Tuesday, January 8, 2008

தக்காளி ரசம்

தேவையான பொருள்கள்: தக்காளி-5 நன்கு பழுத்து இருக்கவேண்டும்
புளி தண்ணீர்- 1 கப்
பருப்பு தண்ணீர்- 2 கப்
பச்சை மிளகாய் -4
மஞ்சள்தூள்- கொஞ்சம்
ரசப்பொடி- 1 ஸ்பூன்,
பெருங்காயம்- கொஞ்சம்
உப்பு தேவையானது
கடுகு-1/4 ஸ்பூன்

செய்முறை: புளி தண்ணீரில் தக்காளியை போட்டு நன்கு கரைத்து, உப்பு, மஞ்சள்தூள் கொஞ்ச நேரம் கொதிக்க விடவும்.கொஞ்சம் சுண்டிய பின் பருப்பு தண்ணீர் ஊற்றி, கறிவேப்பிலை,மல்லி இலை போட்டு நுரைத்து வந்தவுடன் இறக்கி விட்டு,நெய்யில் கடுகு தாளித்து,பின் அதிலேயே ரசபொடியை பொரித்து ரசத்தில் கலந்து விடவும். சுவையான சூப்பரான தக்காளி ரசம் தயார்.

No comments:

Post a Comment