Monday, November 5, 2007

பிஸிபேளா பாத் பொடி

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு- 1 கப்,
தனியா[மல்லி] - 2 கப், துவரம் பருப்பு-3 ஸ்பூன்,
வெந்தயம்- 1 ஸ்பூன்,
கட்டி பெருங்காயம்- 10 கிராம்,
வர மிளகாய்- 150 கிராம்,
உளுத்தம்பருப்பு- 1/2 ஸ்பூன்
உப்பு- 3 ஸ்பூன்,
புளி- 200 கிராம்,
கொப்பரை தேங்காய்- 1 மூடி.
மஞ்சள் தூள்- 10 கிராம்,

செய்முறை:

புளியை சுத்தம் செய்து சிறியதாக எடுத்து வைக்கவும். மேலே கூறி உள்ள பொருட்கள் அனைத்தையும் தனி,தனியாக வறுத்து, பின் எல்லாவற்றையம் கலந்து மீண்டும் கலந்து வறுத்து[ பொன் நிறமாக] கடைசியில் புளியையும் வறுத்து கொண்டு ஆற வைத்து மிக்ஸியில் பவுடராக பொடி செய்து கொள்ளவும். இதுதான் பிஸிபேளாபாத் பொடி. அரிசியும்,பருப்பும் வேக வைத்து, [இதற்கு தகுந்த உப்பு போடவும்] இந்த பொடியை கலந்து, கொஞ்சம் நல்லெண்ணெய் கலந்து விட்டால் பிஸிபேளாபாத் ரெடி.மசால் வாசனை தேவை படுபவர்கள் 1,பட்டை, லவங்கம்-2, முந்திரி-5 கடைசியில் வறுத்து போட்டு கொள்ளலாம். நல்ல மணத்துடன், சூப்பராக இருக்கும் இந்த பாத்.

No comments:

Post a Comment