Tuesday, May 6, 2008

பலவகை இட்லி

முதலில் இட்லி பூப்போல் வர இட்லி மாவில் [இட்லி ஊற்றும் போது தேவையான மாவை தனியாக எடுத்து கொள்ள வேண்டும் அதில் கொஞ்சம் [Eno salt ] போட்டு மாவை நன்கு கலந்து இட்லி ஊற்றினால் மிகவும் சாப்டாக வரும். ஆனால் ஒவ்வொரு முறையும் இட்லி ஊற்றும் சமயம் Eno salt கலக்க வேண்டும். மாவின் பதம் மாறி போயிருந்தால் கூட இட்லி மென்மையாக இருக்கும்.

1. தயிர் இட்லி: இட்லி தேவையானதை செய்து கொண்டு, கொஞ்சம் தேங்காய், பச்சை மிளகாய், உப்பு போட்டு அரைத்து,தேவையான தயிரில் கலந்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு,கொஞ்சம் பெருங்காயம், தாளித்து கறிவேப்பிலை போட்டு அதில் இட்லிகளை போட்டு மேலே மல்லி இலை போட்டு சாப்பிடவும்.

2.பொடி இட்லி: தேவையான இட்லிகளை ஊற்றி கொண்டு அந்த இட்லிகளை ஒரு தட்டில் எடுத்து வைத்து மேலே கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி, அதன் மேல் இட்லி பொடியை தூவி கொஞ்சம் நேரம் ஊறியபின் சாப்பிடவும்.

3.காய்கறி இட்லி: தேவையான காய்களை பொடியாக நறுக்கி கொண்டு வாணலியில் கடுகு,உளுத்தம்பருப்பு,1 பட்டை, 2 லவங்கம்,4 பல்பூண்டு,கொஞ்சம் பொடியாக நறுக்கிய இஞ்சி,பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி,பின் காய்களை போட்டு வதக்கி [ பொடியாக நறுக்குவதால் சீக்கிரம் வெந்துவிடும்.] 1 நிமிடம் போதும் காய்கள் நிறம் மாறாமல் இருக்கும்.பின் உப்பு போட்டு,
இட்லிகள தேவையான ஷேப்பில் கட் செய்து போட்டு கொஞ்சம் தேவையான எண்ணெய் ஊற்றி வதக்கவும். இப்படி செய்யும் போது அது இட்லிமாதிரியே தெரியாது. ஏதோ புது வகை டிஷ் போல் இருக்கும்.

4.தக்காளி இட்லி: நன்கு பழுத்த தக்காளிகளை பொடியாக நறுக்கி கொண்டு, வாணலியில் கடுகு,1-ப்ட்டை, 3 லவங்கம்-1 ஏலக்காய்-4 பச்சைமிளகாய்பொடியாக நறுக்கி கொள்ளவும் இல்லையெனில் நீளமாக கீற்றி கொள்ளவும். உப்பு போட்டு நன்கு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வதக்கி,1/4 ஸ்பூன் கறிமசால்பொடி சேர்த்து இட்லியை தேவையான ஷேப்பில் கட் செய்து போட்டு 1 நிமிடம் வதக்கினால் போதும். தக்காளியை நன்கு வதக்கியபின் இட்லியை சேர்க்கவும்.பின் கறிவேப்பிலை, மல்லி இலை தூவி விடவும்.

5.இட்லி மஞ்சூரியன்: இட்லிகளை தேவையான ஷேப்பில் கட் செய்து வைக்கவும். அதில் 1-ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது,கார்ன்ஃப்ளார் கொஞ்சம்,அரிசிமாவு கொஞ்சம்,மிளகாய்தூள்கொஞ்சம்[காரம் தேவையான அளவு] உப்பு,கரம் மசாலாபொடி கொஞ்சம் இவை எல்லாவற்றையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு அதில் கட் செய்து வைத்துள்ள இட்லியை மாவில் தோய்த்து [டிப் செய்து ]
பொரித்து எடுக்கவும்.

6.மிளகு இட்லி: இதற்கு மினி இட்லியாக ஊற்றி கொண்டு, வாணலியில் கடுகு, தாளித்து,இட்லிகளை போட்டு வதக்கி, 1- ஸ்பூன் நெய் சேர்த்து மிளகுதூள், சீரக தூள், உப்பு போட்டு வதக்கினால் பெப்பர் இட்லி தயார்.அதன் மேல் காராபூந்தியை தூவி சாப்பிடலாம்.

7.பிரியாணி இட்லி: தேவையான காய்களை மெல்லியதாக நீளமாக நறுக்கி, கொண்டு, எண்ணெய் காய வைத்து 2-பட்டை, 2 லவங்கம்,2- ஏலக்காய்-பிரிஞ்சி இலை,பச்சைமிளகாய் நீளமாக கீறி கொள்ளவும்.இஞ்சி, பூண்டு விழுது-2 ஸ்பூன் உப்பு கொஞ்சம் போட்டு வதக்கி[இதுக்கு கொஞ்சம் வெண்ணெய் போட்டால் வாசனையாக இருக்கும்.] பெரிய வெங்காயத்தை மெல்லியதாக நீளமாக நறுக்கி வதக்கியபின் காய்களைபோட்டு வதக்கி,இட்லிகளை தேவையான படி கட் செய்து அதில் போட்டு வதக்கினால் பிரியாணி இட்லி தயார்.மேலே மல்லி இலை தூவிகொள்ளவும்.

8. சாம்பார் இட்லி: 1-பெரிய வெங்காயம், 4- தக்காளி, தேவையான சாம்பார்பொடி, கொஞ்சம்,மஞ்சள்தூள்,உப்பு , 1 ஸ்பூன் பொட்டுகடலை போட்டு 2-நிமிடம் வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அரைத்ததை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சிறிய வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டால் அதிரடி சாம்பார் தயார். நன்கு சுவையாக இருக்கும்.இதில் இட்லிகளை போட்டு ஊறவைத்தும் சாப்பிடலாம்.தொட்டும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment