தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு -1/4 கப்
புளி- எலுமிச்சை அளவு
தக்காளி- 1
ரசப்பொடி- 1 ஸ்பூன்
கடா பெருங்காயம்-கொஞ்சம்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
தாளிக்க கடுகு
செய்முறை:
இந்த ரசம் நாம் எல்லோரு, செய்ய கூடியதுதான்.
துவரம்ப்பருப்பை நன்கு குழைய வேக வைத்து கொள்ளவும். அப்போதுதான ரசம் வாசனையாக இருக்கும். சரியாக வேகவில்லை எனில் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் கரைந்துவிடும். புளியை சுடுநீரில் ஊற வைத்து கொள்ளவும்.சுடுநீரில் ஊறவைப்பதால் வேஸ்ட் ஆகாது. சீக்கிரம் கரையும். புளியை கரைத்து வடிகட்டி அதனுடன் தக்காளியை கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். உப்பு,மஞ்சள்தூள், ரசப்பொடி,போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு, வெந்த பருப்பை நன்கு கரைத்து அதில் ஊற்றவும்.பருப்பு வேகவைக்கும்போதும் கொஞ்சம் மஞ்சள்தூள் போடலாம். உப்பு, புளிப்பு பார்த்து தேவையான தண்ணீர் ஊற்றவும். நுரைத்து வந்த போது இறக்கி, நெய்யில், கடுகு,கடா பெருங்காயம் தாளிக்கவும். கறிவேப்பிலை, மல்லி இலையை பொடியாக நறுக்கி போடவும். சூப்பரான பருப்பு ரசம் ரெடி. காரம் கொஞ்சம் தேவைஎனில் கடுகு தாளிக்கும் போது மிளகுபொடியை பொரித்து போடவும்.
Thursday, January 10, 2008
Wednesday, January 9, 2008
மிளகு ரசம்
தேவையான பொருள்கள்; புளி- எலுமிச்சை அளவு
துவரம்ப்பருப்பு- 2 ஸ்பூன்
மிளகு- 1 ஸ்பூன்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- சிறிது
தாளிக்க -கடுகு
கறிவேப்பிலை, மல்லி சிறிது
செய்முறை: துவரம்பருப்பு, மிளகு இவற்றை பச்சையாகவே பொடி செய்து கொள்ளவும். புளியை சுடுநீரில் ஊற வைத்து நன்கு கரைத்து வைத்து கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகைபோட்டு வெடித்ததும், மஞ்சள்தூள் போட்டு கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். 2 நிமிடம் கொதித்தால் போதும். பொடியை போட்டு புளிப்புக்கு தகுந்தபடி தண்ணீர் ஊற்றி நுரைத்து வந்ததும் கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு நன்கு கலக்கி விட்டு சாப்பிடவும். இந்த ரசம் ஜீரண்த்துக்கு நல்லது. சளி, இருமல் தொல்லை இருந்தால் அதை கட்டுப்படுத்தும். செய்வது எளிது. ருசியாக இருக்கும்.
துவரம்ப்பருப்பு- 2 ஸ்பூன்
மிளகு- 1 ஸ்பூன்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- சிறிது
தாளிக்க -கடுகு
கறிவேப்பிலை, மல்லி சிறிது
செய்முறை: துவரம்பருப்பு, மிளகு இவற்றை பச்சையாகவே பொடி செய்து கொள்ளவும். புளியை சுடுநீரில் ஊற வைத்து நன்கு கரைத்து வைத்து கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகைபோட்டு வெடித்ததும், மஞ்சள்தூள் போட்டு கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். 2 நிமிடம் கொதித்தால் போதும். பொடியை போட்டு புளிப்புக்கு தகுந்தபடி தண்ணீர் ஊற்றி நுரைத்து வந்ததும் கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு நன்கு கலக்கி விட்டு சாப்பிடவும். இந்த ரசம் ஜீரண்த்துக்கு நல்லது. சளி, இருமல் தொல்லை இருந்தால் அதை கட்டுப்படுத்தும். செய்வது எளிது. ருசியாக இருக்கும்.
சீரக ரசம்
தேவையான பொருட்கள்; துவரம் பருப்பு- 2 ஸ்பூன்
சீரகம்- 1/2 ஸ்பூன்
வரமிளகாய்- 5
புளி- எலுமிச்சை அளவு [ சுடு நீரில் ஊற வைக்கவும்]
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையானது
தாளிக்க -கடுகு
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
செய்முறை: மேலே கூறியுள்ள பொருட்களை நன்கு ஊறவைத்து எல்லா பொருட்களையும் மிக்ஸியில் நன்கு மைய அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதில் மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். 5 நிமிடம் கொதித்தால் பச்சை வாசனை போய் விடும். இறக்கும்போது உப்பு, புளி பார்த்து இறக்கவும். பின் நெய்யில் கடுகு தாளித்து, கறிவேப்பிலை
மல்லி இலை போட்டு மூடி வைக்கவும்.இந்த ரசம் பித்தத்திற்கு மிகவும் நல்லது.சுவையும் சூப்பராக இருக்கும்.
்
சீரகம்- 1/2 ஸ்பூன்
வரமிளகாய்- 5
புளி- எலுமிச்சை அளவு [ சுடு நீரில் ஊற வைக்கவும்]
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையானது
தாளிக்க -கடுகு
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
செய்முறை: மேலே கூறியுள்ள பொருட்களை நன்கு ஊறவைத்து எல்லா பொருட்களையும் மிக்ஸியில் நன்கு மைய அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதில் மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். 5 நிமிடம் கொதித்தால் பச்சை வாசனை போய் விடும். இறக்கும்போது உப்பு, புளி பார்த்து இறக்கவும். பின் நெய்யில் கடுகு தாளித்து, கறிவேப்பிலை
மல்லி இலை போட்டு மூடி வைக்கவும்.இந்த ரசம் பித்தத்திற்கு மிகவும் நல்லது.சுவையும் சூப்பராக இருக்கும்.
்
இஞ்சி ரசம்
தேவையான பொருட்கள்; இளசாக இருக்கும் இஞ்சி- 50 கிராம்
தக்காளி-2
எலுமிச்சை பழம்- பெரியதாக இருந்தால்-1 சிறியதாக இருந்தால்-2
பருப்பு தண்ணீர்-2 கப்
ரசப்பொடி-1[அ] 1 -1/2ஸ்பூன்
பெருங்காயம்-1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு, கறிவேப்பிலை, மல்லி இலை
செய்முறை: இஞ்சியை துருவியில் துருவி சுடுநீர் ஊற்றி மூடி வைக்கவும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதில் கொஞ்சம் கல் உப்புபோட்டு வைக்கவும்.
ஏனெனில் சாறு கசக்காமல் இருக்கும். பருப்பு தண்ணீரில் தக்காளியை பொடியாக நறுக்கி கையால் பிழிந்து சிறிது உப்பு மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.அதனுடன் ரசபொடியையும் போடவும். 2 நிமிடம் கழித்து இஞ்சி சாறு,
எலுமிச்சை சாறு ஊற்றி தேவையான தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்தவுடன்
இறக்கி வைத்து, 1 ஸ்பூன் நெய்யில் கடுகு,பெருங்காயம், கறிவேப்பிலை,மல்லி இலை போட்டு விடவும்.இன்னும் காரம் தேவைஎனில் 2 பச்சை மிளகாயை கீறி போட்டு கொள்ளலாம். இந்த இஞ்சி ரசம் அஜீரணம்,வாயு,பித்தம் ஏற்பட்டால் அடிக்கடி செய்து சாப்பிடவும்.
்
தக்காளி-2
எலுமிச்சை பழம்- பெரியதாக இருந்தால்-1 சிறியதாக இருந்தால்-2
பருப்பு தண்ணீர்-2 கப்
ரசப்பொடி-1[அ] 1 -1/2ஸ்பூன்
பெருங்காயம்-1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு, கறிவேப்பிலை, மல்லி இலை
செய்முறை: இஞ்சியை துருவியில் துருவி சுடுநீர் ஊற்றி மூடி வைக்கவும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதில் கொஞ்சம் கல் உப்புபோட்டு வைக்கவும்.
ஏனெனில் சாறு கசக்காமல் இருக்கும். பருப்பு தண்ணீரில் தக்காளியை பொடியாக நறுக்கி கையால் பிழிந்து சிறிது உப்பு மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.அதனுடன் ரசபொடியையும் போடவும். 2 நிமிடம் கழித்து இஞ்சி சாறு,
எலுமிச்சை சாறு ஊற்றி தேவையான தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்தவுடன்
இறக்கி வைத்து, 1 ஸ்பூன் நெய்யில் கடுகு,பெருங்காயம், கறிவேப்பிலை,மல்லி இலை போட்டு விடவும்.இன்னும் காரம் தேவைஎனில் 2 பச்சை மிளகாயை கீறி போட்டு கொள்ளலாம். இந்த இஞ்சி ரசம் அஜீரணம்,வாயு,பித்தம் ஏற்பட்டால் அடிக்கடி செய்து சாப்பிடவும்.
்
அரைத்து விட்ட ரசம்
தேவையான பொருள்கள்; துவரம்ப் பருப்பு- 1/2 ஸ்பூன்
மிளகு, சீரகம், தனியா- தலா- 1/4 ஸ்பூன்
கட்டி பெருங்காயம்- சிறியக் கட்டி
தக்காளி- 2
புளி விழுது- 1 ஸ்பூன்
உப்பு தேவையானது,கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்.
செய்முறை: துவரம்ப் பருப்பு,மிளகு,சீரகம், தனியா,பெருங்காயம், இவற்றை சிவக்க வறுத்து, அதனுடன் தக்காளியையும் சுருள வதக்கி உப்பும் சேர்த்து ஆறியபின் மிக்ஸியில் மையாக அரைத்துகொண்டு, அதனுடன் புளி விழுது சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். புளி விழுது இல்லையெனில் ,தேவையான புளியை சுடுநீரில் ஊற வைத்து அரைத்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் கடுகு,போட்டு வெடித்ததும் அரைத்து வைத்துள்ளதை போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நுரைத்துவந்தவுடன் இறக்கி விடவும். கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு சாப்பிடவும்.இதில் எல்லா பொருட்களையும் வறுத்து செய்வதால் அதிக நேரம் கொதிக்க வேண்டாம்.
்
மிளகு, சீரகம், தனியா- தலா- 1/4 ஸ்பூன்
கட்டி பெருங்காயம்- சிறியக் கட்டி
தக்காளி- 2
புளி விழுது- 1 ஸ்பூன்
உப்பு தேவையானது,கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்.
செய்முறை: துவரம்ப் பருப்பு,மிளகு,சீரகம், தனியா,பெருங்காயம், இவற்றை சிவக்க வறுத்து, அதனுடன் தக்காளியையும் சுருள வதக்கி உப்பும் சேர்த்து ஆறியபின் மிக்ஸியில் மையாக அரைத்துகொண்டு, அதனுடன் புளி விழுது சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். புளி விழுது இல்லையெனில் ,தேவையான புளியை சுடுநீரில் ஊற வைத்து அரைத்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் கடுகு,போட்டு வெடித்ததும் அரைத்து வைத்துள்ளதை போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நுரைத்துவந்தவுடன் இறக்கி விடவும். கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு சாப்பிடவும்.இதில் எல்லா பொருட்களையும் வறுத்து செய்வதால் அதிக நேரம் கொதிக்க வேண்டாம்.
்
பைனாப்பிள் ரசம்
தேவையான பொருள்கள்; அன்னாசிப் பழம்- 1
பருப்பு தண்ணீர்- 2கப்
உப்பு- 1-1/2 ஸ்பூன்
வரமிளகாய்-5
பெருங்காயம்- 1/4 ஸ்பூன்
தாளிக்க கடுகு, கறிவேப்பிலை.
மஞ்சள்தூள்- கொஞ்சம்.
செய்முறை: அன்னாசிப் பழத்தை பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து வடிக்கட்டி சாறுமட்டும் எடுத்து வைத்து கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து 1 ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், மஞ்சள்தூள், வரமிளகாயை கிள்ளிபோட்டு, கறிவேப்பிலையும் போட்டு 1 நிமிடம் கழித்து பைனாப்பிள் சாறை ஊற்றி உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு 2 நிமிடம் கழித்து பருப்பு தண்ணீரை ஊற்றி , புளிப்பு,காரம் பார்த்து நுரைத்து வரும் சமயம் இறக்கி விடவும். சுவையான பைனாப்பிள் ரசம் தயார்.
பருப்பு தண்ணீர்- 2கப்
உப்பு- 1-1/2 ஸ்பூன்
வரமிளகாய்-5
பெருங்காயம்- 1/4 ஸ்பூன்
தாளிக்க கடுகு, கறிவேப்பிலை.
மஞ்சள்தூள்- கொஞ்சம்.
செய்முறை: அன்னாசிப் பழத்தை பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து வடிக்கட்டி சாறுமட்டும் எடுத்து வைத்து கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து 1 ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், மஞ்சள்தூள், வரமிளகாயை கிள்ளிபோட்டு, கறிவேப்பிலையும் போட்டு 1 நிமிடம் கழித்து பைனாப்பிள் சாறை ஊற்றி உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு 2 நிமிடம் கழித்து பருப்பு தண்ணீரை ஊற்றி , புளிப்பு,காரம் பார்த்து நுரைத்து வரும் சமயம் இறக்கி விடவும். சுவையான பைனாப்பிள் ரசம் தயார்.
Tuesday, January 8, 2008
தக்காளி ரசம்
தேவையான பொருள்கள்: தக்காளி-5 நன்கு பழுத்து இருக்கவேண்டும்
புளி தண்ணீர்- 1 கப்
பருப்பு தண்ணீர்- 2 கப்
பச்சை மிளகாய் -4
மஞ்சள்தூள்- கொஞ்சம்
ரசப்பொடி- 1 ஸ்பூன்,
பெருங்காயம்- கொஞ்சம்
உப்பு தேவையானது
கடுகு-1/4 ஸ்பூன்
செய்முறை: புளி தண்ணீரில் தக்காளியை போட்டு நன்கு கரைத்து, உப்பு, மஞ்சள்தூள் கொஞ்ச நேரம் கொதிக்க விடவும்.கொஞ்சம் சுண்டிய பின் பருப்பு தண்ணீர் ஊற்றி, கறிவேப்பிலை,மல்லி இலை போட்டு நுரைத்து வந்தவுடன் இறக்கி விட்டு,நெய்யில் கடுகு தாளித்து,பின் அதிலேயே ரசபொடியை பொரித்து ரசத்தில் கலந்து விடவும். சுவையான சூப்பரான தக்காளி ரசம் தயார்.
புளி தண்ணீர்- 1 கப்
பருப்பு தண்ணீர்- 2 கப்
பச்சை மிளகாய் -4
மஞ்சள்தூள்- கொஞ்சம்
ரசப்பொடி- 1 ஸ்பூன்,
பெருங்காயம்- கொஞ்சம்
உப்பு தேவையானது
கடுகு-1/4 ஸ்பூன்
செய்முறை: புளி தண்ணீரில் தக்காளியை போட்டு நன்கு கரைத்து, உப்பு, மஞ்சள்தூள் கொஞ்ச நேரம் கொதிக்க விடவும்.கொஞ்சம் சுண்டிய பின் பருப்பு தண்ணீர் ஊற்றி, கறிவேப்பிலை,மல்லி இலை போட்டு நுரைத்து வந்தவுடன் இறக்கி விட்டு,நெய்யில் கடுகு தாளித்து,பின் அதிலேயே ரசபொடியை பொரித்து ரசத்தில் கலந்து விடவும். சுவையான சூப்பரான தக்காளி ரசம் தயார்.
பூண்டு ரசம்
தேவையான பொருள்கள்; பூண்டு- 10 பற்கள்
புளி- சிறிய எலுமிச்சை அளவு
மிளகு, சீரகம்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- கொஞ்சம்
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்.
செய்முறை; புளியை சுடுநீரில் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும். பூண்டையும், மிளகு, சீரகத்தை தட்டி வைத்து கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் நெய்[எண்ணெய்] ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மஞ்சள்தூள் போட்டு, புளியையும் ஊற்றி கொதிக்க விட்டு[2 நிமிடம்] போதும். ஏனெனில் சுடுநீரில் வெந்து இருக்கும். அதில் மிளகு,சீரகபொடி,உப்புபோட்டு பின் பூண்டும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேவையான தண்ணீர் ஊற்றி,
கறிவேப்பிலை, மல்லி இலைபோட்டு இறக்கி விடவும். அடிக்கடி பூண்டு ரசம்அடிக்கடி செய்து சாப்பிட்டால் கொலஸ்ரால் சேராது வாயுவுக்கும் நல்லது
புளி- சிறிய எலுமிச்சை அளவு
மிளகு, சீரகம்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- கொஞ்சம்
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்.
செய்முறை; புளியை சுடுநீரில் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும். பூண்டையும், மிளகு, சீரகத்தை தட்டி வைத்து கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் நெய்[எண்ணெய்] ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மஞ்சள்தூள் போட்டு, புளியையும் ஊற்றி கொதிக்க விட்டு[2 நிமிடம்] போதும். ஏனெனில் சுடுநீரில் வெந்து இருக்கும். அதில் மிளகு,சீரகபொடி,உப்புபோட்டு பின் பூண்டும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேவையான தண்ணீர் ஊற்றி,
கறிவேப்பிலை, மல்லி இலைபோட்டு இறக்கி விடவும். அடிக்கடி பூண்டு ரசம்அடிக்கடி செய்து சாப்பிட்டால் கொலஸ்ரால் சேராது வாயுவுக்கும் நல்லது
குளிருக்கு இதமாக ரசம் வகைகள்- கொத்துமல்லி ரசம்.
தேவையான பொருள்கள்; கொத்துமல்லி- 1 சிறிய கட்டு
வெந்த பருப்பு தண்ணீர்- 1- கப்
தக்காளி - 2[அ] 3
ரசப்பொடி[அ] மிளகு சீரகம்- தலா- 1 ஸ்பூன்
பொடிசெய்து கொள்ளவும்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- கொஞ்சம்
தாளிக்க- கடுகு, சீரகம்.
செய்முறை: கொத்துமல்லியை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி மிக்ஸியில் அரைத்து அதன் சாறை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து 1- ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, மஞ்சள்தூள் போட்டு, ரசபொடி[அ] மிளகு,சீரகபொடியை போட்டு பொரிந்தபின் தக்காளியை போட்டு வதக்கவும். தேவையான உப்பை போடவும். சிறிது நேரம் கழித்து பருப்பு தண்ணீயை ஊற்றி கொதிக்கவிட்டு, வடிகட்டி வைத்துள்ள மல்லி இலை சாறை ஊற்றி நுரைத்து வந்தவுடன் இறக்கி விடவும். குளிருக்கு இதமாக இந்த ரசத்தை குடிக்கலாம். சாப்பாட்டிற்க்கு தேவைஎனில் 1 எலுமிச்சைபழம் பிழிந்து கொள்ளவும்.உடலுக்கு கெடுதல் செய்யாது.
வெந்த பருப்பு தண்ணீர்- 1- கப்
தக்காளி - 2[அ] 3
ரசப்பொடி[அ] மிளகு சீரகம்- தலா- 1 ஸ்பூன்
பொடிசெய்து கொள்ளவும்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- கொஞ்சம்
தாளிக்க- கடுகு, சீரகம்.
செய்முறை: கொத்துமல்லியை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி மிக்ஸியில் அரைத்து அதன் சாறை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து 1- ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, மஞ்சள்தூள் போட்டு, ரசபொடி[அ] மிளகு,சீரகபொடியை போட்டு பொரிந்தபின் தக்காளியை போட்டு வதக்கவும். தேவையான உப்பை போடவும். சிறிது நேரம் கழித்து பருப்பு தண்ணீயை ஊற்றி கொதிக்கவிட்டு, வடிகட்டி வைத்துள்ள மல்லி இலை சாறை ஊற்றி நுரைத்து வந்தவுடன் இறக்கி விடவும். குளிருக்கு இதமாக இந்த ரசத்தை குடிக்கலாம். சாப்பாட்டிற்க்கு தேவைஎனில் 1 எலுமிச்சைபழம் பிழிந்து கொள்ளவும்.உடலுக்கு கெடுதல் செய்யாது.
Sunday, January 6, 2008
மைக்ரோவேவ் வெண்பொங்கல்
தேவையானவை:
அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
முந்திரி - 10
மிளகு, சீரகம் - தலா 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு தோல் சீவி தட்டி கொள்ளவும்
தண்ணீர் - 4 [அ] 5 கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
நெய் - தேவைக்கு
செய்முறை:
அரிசியையும், பருப்பையும் ஒன்றாக கலந்து ஓவனில் சூடு செய்து செய்து கொள்ளவும்.அப்போது பொங்கல் வாசனையாக இருக்கும். ஓவன் பாத்திரத்தில் அரிசி, பருப்பை கலந்து தண்ணீர் ஊற்றி மூடி ஹையில் 5 நிமிடம் வைக்கவும். பின் வெளியே எடுத்து நன்கு கலந்து, மூடியை திறந்து மீடியம் அல்லது ஹையில் 15 நிமிடம் வைத்து நடுவில் ஒருமுறை எடுத்து உப்பு, கலந்து ஹையில் 5 நிமிடம் வைக்கவும். நெய்யில் முந்திரி, மிளகு, சீரகம் கறிவேப்பிலை பொரித்துபோட்டு கலந்து விட்டால் வெண்பொங்கல் ரெடி. நெய் அவரவர் தேவைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளலாம். சுவையான மணமுள்ள வெண்பொங்கல் தயார்.இஞ்சி சாதம் வேகும் சமயம் போட்டால் நன்கு வெந்து வாசனை நன்றாக இருக்கும். மிளகு, சீரகத்தை சிறிய ப்ளாஸ்டிக் கவரில் போட்டு சப்பாத்தி தேய்க்கும் குழவியில் தட்டி போட்டு பொரித்து கொள்ளலாம். முழுதாகவும் நெய்யில் பொரித்து கொள்ளலாம். அவரவர் விருப்பம்.
அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
முந்திரி - 10
மிளகு, சீரகம் - தலா 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு தோல் சீவி தட்டி கொள்ளவும்
தண்ணீர் - 4 [அ] 5 கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
நெய் - தேவைக்கு
செய்முறை:
அரிசியையும், பருப்பையும் ஒன்றாக கலந்து ஓவனில் சூடு செய்து செய்து கொள்ளவும்.அப்போது பொங்கல் வாசனையாக இருக்கும். ஓவன் பாத்திரத்தில் அரிசி, பருப்பை கலந்து தண்ணீர் ஊற்றி மூடி ஹையில் 5 நிமிடம் வைக்கவும். பின் வெளியே எடுத்து நன்கு கலந்து, மூடியை திறந்து மீடியம் அல்லது ஹையில் 15 நிமிடம் வைத்து நடுவில் ஒருமுறை எடுத்து உப்பு, கலந்து ஹையில் 5 நிமிடம் வைக்கவும். நெய்யில் முந்திரி, மிளகு, சீரகம் கறிவேப்பிலை பொரித்துபோட்டு கலந்து விட்டால் வெண்பொங்கல் ரெடி. நெய் அவரவர் தேவைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளலாம். சுவையான மணமுள்ள வெண்பொங்கல் தயார்.இஞ்சி சாதம் வேகும் சமயம் போட்டால் நன்கு வெந்து வாசனை நன்றாக இருக்கும். மிளகு, சீரகத்தை சிறிய ப்ளாஸ்டிக் கவரில் போட்டு சப்பாத்தி தேய்க்கும் குழவியில் தட்டி போட்டு பொரித்து கொள்ளலாம். முழுதாகவும் நெய்யில் பொரித்து கொள்ளலாம். அவரவர் விருப்பம்.
Friday, December 21, 2007
புளி பேஸ்ட்
தேவையான அளவு புளியை சுடுநீரில் ஊறவைத்து,மிக்ஸியில் அரைக்கவும் ஓடு, நார் எதுவும் இல்லாமல் வடிகட்டி மைக்ரோ-ஹையில் மூடாமல் 10 நிமிடம் வைத்து நடுவில் ஒரு முறை கலந்து விடவும். தேவையான உப்பை போடவும். கெட்டியாக இருக்க வேண்டும். இதுதான் புளி பேஸ்ட் ஆறியபின் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
மைக்ரோவேவ் சமையல் உப்புமா
தேவையானவை:
கோதுமை ரவை - 1 கப்
சுடு நீர் - 2.5 கப்
பெரியவெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறியதுண்டு
உப்பு - 1 ஸ்பூன்
தாளிக்க கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு, பருப்புகளை கலந்து, ஓவன் பாத்திரத்தை கொஞ்சம் மூடி, ஹையில் 2 நிமிடம் வைக்கவும். பின் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் ஹையில் வைக்கவும். பின் வெளியே எடுத்து சுடுநீர் சேர்த்து, உப்பும் சேர்த்து ரவையும் போட்டு கலந்து மூடாமல் ஹையில் 8 நிமிடம் வைக்கவும். பின் வெளியே எடுத்து கொஞ்சம் எண்ணெய், கறிவேப்பிலை, மல்லி இலை சேர்க்கவும். பின் 1 நிமிடம் ஒவனில் வைத்து எடுத்து சாப்பிடலாம்.
கோதுமை ரவை - 1 கப்
சுடு நீர் - 2.5 கப்
பெரியவெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறியதுண்டு
உப்பு - 1 ஸ்பூன்
தாளிக்க கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு, பருப்புகளை கலந்து, ஓவன் பாத்திரத்தை கொஞ்சம் மூடி, ஹையில் 2 நிமிடம் வைக்கவும். பின் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் ஹையில் வைக்கவும். பின் வெளியே எடுத்து சுடுநீர் சேர்த்து, உப்பும் சேர்த்து ரவையும் போட்டு கலந்து மூடாமல் ஹையில் 8 நிமிடம் வைக்கவும். பின் வெளியே எடுத்து கொஞ்சம் எண்ணெய், கறிவேப்பிலை, மல்லி இலை சேர்க்கவும். பின் 1 நிமிடம் ஒவனில் வைத்து எடுத்து சாப்பிடலாம்.
Tuesday, December 18, 2007
மைக்ரோவேவ் ஓவன் சமையல் டிப்ஸ்
மைக்ரோவேவ் ஓவன் சமையல் டிப்ஸ்:
1. ஓவனில் சமையலில் குறைந்த நேரத்தில் சமைக்கலாம். வைட்டமின், மற்றும் இதர சத்துக்களின் வேஸ்ட் ஆகாது. கையாள்வதும் எளிது.
2. சாதம் வைக்க குக்கரில் வைப்பதை விட அதிகமாக தண்ணீர் சேர்க்கவேண்டும். பச்சரிசி சாதம் சமைக்க ஒவனில் ,அரிசியும், தண்ணீரும் சேர்த்து ஓவனில் பாத்திரத்தை, மூடாமல் ஹையில் 5 நிமிடமும், பிறகு மூடி 15 நிமிடமும் வைக்கவும்.
3. சமைக்கும் பாத்திரத்தில் பாதி அளவு சமையல் பொருள் இருந்தால்தான் பொங்கி வழியாமல் சீராக சமைக்க முடியும். சுடு நீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவு.
4. புழுங்கல் அரிசியில் சாதம் வைக்க பச்ச்சரிசியில் வைப்பதுபோலவே நேரம் அளவு வைக்கவேண்டும்.
5. பாசுமதி அரிசியில் சமைக்கும் போது அரிசியும்,தண்ணீரும் சேர்த்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் ஹையில் வைக்கவும்.
6. பருப்பை வேகவைக்கும்போது அந்த பாத்திரத்தில் பருப்பும்,நீரும் பாதி அளவுதான் இருக்கவேண்டும். 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து வைத்தால் பொங்காது. 5 நிமிடங்களுக்கு 1 முறை வெளியே எடுத்து கலக்கிவிடவும்.
7. அதிக எண்ணெய் உபயோகபடுத்தி செய்யும் சமையலுக்கு 300 டிகிரி சென்டி கிரேட் தாங்கும் பாத்திரத்தைதான் உபயோகிக்கவேண்டும்.' மைக்ரோ-வேவ் ப்ரூஃப் ' என்று எழுதி இருக்கும் பாத்திரத்தை பார்த்து வாங்கவேண்டும்.
8. குழம்பு,மற்றும் கிரேவிகள் சமைத்தவுடன் வெளியே எடுத்தவுடன் குனிந்து பார்க்ககூடாது. அதிக சூட்டின் காரணமாக முகத்தில் படும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.
9. மூடியைத் திறக்கும் சமயம் மிகவும் கவனமாக மெதுவாக கொஞ்சம், கொஞ்சமாக திறக்கவும். அவசரமாக திறக்கும் சமயம் நீராவி வெளிவரும்போது காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.
10. ஓவனில் இருந்து பாத்திரத்தை வெறும் கைகளால் எடுக்ககூடாது.க்ளவுஸ் [அ] பிடித் துணியை பிடித்தோதான் எடுக்க வேண்டும்.ஏனெனில் ஓவனில் அலைகள் அதிகமாக இருக்கும்.கை சிறிது தவறினாலும் காயம் ஏற்படும்.
11. ஒவ்வொரு அவனிலும் ஒவ்வொரு மாதிரியான மின்சக்தியின் அளவுகள் குறிக்கபட்டு இருக்கும். அதில் இருக்கும் குறிப்பீட்டு முறையை படித்து புரிந்து கொண்ட பிறகே ஓவனை பயன்படுத்த வேண்டும்.
12. கேஸ்ஸில் சமைப்பதுபோலவே 1,2,3,4,5. இருப்பதுபோல் ஓவனிலும் மின் சக்தி 100 '/. 75 ./. 50 ./. 25 ./. என்று உள்ளன. அதிலும் ஓவனுக்கு ஓவன் மின் சக்தி குறியீடுகள் வித்யாசம் இருக்கும்.அதனால் நாம் உபயோகபடுத்தும் உணவின் அளவு, அதன் தன்மை, ஈரப்பதம் ஆகியவற்றை பொருத்தும் சமைக்கும் நேரம் வித்யாசப்படும்.
13. சப்பாத்திகளை மறுபடியும் சூடுசெய்யவேண்டுமானால் அவற்றை சுத்தமான துணியில் சுற்றி 30, முதல் 30 வினாடிகள் வைக்கவும். இட்லிகளை மறு சூடு செய்ய இட்லிகளை நீரில் நனைத்து அவன் பாத்திரத்தில் போட்டு மூடி, 10, 15 நிமிடம் வைக்கவும்.
14. உப்புமா, சாதம், பொரியலோ, பிரியாணியோ மறுசூடு செய்ய விரும்பினால் அவனில் வைக்கும் பாத்திரத்தில் அதை போட்டு சிறிதளவு நீரைத் தளித்து சூடு செய்தால் வறண்டு போகாமலும், அப்போதுதான் செய்தது போல் இருக்கும்.
15. ஒவனுக்கு பாத்திரங்கள் வாங்கும்போது அதற்காகவே தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் மைக்ரோ-சேஃப் என்று போட்டு இருந்தால் அவற்றை மறு சூடு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றையும் 3 நிமிடங்களுக்கு மேல் ஓவனில் வைக்க கூடாது. 110 டிகிரி சென்டிகிரேட் வரை தாங்கும் என்று கூறி கடைகளில் விற்கப்படும் பாத்திரங்களை வெறும் தண்ணீரில் வேகவைக்கும் உணவு பொருள்களை மட்டுமே தயாரிக்க முடியும்.
16. ஓவனில் உள்ள சுழலும் தட்டின் ஓரங்களில் பாத்திரத்தை வைத்து சமைத்தால் சீக்கிரம் உணவு சமைக்கப்ப்டும். உலோகபாத்திரங்களை ஓவனில் வைத்து சமைக்ககூடாது. ஏனெனில் அந்த உலோகத்தில் மைக்ரோ அலைகள் ஊடுருவ முடியாது. அது தவிர கண்ணாடிபோல் பிரதிபலித்து,ஓவனின் உட்புற உலோக தகட்டில் பட்டு பக்க விளைவுகள் ஏற்படும்.
17. அப்பளம் சுடும்போது, அப்பளத்தை சிறியதாக ஒடித்து கூரான முனை சுழலும் தட்டின் நடுபாகத்தை பார்ப்பதுபோல் வைத்தால் அப்பளம் சீராக சுடும். ஒன்றன் மேல் ஒன்றாக கூட வைத்து சுடலாம்.ஓவனில் வைக்கும் பாத்திரத்தை அலுமினியம் ஃபாயிலினால் முழுவதுமாக மூடி வைக்க கூடாது. அதிக அளவு வேககூடாது என்ற பகுதியை மட்டும் ஃபாயிலினால் மூட வேண்டும். அந்த அலுமினியம் ஃபாயில் ஓவனின் உட்புற உலோகதகடு உள்ள எந்த பாகத்தையும் தொடகூடாது. அப்படி தொட்டுகொண்டு இருந்தால் ஒவன் சீக்கிரம் ரிப்பேராகிவிடும். அதனால் தீ விபத்தும் ஏற்படலாம்.
18. உப்புமா செய்யும் போது, மிக குறைந்த எண்ணெயில் தயாரித்தபின், வெளியே எடுத்தபிறகு தேவையான எண்ணெய்ச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வைத்து எடுக்கவும். எண்ணெயின் கொதிநிலை 300 டிகிரி சென்டிகிரேட் என்பதால் முதலிலேயே முழு எண்ணெய் சேர்க்ககூடாது.
19. காய்களை ஒரே அளவாக நறுக்கிகொண்டுதான் வேகவைக்கவேண்டும். வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும். உப்பை முதலிலேயே சேர்த்தால் காய்கள் வறண்டுவிடும்.ஆதலால் வெந்தபின்புதான் உப்பு சேர்த்து சமைக்க வேண்டும்.
20. உருளைக்கிழங்கு, கத்தரிக்காய்,சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்ற தோல் தடிமனான காய்களை முள் கரண்டியால் குத்தியோ, அல்லது துண்டாகவோ செய்துதான் ஓவனில் வைக்க வேண்டும்.தோலுடன் கூடிய நிலக்கடலையை வேகவைக்க அது முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மைக்ரோ-ஹையில் 10 நிமிடம்மூடி வைக்கவும். பின் வெளியே எடுத்து உப்பு போட்டு 5 நிமிடங்கள் ஊறியபின் வடியவிட்டு சாப்பிடவும்.
21. ஓவனின் உள் பக்கத்தையும்,வெளிபக்கத்தையும் துடைத்து சுத்தமாக ஈர துணியால் துடைக்கவும். அதிக நாட்கள் உழைக்கும். மைக்ரோவேவ் சமையலில் உள்ளே வைக்க அகன்ற பாத்திரங்களையே உபயோகிக்க வேண்டும்.
1. ஓவனில் சமையலில் குறைந்த நேரத்தில் சமைக்கலாம். வைட்டமின், மற்றும் இதர சத்துக்களின் வேஸ்ட் ஆகாது. கையாள்வதும் எளிது.
2. சாதம் வைக்க குக்கரில் வைப்பதை விட அதிகமாக தண்ணீர் சேர்க்கவேண்டும். பச்சரிசி சாதம் சமைக்க ஒவனில் ,அரிசியும், தண்ணீரும் சேர்த்து ஓவனில் பாத்திரத்தை, மூடாமல் ஹையில் 5 நிமிடமும், பிறகு மூடி 15 நிமிடமும் வைக்கவும்.
3. சமைக்கும் பாத்திரத்தில் பாதி அளவு சமையல் பொருள் இருந்தால்தான் பொங்கி வழியாமல் சீராக சமைக்க முடியும். சுடு நீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவு.
4. புழுங்கல் அரிசியில் சாதம் வைக்க பச்ச்சரிசியில் வைப்பதுபோலவே நேரம் அளவு வைக்கவேண்டும்.
5. பாசுமதி அரிசியில் சமைக்கும் போது அரிசியும்,தண்ணீரும் சேர்த்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் ஹையில் வைக்கவும்.
6. பருப்பை வேகவைக்கும்போது அந்த பாத்திரத்தில் பருப்பும்,நீரும் பாதி அளவுதான் இருக்கவேண்டும். 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து வைத்தால் பொங்காது. 5 நிமிடங்களுக்கு 1 முறை வெளியே எடுத்து கலக்கிவிடவும்.
7. அதிக எண்ணெய் உபயோகபடுத்தி செய்யும் சமையலுக்கு 300 டிகிரி சென்டி கிரேட் தாங்கும் பாத்திரத்தைதான் உபயோகிக்கவேண்டும்.' மைக்ரோ-வேவ் ப்ரூஃப் ' என்று எழுதி இருக்கும் பாத்திரத்தை பார்த்து வாங்கவேண்டும்.
8. குழம்பு,மற்றும் கிரேவிகள் சமைத்தவுடன் வெளியே எடுத்தவுடன் குனிந்து பார்க்ககூடாது. அதிக சூட்டின் காரணமாக முகத்தில் படும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.
9. மூடியைத் திறக்கும் சமயம் மிகவும் கவனமாக மெதுவாக கொஞ்சம், கொஞ்சமாக திறக்கவும். அவசரமாக திறக்கும் சமயம் நீராவி வெளிவரும்போது காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.
10. ஓவனில் இருந்து பாத்திரத்தை வெறும் கைகளால் எடுக்ககூடாது.க்ளவுஸ் [அ] பிடித் துணியை பிடித்தோதான் எடுக்க வேண்டும்.ஏனெனில் ஓவனில் அலைகள் அதிகமாக இருக்கும்.கை சிறிது தவறினாலும் காயம் ஏற்படும்.
11. ஒவ்வொரு அவனிலும் ஒவ்வொரு மாதிரியான மின்சக்தியின் அளவுகள் குறிக்கபட்டு இருக்கும். அதில் இருக்கும் குறிப்பீட்டு முறையை படித்து புரிந்து கொண்ட பிறகே ஓவனை பயன்படுத்த வேண்டும்.
12. கேஸ்ஸில் சமைப்பதுபோலவே 1,2,3,4,5. இருப்பதுபோல் ஓவனிலும் மின் சக்தி 100 '/. 75 ./. 50 ./. 25 ./. என்று உள்ளன. அதிலும் ஓவனுக்கு ஓவன் மின் சக்தி குறியீடுகள் வித்யாசம் இருக்கும்.அதனால் நாம் உபயோகபடுத்தும் உணவின் அளவு, அதன் தன்மை, ஈரப்பதம் ஆகியவற்றை பொருத்தும் சமைக்கும் நேரம் வித்யாசப்படும்.
13. சப்பாத்திகளை மறுபடியும் சூடுசெய்யவேண்டுமானால் அவற்றை சுத்தமான துணியில் சுற்றி 30, முதல் 30 வினாடிகள் வைக்கவும். இட்லிகளை மறு சூடு செய்ய இட்லிகளை நீரில் நனைத்து அவன் பாத்திரத்தில் போட்டு மூடி, 10, 15 நிமிடம் வைக்கவும்.
14. உப்புமா, சாதம், பொரியலோ, பிரியாணியோ மறுசூடு செய்ய விரும்பினால் அவனில் வைக்கும் பாத்திரத்தில் அதை போட்டு சிறிதளவு நீரைத் தளித்து சூடு செய்தால் வறண்டு போகாமலும், அப்போதுதான் செய்தது போல் இருக்கும்.
15. ஒவனுக்கு பாத்திரங்கள் வாங்கும்போது அதற்காகவே தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் மைக்ரோ-சேஃப் என்று போட்டு இருந்தால் அவற்றை மறு சூடு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றையும் 3 நிமிடங்களுக்கு மேல் ஓவனில் வைக்க கூடாது. 110 டிகிரி சென்டிகிரேட் வரை தாங்கும் என்று கூறி கடைகளில் விற்கப்படும் பாத்திரங்களை வெறும் தண்ணீரில் வேகவைக்கும் உணவு பொருள்களை மட்டுமே தயாரிக்க முடியும்.
16. ஓவனில் உள்ள சுழலும் தட்டின் ஓரங்களில் பாத்திரத்தை வைத்து சமைத்தால் சீக்கிரம் உணவு சமைக்கப்ப்டும். உலோகபாத்திரங்களை ஓவனில் வைத்து சமைக்ககூடாது. ஏனெனில் அந்த உலோகத்தில் மைக்ரோ அலைகள் ஊடுருவ முடியாது. அது தவிர கண்ணாடிபோல் பிரதிபலித்து,ஓவனின் உட்புற உலோக தகட்டில் பட்டு பக்க விளைவுகள் ஏற்படும்.
17. அப்பளம் சுடும்போது, அப்பளத்தை சிறியதாக ஒடித்து கூரான முனை சுழலும் தட்டின் நடுபாகத்தை பார்ப்பதுபோல் வைத்தால் அப்பளம் சீராக சுடும். ஒன்றன் மேல் ஒன்றாக கூட வைத்து சுடலாம்.ஓவனில் வைக்கும் பாத்திரத்தை அலுமினியம் ஃபாயிலினால் முழுவதுமாக மூடி வைக்க கூடாது. அதிக அளவு வேககூடாது என்ற பகுதியை மட்டும் ஃபாயிலினால் மூட வேண்டும். அந்த அலுமினியம் ஃபாயில் ஓவனின் உட்புற உலோகதகடு உள்ள எந்த பாகத்தையும் தொடகூடாது. அப்படி தொட்டுகொண்டு இருந்தால் ஒவன் சீக்கிரம் ரிப்பேராகிவிடும். அதனால் தீ விபத்தும் ஏற்படலாம்.
18. உப்புமா செய்யும் போது, மிக குறைந்த எண்ணெயில் தயாரித்தபின், வெளியே எடுத்தபிறகு தேவையான எண்ணெய்ச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வைத்து எடுக்கவும். எண்ணெயின் கொதிநிலை 300 டிகிரி சென்டிகிரேட் என்பதால் முதலிலேயே முழு எண்ணெய் சேர்க்ககூடாது.
19. காய்களை ஒரே அளவாக நறுக்கிகொண்டுதான் வேகவைக்கவேண்டும். வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும். உப்பை முதலிலேயே சேர்த்தால் காய்கள் வறண்டுவிடும்.ஆதலால் வெந்தபின்புதான் உப்பு சேர்த்து சமைக்க வேண்டும்.
20. உருளைக்கிழங்கு, கத்தரிக்காய்,சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்ற தோல் தடிமனான காய்களை முள் கரண்டியால் குத்தியோ, அல்லது துண்டாகவோ செய்துதான் ஓவனில் வைக்க வேண்டும்.தோலுடன் கூடிய நிலக்கடலையை வேகவைக்க அது முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மைக்ரோ-ஹையில் 10 நிமிடம்மூடி வைக்கவும். பின் வெளியே எடுத்து உப்பு போட்டு 5 நிமிடங்கள் ஊறியபின் வடியவிட்டு சாப்பிடவும்.
21. ஓவனின் உள் பக்கத்தையும்,வெளிபக்கத்தையும் துடைத்து சுத்தமாக ஈர துணியால் துடைக்கவும். அதிக நாட்கள் உழைக்கும். மைக்ரோவேவ் சமையலில் உள்ளே வைக்க அகன்ற பாத்திரங்களையே உபயோகிக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)