Thursday, May 8, 2008

ரெடி மாவு தயாரிக்க

ரெடி மாவு தயாரிக்க: கடலை பருப்பு- 1/2 கிலோ, அரிசி- 100 கிராம், வரமிளகாய்-20, கல் உப்பு- கொஞ்சம், கட்டி பெருங்காயம்-சிறியது. இவற்றை வெய்யிலில் நன்கு காய வைத்து மிஷினில் அரைத்து வைத்து கொள்ளவும். தேவையான போது மாவுடன் ஒருசிட்டிகை- சமையல் சோடா கலந்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொண்டு செய்யவும்.காரம் தேவை எனில் மிளகாய் பொடி கலந்து கொள்ளவும்.

மெதுவடை செய்ய: உளுந்து 1 - கிலோ, புழுங்கல் அரிசி- 250 கிராம், உப்பு கொஞ்சம் சேர்த்து மிஷினில் அரைத்து வைத்து கொண்டு தேவையான போது மாவை எடுத்து சப்பாத்திக்கு பிசைவதுபோல் கெட்டியாக பிசைந்து 1/2 மணி நேரம் ஊற விட்டு, அதனுடன் உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி போட்டு
கறிவேப்பிலை, மல்லி இலை, கேரட்[ தேவையானால்] சேர்த்து வடைகளாக பொரித்து எடுக்கவும். புழுங்கல் அரிசி போடுவதால் வடை மொறு, மொறுப்பாகவும், சாப்டாகவும் இருக்கும். எண்ணெயும் அதிகம் குடிக்காது.

போண்டா மிக்ஸ்: கடலைபருப்பு- 1 கிலோ, புழுங்கல் அரிசி-100 கிராம், வர மிளகாய்-20 கொஞ்சம் கல் உப்பு சேர்த்து நன்கு காய வைத்து மிஷினில் அரைத்து கொள்ளவும். தேவையான மாவை எடுத்து 2 ஸ்பூன் எண்ணெய் காயவிட்டு மாவில் ஊற்றி,பெரியவெங்காயம் பொடியாக நறுக்கி சேர்க்கவும். இஞ்சி, பிடித்தமான கீரை ஏதாவது சேர்த்து தளர்வாக பிசைந்து 1நிமிடம் ஊற விடவும். உப்பு போட மறக்க வேண்டாம். மாவை கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து சூடான எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

புளியோதரை மிக்ஸ்: புளியை சுடு நீரில் ஊறவைக்கவும்.இதனால் பேஸ்ட் அதிகம் வரும்.வேஸ்ட ஆகாது. புளி-1/2 கிலோ, கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி 1/2 ஸ்பூன் வெந்தயம், 4 ஸ்பூன் கடலைபருப்பு, 2 - ஸ்பூன் உளுத்தம்பருப்பு, தனியா-5 ஸ்பூன், வரமிளகாய்-25, கட்டி பெருங்காயம் போட்டு பொன் கலரில் வறுத்து பொடி செய்து கொண்டு,புளியை நன்கு கரைத்து கெட்டியாக சுண்டும் வரை கொதிக்க விட்டு அதில் 1/4 ஸ்பூன்- மஞ்சள்பொடி,கல் உப்பு , பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறவும்.கடைசியில் சிறிய கட்டி வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கடைசியில் 1/4 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி வைக்கவும். தேவையானபோது சாதத்தை வடித்து இந்த புளிகாய்ச்சலை போட்டு கலந்தால் புளியோதரை ரெடி.

1 comment:

  1. Hi Roshini,

    Thanks for your suggestion. I have added the widget now.

    ReplyDelete