Wednesday, November 14, 2007

சீரகப் பொடி

தேவையானவை:

சீரகம் - 1 கப்
பெரிய எலுமிச்சை பழம் - 5
இஞ்சி - 50 கிராம்
மிளகு - 25 கிராம்
பனங்கற்கண்டு - 100 கிராம்
சிறிய கட்டி - பெருங்காயம்
உப்பு - தேவையானது

செய்முறை:

இஞ்சியை தோல் சீவி நன்கு சுத்தம் செய்து துறுவி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். எலுமிச்சைபழத்தை பிழிந்து சாறு எடுத்து இந்த சாறுடன் இஞ்சி சாறையும் கலந்து உப்பும்போட்டு மிளகு, சிரகத்தை ஊற வைக்கவும். இந்த இரு சாறுகளிலும் நன்கு முழ்கி ஊற வேண்டும். அடிக்கடி நன்குகலந்து, சாறுகளில் நன்றாக ஊறியபின் தினமும் எடுத்து நன்றாக வெயிலில் காய வைத்து சாறு இருக்கும் வரை இரவில் ஊறவைத்து காலையில் வெயிலில் காய வைக்கவேண்டும். வெயில் படுவதால் விட்டமின் C கிடைக்கும் தேவையானால் இதனுடன் 2 -ஸ்பூன் கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு எண்ணெய் விடாமல் வறுத்து, ஆறியபின் ஒன்றாக கலந்து பொடி செய்து கொண்டால் சீரகபொடி தயார். இந்த பொடியை சூடான சாதத்தில் பிசைந்து தேவையானால் நெய் ஊற்றி கொள்ளலாம்] சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். ஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிறு சம்பந்தபட்ட அனைத்து உபாதைகளுக்கும் இந்த பொடி நல்ல மருந்தாகும். இதே பொடியில் மிளகு, உப்பு, பெருங்காயம் சேர்க்கும் முன்பு, பனங்கற்கண்டு, 4 ஏலக்காய் போட்டு பொடி செய்து கலந்து கொள்ளலாம்.

இனிப்பு பிடித்தவர்கள் இதை சாப்பிடலாம். காரம் பிடித்தவரகள் அந்த பொடியை சாப்பிடலாம். இரண்டுமே நல்லா இருக்கும். பித்தம், ஏப்பம், தலைசுற்றல் போன்றவற்றையும் குணபடுத்தும் ஆற்றல் இந்த
பொடிக்கு உண்டு.

No comments:

Post a Comment