Wednesday, January 9, 2008

இஞ்சி ரசம்

தேவையான பொருட்கள்; இளசாக இருக்கும் இஞ்சி- 50 கிராம்
தக்காளி-2
எலுமிச்சை பழம்- பெரியதாக இருந்தால்-1 சிறியதாக இருந்தால்-2
பருப்பு தண்ணீர்-2 கப்
ரசப்பொடி-1[அ] 1 -1/2ஸ்பூன்
பெருங்காயம்-1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு, கறிவேப்பிலை, மல்லி இலை

செய்முறை: இஞ்சியை துருவியில் துருவி சுடுநீர் ஊற்றி மூடி வைக்கவும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதில் கொஞ்சம் கல் உப்புபோட்டு வைக்கவும்.
ஏனெனில் சாறு கசக்காமல் இருக்கும். பருப்பு தண்ணீரில் தக்காளியை பொடியாக நறுக்கி கையால் பிழிந்து சிறிது உப்பு மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.அதனுடன் ரசபொடியையும் போடவும். 2 நிமிடம் கழித்து இஞ்சி சாறு,
எலுமிச்சை சாறு ஊற்றி தேவையான தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்தவுடன்
இறக்கி வைத்து, 1 ஸ்பூன் நெய்யில் கடுகு,பெருங்காயம், கறிவேப்பிலை,மல்லி இலை போட்டு விடவும்.இன்னும் காரம் தேவைஎனில் 2 பச்சை மிளகாயை கீறி போட்டு கொள்ளலாம். இந்த இஞ்சி ரசம் அஜீரணம்,வாயு,பித்தம் ஏற்பட்டால் அடிக்கடி செய்து சாப்பிடவும்.


No comments:

Post a Comment