Tuesday, May 27, 2008

அரிசி ரவை மிளகு உப்புமா

தேவையான பொருள்கள்:

பச்சரிசி [அ] புழுங்கல் அரிசி-1கப்
துவரம்பருப்பு-2 ஸ்பூன்,
கடலைபருப்பு-2 ஸ்பூன்,
சீரகம்-1/4 ஸ்பூன்,
மிளகு--1 ஸ்பூன்,
வரமிளகாய்- 4,
துறுவிய தேங்காய்- கொஞ்சம்,
உப்பு- தேவையான அளவு.
பிடித்தமான எண்ணெய்- கொஞ்சம்.

தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம் கொஞ்சம்,
கறிவேப்பிலை, மல்லி இலை- கொஞ்சம்.

செய்முறை:

அரிசி பருப்புகளை லேசாக வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்து கொள்ளவும். அதை அளந்து கொண்டு 1 கப்புக்கு, 2 கப் தண்ணீர் ஊற்றனும். கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம் போட்டு பொன் கலர் ஆனபின் தேங்காய்,உப்பு சேர்த்து வதக்கவும். ரவையின் அளவுக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்றி கொதி வரும்போது ரவையை போட்டு கட்டி தட்டாமல் கிளறி சிம்மில் மூடி வைத்து 5 நிமிடம் வேகவிட வேண்டும். நன்கு வெந்து இருக்கும். மேலே கறிவேப்பிலை, மல்லி போட்டு கலந்து சாப்பிடவும். வறுத்து செய்வதால் நல்ல வாசனையுடன் இருக்கும். ப்ரஷர் பேனில் செய்வதாக இருந்தால் 1 விசில் விட்டு இறக்கவும்.

No comments:

Post a Comment