Tuesday, January 8, 2008

குளிருக்கு இதமாக ரசம் வகைகள்- கொத்துமல்லி ரசம்.

தேவையான பொருள்கள்; கொத்துமல்லி- 1 சிறிய கட்டு
வெந்த பருப்பு தண்ணீர்- 1- கப்
தக்காளி - 2[அ] 3
ரசப்பொடி[அ] மிளகு சீரகம்- தலா- 1 ஸ்பூன்
பொடிசெய்து கொள்ளவும்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- கொஞ்சம்
தாளிக்க- கடுகு, சீரகம்.

செய்முறை: கொத்துமல்லியை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி மிக்ஸியில் அரைத்து அதன் சாறை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து 1- ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, மஞ்சள்தூள் போட்டு, ரசபொடி[அ] மிளகு,சீரகபொடியை போட்டு பொரிந்தபின் தக்காளியை போட்டு வதக்கவும். தேவையான உப்பை போடவும். சிறிது நேரம் கழித்து பருப்பு தண்ணீயை ஊற்றி கொதிக்கவிட்டு, வடிகட்டி வைத்துள்ள மல்லி இலை சாறை ஊற்றி நுரைத்து வந்தவுடன் இறக்கி விடவும். குளிருக்கு இதமாக இந்த ரசத்தை குடிக்கலாம். சாப்பாட்டிற்க்கு தேவைஎனில் 1 எலுமிச்சைபழம் பிழிந்து கொள்ளவும்.உடலுக்கு கெடுதல் செய்யாது.

No comments:

Post a Comment