Monday, November 5, 2007

தனியா பொடி

தேவையான பொருட்கள்:

தனியா[ மல்லி விதை]- 1-கப்
உளுத்தம்பருப்பு- 2ஸ்பூன்,
கடலைபருப்பு- 2 ஸ்பூன்,
துவரம்பருப்பு-1/2 ஸ்பூன்,
மிளகாய்- 20,
மிளகு-1/2 ஸ்பூன்,
புளி- சிறிய எலுமிச்சை அளவு, சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்,
உப்பு தேவையான அளவு.

செய்முறை:

மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் எண்ணெய் விடாமல் தனிதனியாக பொன் கலரில் வறுத்து, கடைசியில் கல் உப்பையும் வறுத்து, புளியையும் சிறியதாக பிய்த்து வறுத்து கொள்ளவும். நன்கு ஆறியபின் கரகரவென்று பொடிசெய்து ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும்.

இந்த பொடியில் தனியாவை அதிகம் சேர்த்து பருப்பு வகைகளை மிகவும் கொஞ்சமாக போடனும். தனியா பித்தத்தை தணிக்கும். நன்கு பசி எடுக்கும். டூी செல்பவர்கள் இந்த பொடியில் நல்லெண்ணெய் கலந்து அதில் சாதத்தை கலந்து எடுத்து சென்றால் 2 நாட்கள் வரை சாதம் கெடாது. சாதம் கலக்கும் போது உப்பு சேர்த்து கொள்ளவேண்டும். எளிதில் செய்து விடலாம்.

No comments:

Post a Comment