Thursday, May 29, 2008

அரிசி ரவை உப்புமா

தேவையானவை:

பச்சரிசி/புழுங்கல் அரிசி- 1 டம்ளர்,
துவரம் பருப்பு- 25 கிராம்,
கடலை பருப்பு- 25 கிராம்,
மிளகு- 1/2 ஸ்பூன், சீரகம்- 1/2 ஸ்பூன்,
கல் உப்பு- 1 ஸ்பூன், தேவைஎனில் சேர்த்து கொள்ளலாம்.
வர மிளகாய்-2,
எண்ணெய்- கொஞ்சம்,

செய்முறை:

மேலே கூறி உள்ள பொருட்கள் +அரிசி, பருப்புகளை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடி செய்து [ குருனையாக] கொள்ளவும். குருனை 1 பங்குக்கு 2-1/2 பங்கு தண்ணீர் வேண்டும். கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து [தேவை எனில்] 3 ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்கும் போது குருனை தூவியபடி போட்டு கட்டி தட்டாமல் கிளறவும். அடுப்பை மிதமாக எரிய விட்டு நன்கு வேக விடவும். சிறிய குக்கரில் செய்வதாக இருந்தால் ரவையை போட்டபின் மூடி வைத்து 1 விசில் வந்தவுடன் இறக்கி விடவும். மிளகு, சீரக வாசனையுடன் உப்புமா சூப்பராக இருக்கும். தேவை எனில் 1 ஸ்பூன் நெய் விட்டு கொள்ளலாம்.

No comments:

Post a Comment