Monday, January 28, 2008

பொடி மாஸ்

கடலைப்பருப்பு [ அ] பட்டாணிப்பருப்பு [அ] நமக்கு பிடித்தபருப்பை நன்கு ஊற வைத்து அதனுடன் வரமிளகாய்[அ] பச்சை மிளகாய் உப்பு, பெருங்காயதூள் சேர்த்து வடைக்கு அரைப்பது போல் கெட்டியாக அரைத்து இட்லி வேக வைப்பதுபோல் வேக வைத்து உதிர்த்து வைத்து கொண்டு எந்த காய்களாக இருந்தாலும் பொடியாக நறுக்கி வெந்தபின் கடைசியில் இந்த பருப்பு பொடிமாஸை போட்டு நன்கு கலந்து இறக்கினால் இதுதான் பொடிமாஸ்.

இதை தேங்காய் சேர்க்கவேண்டும் என்று விரும்பினால் பருப்பை அரைத்து கடைசியில் தேங்காயை துருவி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து கொள்ளலாம். ஆனால் பொடிமாஸில் வெறும் பருப்பை மட்டும் சேர்த்தால்தான் சுவையாக இருக்கும். கடைசியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் தாளித்தும் போடலாம். எந்த வகை கீரைகளிலும் செய்யலாம்.

No comments:

Post a Comment