Wednesday, January 9, 2008

அரைத்து விட்ட ரசம்

தேவையான பொருள்கள்; துவரம்ப் பருப்பு- 1/2 ஸ்பூன்
மிளகு, சீரகம், தனியா- தலா- 1/4 ஸ்பூன்
கட்டி பெருங்காயம்- சிறியக் கட்டி
தக்காளி- 2
புளி விழுது- 1 ஸ்பூன்
உப்பு தேவையானது,கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்.

செய்முறை: துவரம்ப் பருப்பு,மிளகு,சீரகம், தனியா,பெருங்காயம், இவற்றை சிவக்க வறுத்து, அதனுடன் தக்காளியையும் சுருள வதக்கி உப்பும் சேர்த்து ஆறியபின் மிக்ஸியில் மையாக அரைத்துகொண்டு, அதனுடன் புளி விழுது சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். புளி விழுது இல்லையெனில் ,தேவையான புளியை சுடுநீரில் ஊற வைத்து அரைத்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் கடுகு,போட்டு வெடித்ததும் அரைத்து வைத்துள்ளதை போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நுரைத்துவந்தவுடன் இறக்கி விடவும். கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு சாப்பிடவும்.இதில் எல்லா பொருட்களையும் வறுத்து செய்வதால் அதிக நேரம் கொதிக்க வேண்டாம்.



























No comments:

Post a Comment