Thursday, January 10, 2008

பருப்பு ரசம்

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு -1/4 கப்
புளி- எலுமிச்சை அளவு
தக்காளி- 1
ரசப்பொடி- 1 ஸ்பூன்
கடா பெருங்காயம்-கொஞ்சம்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
தாளிக்க கடுகு

செய்முறை:
இந்த ரசம் நாம் எல்லோரு, செய்ய கூடியதுதான்.
துவரம்ப்பருப்பை நன்கு குழைய வேக வைத்து கொள்ளவும். அப்போதுதான ரசம் வாசனையாக இருக்கும். சரியாக வேகவில்லை எனில் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் கரைந்துவிடும். புளியை சுடுநீரில் ஊற வைத்து கொள்ளவும்.சுடுநீரில் ஊறவைப்பதால் வேஸ்ட் ஆகாது. சீக்கிரம் கரையும். புளியை கரைத்து வடிகட்டி அதனுடன் தக்காளியை கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். உப்பு,மஞ்சள்தூள், ரசப்பொடி,போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு, வெந்த பருப்பை நன்கு கரைத்து அதில் ஊற்றவும்.பருப்பு வேகவைக்கும்போதும் கொஞ்சம் மஞ்சள்தூள் போடலாம். உப்பு, புளிப்பு பார்த்து தேவையான தண்ணீர் ஊற்றவும். நுரைத்து வந்த போது இறக்கி, நெய்யில், கடுகு,கடா பெருங்காயம் தாளிக்கவும். கறிவேப்பிலை, மல்லி இலையை பொடியாக நறுக்கி போடவும். சூப்பரான பருப்பு ரசம் ரெடி. காரம் கொஞ்சம் தேவைஎனில் கடுகு தாளிக்கும் போது மிளகுபொடியை பொரித்து போடவும்.

No comments:

Post a Comment