Thursday, May 29, 2008

தக்காளி பாத்

தேவையானவை:

ரவை- 2 கிராம்,
தக்காளி- 3[அ] 5,
பெரிய வெங்காயம்-1,
இஞ்சி பொடியாக நறுக்கியது- 1/4 ஸ்பூன்,
பச்சை மிளகாய்-5,
சீரகம்- 1/4 ஸ்பூன்,
பட்டை-1, லவங்கம்-2 ஏலக்காய்-2,
மஞ்சள்பொடி- 1/4 ஸ்பூன்,
உப்பு- தேவைக்கு.

செய்முறை:

ரவை பொன் கலரில் வறுத்து கொள்ளவும். தக்காளியை சுடு நீரில் போட்டு ஆறிய பின் அரைத்து வடிகட்டி கொள்ளவும். இதனுடன் தண்ணீரும் கலந்தால் 2 பங்குதான் இருக்கனும். வாணலியில் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, லவங்க,ஏலக்காய்,மஞ்சள் பொடி, உப்பு போட்டு வதக்கி தக்காளி+ தண்ணீர் சேர்த்து கொதி வரும்போது ரவையை போட்டு கிளறவும். சிம்மில் வைத்தால் 2 நிமிடத்தில் நன்கு வெந்து விடும். மேலே குடமிளகாய், மிக்ஸர் தூவி சாப்பிடலாம். சுவையாக இருக்கும். உப்புமாவுக்கு 2 பங்கு தண்ணீர் தான் வேண்டும். அப்போதுதான் உதிராக இருக்கும்.

No comments:

Post a Comment