2 டம்ளர் நீர் ஊற்றி கொதி வரும் சமயம் வறுத்த மாவை கொஞ்சம், கொஞ்சமாக தூவி நன்கு கிளறவும். கொஞ்சம் நெய்யை ஊற்றவும். கை விடாமல் நன்கு கிளறவும். இப்போது சர்க்கரை போட்டு கை விடாமல் கிளறவும்.அடுப்பை சிம்மில் எரிய விட்டு செய்யவும்.கலரை சேர்க்கவும். நடுவில் நெய்யை ஊற்றி கிளறிகொண்டே இருக்கவும். மாவை வறுத்து செய்வதால் சீக்கிரமே ரெடி ஆகிவிடும். கடைசியில் முந்திரி, பாதாம், பிஸ்தா ஏலக்காய்தூள் சேர்த்து கெட்டியான பதம் வந்தவுடன் இறக்கவும். இந்த அல்வா செய்வது எளிது, டேஸ்ட் சூப்பராக இருக்கும். தேவையான பொருட்களை அருகில் வைத்து கொண்டு செய்யவும்.தேவையானால் வாசனைக்கு ரோஸ் எசன்ஸ் விடலாம்.

No comments:

Post a Comment